செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா

Friday 29 May, 2009

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?


காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?


வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.


உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.

அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?

1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.

இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.

2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)

அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'

5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.

ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.

6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'

அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.

எப்பூடீ?

முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..

முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்

லூஸாப்பா நீங்கல்லாம்?

Tuesday 26 May, 2009

நேத்து எங்க சித்தப்பாவோட ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். என் சித்தப்பா பார்க்க அசப்பில் பைத்தியக்காரன் போல் இருப்பார். நோ.. நோ.. ஆக்சுவலி ஐ மீன் தோழமைக்குரிய பதிவர் திரு பைத்தியக்காரன் அவர்கள் போல் இருப்பார் என்று சொல்ல வந்தேன்.

எங்க சித்தப்பா சாதாரணமா நார்மலா தான் இருப்பார். ஆனா குழந்தைகளைப் பாத்தா வெறி புடிச்சுடும். (சில வகை பெண்களைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும் :-) அது வேற விஷயம்). என் சித்தப்பா ஏன் அப்படி ஆனாங்க அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா விவாகரத்து. இப்போ வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. ஆனா நேத்து ஹாஸ்பிடல்ல நான் பாத்த பையன் (பத்து வயசு இருக்கும்) ரொம்ப அப்நார்மலா பிஹேவ் பண்ணிட்டு இருந்தான். சேர் மேல ஏறி நிக்குறது. திடீர்னு வித்தியாசமான சத்தம் குடுக்குறது, பக்கத்துல இருக்குறவங்க பையை நோண்டுறது, முறைச்சுப் பாக்குற அவங்க முகத்துக்கு ரொம்ப பக்கத்துல இவன் முகத்தை கொண்டு போய் அவங்களை இமிடேட் பண்றதுனு ராவடி பண்ணிட்டு இருந்தான்.

அவனைக் கூட்டிட்டு வந்த பெரியவர்கிட்ட கம்பவுண்டர் போய் 'கொஞ்சம் உங்க பையனை பாத்துக்கோங்க ஸார்'னு புகார் பண்ணினாரு. கம்பவுண்டர் பேசி முடிக்கிற வரை இதுவரை நடந்த எல்லாத்தையும் அமைதியா பாத்துகிட்டு இருந்தவர், திடீர்னு கம்பவுண்டரைத் தள்ளி விட்டுட்டு ஓட்டமா ஓடிப்போய் அவன் தலையில நச் நச்னு குட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்ததும், சத்தமா கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு, கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு பேர் முகமுமே கொஞ்சம் டிஸ்லெக்சிக்கா தான் இருந்தது.

(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அது மேல க்ளிக்காதீங்க. அதோட சைஸே அவ்ளோ தான்.)

நான் என் சித்தப்பாகிட்ட 'இந்த ரெண்டு பேருல யார் லூசுனு கண்டுபுடி பாக்கலாம்'னு சொன்னேன். பக்கத்துல இருந்து பாத்துகிட்டிருந்த ஒரு அம்மா 'எக்ஸ்க்யூஸ் மீ'னு கேட்டாங்க. ஒரு ஆர்வத்துல நானும் அதையே அவங்ககிட்டயும் ரிப்பீட்டிட்டு வாயைக் கூட மூடல. அவங்க 'வாட் த ஹெல்' ஆச்சு போச்சுனு ஹாஸ்பிட்டலே அதிர்ற அளவு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

சத்தத்தைக் கேட்டுட்டு ஓடி வந்த அந்த so called லூஸுங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் இந்த அம்மாவோட மகனும் அப்பாவுமாம். இந்த அம்மாவுக்கு ஹிஸ்டீரியாவாம். அதாவது சின்ன விஷயத்துக்குக் கூட பயங்கரமா கோபப்பட்டு கத்துவாங்களாம். அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்க தான் அப்பாவும் புள்ளையும் இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்காங்களாம். அட கொய்யாக்களா!!

எல்லாரும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தம்மா அடங்குற மாதிரி தெரியல. ஸாரி கேட்டப்புறமும் விடாம, காது பிச்சுக்கற அளவு அம்பது டெஸிபெல்ல அலற ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துல ரத்தம் குப்புனு பாதத்துல இருந்து உச்சந்தலைக்கு ஏறி, அந்தம்மா கொறவளைய கடிச்சுடலாம்னு அவங்க மேல பாயப் போகும் போது, ஒரு நாலஞ்சு பேர் ஓடி வந்து என்னை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க. நர்ஸ் அக்கா அவங்க கைக்கு கிடைச்ச இடத்துல சதக்னு ஊசியைக் குத்திட்டாங்க.

பதறி வாயடைச்சுப் போய் நின்னுகிட்டிருந்த அந்தம்மாகிட்ட எங்க சித்தப்பா 'என் மகன் கொஞ்சம் லூசு. சாதாரணமா நார்மலா தான் இருப்பான். ஆனா சத்தமா கத்துற பெண்களைப் பாத்தா வெறி புடிச்சுடும். (குழந்தைகளைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும்:-( அது வேற விஷயம்)

அவன் ஏன் அப்படி ஆனான் அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா காதல் தோல்வி. வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க' அப்படினு சொன்னது என் காதுல விழல அல்லது காதுல விழுந்ததுனு நான் நம்ப விரும்பல.

'அந்த' குஜிலி ஆண் பதிவர் இவர்தான் - ஆதாரங்களுடன் Exclusive

Monday 25 May, 2009

முன் குறிப்பு : இது ரொம்ப சீரியஸான பதிவு. எனவே முகத்தை நாயகன் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. அவர்கள் போல சீரியஸாக வைத்துக் கொண்டு, அரிக்காவிட்டாலும் தாடையை சொறிந்து கொண்டு படிக்கவும் (பட்ஜெட் இடமளித்தால் ஒரு பஞ்சுமிட்டாய் கலர் சட்டை மற்றும் கூளிங் க்ளாஸுடன் படிக்கவும்..)

ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், முதலில் 'எவன்டா எடுத்தது?' என்று சவுண்டு விடுவது அந்த திருடனாகத் தான் இருக்கும். யெஸ்.பாலபாரதியின் பதிவிலும் சரி, குசும்பனின் பதிவிலும் சரி உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சவுண்டு விட்டது, நாகேஷ் படத்தை ப்ரொபைலில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் வேலை செய்து வரும் 'அந்த' பதிவர் தான்.

(இதற்கு முன் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா?' என்று அன்னியன் ரெமோ ரேஞ்சுக்கு பீல் பண்ணி கவிதையெழுதி வந்தவர் சமீப காலமாக 'வாஷ் பேஸினில் உமிழ்ந்தால் குத்தமா?' என்று அம்பி ரேஞ்சுக்கு பம்முகிறார்.)

க்ரைம் பிரான்ச் உயர் அதிகாரி என்ற முறையில் சொல்கிறேன் (யாருக்குத் தெரியப் போவுது) அணைத்து குற்றவாளிகளிடமும் காணப்படும் பொதுவான குணங்களில் மற்றொன்று, 'எங்கப்பன் குதுருக்குள்ள இல்லீங்கோ' என்று கூவுவது தான். சமீப காலமாக இவரது இடுகைகளில் பின்வரும் தொனிகள் தேவையில்லாமல் தினிக்கப்படுகின்றன என்று கீனாக அப்ஸர்வ் செய்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

1) எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சத்தியமாக குழந்தைகள் எதுவும் இல்லை. (இனியும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் கொடுத்த நீலக்கல் மோதிரத்தைப் போட்டுக் கொண்டால் இன்னும் ஏழு மாதத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார்)

2) என்னிடம் தொலைபேசியோ, கைபேசியோ, கால்பேசியோ கிடையாது. இனி வாங்கினாலும் உபயோகிப்பதாக இல்லை. (உபயோகிக்கவும் தெரியாது. நான் அஞ்சாப்பையே ஆறு வருஷம் படிச்சேன். தவிர, சில வருடங்களுக்கு முன் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டுகொண்டிருந்த ஒரு உருவமில்லாத உருண்டையை எடுத்ததிலிருந்தே வாய் பேச வருவதில்லை)

3) இதுவரை நடந்த எந்த பதிவர் சந்திப்பிலும் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொண்ட சந்திப்புகளில் எந்தப் பதிவரையும் சந்தித்ததில்லை. (சென்னை பதிவர் சந்திப்புக்கு நான் சென்ற போது மெரினாவில் தண்ணியில்லா குட்டைக்கு அருகில் நிற்பதாக சொல்லப்படும் காந்தித் தாத்தா கூட கம்பை ஊன்றியவாறு டி.ஐ.ஜி அலுவலகம் பக்கமாகப் போய் விட்டார்)

4) என்னிடம் கணினி இல்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக எங்கள் அலுவலகத்திலிருந்த கணினிகள் பிடுங்கப் பட்டு கால்குலேட்டரும், டைப்ரைட்டரும் திணிக்கப்பட்டுள்ளன. எங்க ஊர் பிரவுசிங் செண்டரில் உள்ள கணினியில் இனைய வசதி கிடையாது. தற்செயலாக கிடைக்கும் கணினிகளில் யாருக்கும் மெயில் அனுப்புவதில்லை. உரையாடியிலும் உரையாடுவதில்லை.

(முக்கியமாக ஏதாவது பெண்களின் மெயில் ஐடி தென்பட்டால், என் நாட்ரான் ஆன்டி(anti அல்ல aunty) வைரஸ் கீய்ங்க் கீய்ங்க் என்று அலறி கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து விடும்)



அநியாயத்தை பாத்தீங்களா மக்களே! நான் கொடுத்திருக்கும் க்ளூக்களை வைத்து உங்களால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடிந்திருக்கும். இல்லையென்றால், கடைசியாக ஒரே ஒரு க்ளூ.. அவர் பெயர் செ-யில் ஆரம்பித்து ஷி யில் முடியும். நடுவில் ன் தவிர ஒன்றுமே கிடையாது.

இது தவிர வேறு தடயங்களை நீங்கள் கண்டுபிடித்தால், தயவுசெய்து நான் வாழ் நாள் உறுப்பினராக இருக்கும் முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுவோர் சங்கத்திற்கோ, வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவோர் சங்கத்திற்கோ, வினையை வெத்தலை பாக்கு வச்சு விருந்துக்கு அழைப்போர் சங்கத்திற்கோ, sombery@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

உபயோகமான துப்பு கொடுப்பவர்களுக்கு, (சங்கங்கள் இப்போது அபராததில் ஓடிக் கொண்டிருப்பதால்) சங்கத்தில் அமௌண்ட் சேர்ந்ததும் பரிசுப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

பின்னெச்சரிக்கை (சென்ஷிக்கு மட்டும்) - த பாரு சென்ஷி நைனா.. மருவாதையா நான் கேட்ட Almond சாக்லேட்டை 24 அவர்ஸுக்குள்ள அனுப்பி வைக்கிற. இல்லாங்காட்டி தாம்பரத்துல தாலி அறுத்தது, ட்வின் டவர்ஸை ப்ளைட் வுட்டு இடிச்சது, அல்லாத்தையும் செஞ்சது நீ தாங்கற உண்மையையும் போட்டு உடைக்க வேண்டியது வரும். சாக்கிரத.

Sin cityயும் நான் கடவுளும்

Wednesday 20 May, 2009

படத்தின் இறுதிக் காட்சி முடிந்து கார்ட் போட ஆரம்பித்ததும், திரும்பவும் முதல் காட்சியிலிருந்து பார்க்கத் தூண்டிய முதல் படம் சின் சிட்டி தான் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே எனக்கு வன்முறையைப் பார்த்து பயமில்லை. அருவருப்பு தான் என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தான் புரிந்தது. படம் முழுக்க அவ்வளவு ரசனைக்குரிய வன்முறை.

இதன் திரைக்கதையில் பயன்படுத்தி இருக்கும் உத்தியை, Occurance of the same event என்று சொல்வதா, life cycle என்பதா என்று புரியவில்லை. (திருமலையில் மாமனாரைப் பார்த்து விஜய் சொல்லும் 'டேய்.. வாழ்கை ஒரு வட்டம்டா. மேல இருக்குறவன் கீழ வருவான்' அல்ல. ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் சொல்லும் தொடங்கிய இடத்திற்கு திரும்ப வரும் வாழ்கை வட்டம்)

கதை மொத்தம் (ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட, ஆனால் ஒன்றை ஒன்று பாதிக்காத) நான்கு ட்ராக்களில் பயனிக்கிறது.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் ஒரு நிமிடக் காதல்.

2) ஒரு நேர்மையான போலீஸ் கிழவருக்கும் அவரால் காப்பாற்றப்பட்ட, காப்பாற்றப்படும் குழந்தைக்குமான காதல்.

3) சந்தித்து சில மணி நேரங்களேயான காதலிக்காக பல கொலைகள் செய்து விட்டு, இறுதியில் உயிரிழக்கும் ஒரு மனப்பிறழ்வடைந்தவனின் காதல்.

4) உலகைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளும் ஒருவனின் இரு காதல்கள்(ஒரே நேரத்தில்). அதில் ஒருவரான விலை மாதுக்கள் தலைவி, அவன் உதவியுடன் தங்களைப் பாதுகாக்கப் போராடி வெல்லும் ஒரு விருவிருப்பான கதை.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் மற்றொரு நிமிடக் காதல்.

நான் கடவுள் படத்தின் க்ளைமாக்ஸ் தான் sin city பட ஆரம்பக் காட்சியும் க்ளைமாக்ஸும்.

முதல் காட்சியில் வரும் பெயரற்ற கதாபாத்திரம்(Pearl harbour புகழ் Josh harnett) பார்ட்டியின் போது தனியாக ஒதுங்கும் ஒரு பெண்ணிடம், சிகரெட் கொடுத்து அறிமுகப் படுத்திக் கொண்டு, அவளுக்காகவே அந்த பார்ட்டிக்கு வந்ததாக சொல்கிறார். 'நீ எதிலிருந்தோ ஓடிக் கொண்டிருந்தாய். இப்போது அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாய். ஆனால் தனியாக அதை எதிர்கொள்ள நீ விரும்பவில்லை' என்கிறார்.

ஆம் என்று சொல்லும் அவளிடம் தன் காதலை சொல்லி அணைத்து முத்தமிட்டபடியே அவளைத் துரத்திய அந்த ஒன்றிலிருந்து விடுவிக்கிறார். அதாவது சுட்டுக் கொன்று விடுகிறார்(வாழவே முடியாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்)

இறுதிக் காட்சியில் தனது நண்பர்களுக்கு(நான்காவது ட்ராக்கில்) துரோகம் செய்த ஒரு பெண்ணிடம் முன் போலவே ஜோஷ், சிகரெட்டுடன் அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது(வாழவே கூடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை)

**********

பலராலும் வெறுக்கப்படும் தோற்றமுடைய அதிபலசாலி மார்வ் (இவரை வேறு எந்தப் படத்திலும் பார்த்ததில்லை அல்லது அடையாளம் காண முடியவில்லை), அவரை விரும்புவதாக சொல்லும் கோல்டி என்ற பெண்ணுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள் கொலை செய்யப் படுகிறாள். அவரைத் துரத்தும் காவல் துறையிடமிருந்து தப்பும் மார்வ், தன்னைக் கொல்ல முயல்பவன் மூலம், படிப்படியாக கோல்டியைக் கொன்றவனை அடைகிறார்.

ஹாரி பாட்டருக்கும், எமினெமுக்கும் பிறந்தது போல் தோற்றமளிக்கும் கெவின் என்ற அந்த கொலையாளி மார்வைத் தாக்கி, மனித தலைகளால் அலங்கரிக்கப் பட்ட அறையில் சிறைப்படுத்தி விடுகிறான். அவன் மனித உடல்களைத் தின்பவன் என்று சிறையில் அவருடன் அடைக்கப் பட்டிருக்கும் அவனுடைய பரோல் அதிகாரிச்சி மூலம் தெரிந்து கொள்கிறார் மார்வ். அவனில்லாத சமயம் அங்கிருந்து தப்புகிறார்.

மறுபடியும், ஆயுதங்கள் சகிதம் கொலைகாரன் இருப்பிடத்துக்கு சென்று, அவனையும் அவனை ஆதரித்த பாதிரியாரையும் கொல்கிறார். அடுத்த நாள் மார்வ் அவருக்கு அளிக்கப் படும் மரண தண்டனையை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு சாகிறார்.

கெவினை மார்வ் கொல்லும் விதம் அழகாக ஃப்ளூரசண்ட் வெள்ளை நிறத்தில் நிழலாகக் காட்டப்படாமல், அப்படியே காட்டப்பட்டிருந்தால் வாந்தியில் தியேட்டரே நாறியிருக்கும். (நான் யாரையாவது கொலை செய்ய நேர்ந்தால் நிச்சயம் இப்படித் தான் செய்வேன்)

மார்வ் கெவினின் முழங்கை வரை கைகளையும், முழங்கால் வரை கால்களையும் வெட்டி விட்டு, அவனை 'உயிருடன்' அவன் வளர்க்கும் நாயால் சாப்பிட வைக்கிறார். அவனும் புன்னகை மாறாமல் சிறு அலறல் கூட இல்லாமல் அவனுடன் உரையாடும் மார்வை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இரு(ற)க்கிறான். (இந்தக் காட்சியை பேரரசு இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து நினைத்துப் பார்த்து விடாதீர்கள்)

நாய் மிச்சம் வைக்கும் கெவினின் தலையை எடுத்துக் கொண்டு அவனை ஆதரித்த பாதிரியாரிடம் பல காவல்களையும் கடந்து செல்கிறார். பாதிரியார் சொல்கிறான், 'நர மாமிசம் உண்பது அவனை வெண்ணிற ஒளியால் நிரப்பியது. கடவுளுக்கு வெகு அருகில் அவனைக் கொண்டு சென்றது. அவன் உண்பது அவர்கள் உடலை மட்டுமல்ல. ஆத்மாக்களையும் தான். அவன் கொல்வது யாராலும் கண்டுகொள்ளப்படாத விலை மாதுக்களை மட்டுமே.'

ஸ்டைலாக புகைத்தபடியே அவன் சொல்லும் கதையைக் கேட்டு விட்டு மார்வ் அவன் கழுத்தை ரம்பத்தால் அறுத்துக் கொன்று கொண்டிருக்கும் போது, காவலாளிகளிடம் சிக்கி சிறைச்சாலை செல்கிறார் (வேலை முடிந்து விட்டதால், அவருக்கு தப்பும் எண்ணமும் இல்லை)

கெவின் என்ற அந்தக் கொலைகாரனை நான் கடவுள் ருத்ரனோடு ஒப்பிடுவதற்கு ஒரே காரணம் அவனும் கடவுள் பெயரால் நர மாமிசம் உண்பவன் என்பது மட்டுமே! மற்ற படி அதி பலசாலி மார்வையே வீழ்த்தி விடுமளவு சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப் பட்டிருப்பதாலோ, இறுதி வரை அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்பதாலோ அல்ல.

பின் எச்சரிக்கை: சின் சிட்டியின் சில காட்சிகள் பார்க்கும் போது எனக்கு நான் கடவுளின் ஞாபகம் வந்ததே இந்த இடுகைக்கான காரணம். அந்த சில காட்சிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள். அத விட்டுட்டு நாகரிகக் கோமாளி, நாகரிகமில்லாத காவாளினு பின்னூட்டிடாதீங்கப்பு.

அக்காவின் டைரியும், அச்சிலேறும் என் புத்தகமும்

Monday 18 May, 2009

குழந்தை குட்டியுடன் குடும்ப இஸ்திரியாக குடுமிப்புடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் அக்காவின் குறிப்பேடு, நேற்று தற்செயலாக கிடைத்தது. அவளுடையது காதல் திருமணமென்பதால், 'காதலிப்பது எப்படி' என்ற புத்தகத்தைத் திறப்பது போல பயபக்தியுடன் திறந்தேன்.

(மீ அண்ட் மை சிஸ்டர்)

முதல் பக்கத்திலேயே 'திறந்த வீட்டுக்குள் நாய் தான் நுழையும்' என்ற வாசகம் காறித் துப்பினாலும், 'கடவுள் மட்டும் காலிங் பெல் அடிச்சிட்டா வருவார்' என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்த பக்கத்தைத் திறந்தேன். அதில் 'அடுத்த பக்கத்தையும் திருப்பினால் ரத்தம் கக்கி சாவாய்' என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது. உயிர் மேல் உள்ள ஆசையால், அடுத்த பக்கத்தை விட்டு விட்டு, அதற்கடுத்த பக்கத்தைத் திறந்தேன்.

தமிழ் தானா!? லாரி டயரில் நசுங்கிய தவளை போன்ற அஷ்ட கோனலான எழுத்து. கஷ்டப்பட்டு வாசித்தால், மொழியும் தமிழ் போல் இல்லை. உங்களுக்கு இட்ல எய்ன பாஷை தெரியுமா? ஜெயம் படத்தில் புகைவண்டிக்கு பின்னால் எழுதப்பட்டிருக்குமே.. (இட்லன்ந்த = இந்த) அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னுடைய ராஜதந்திரம் அனைத்தும் வீணாகப் போகிறது என்று தெரியாமல், பொருமையாக எல்லா 'ட்ல'க்களையும் பேனாவால் அடித்து விட்டு படிக்க ஆரம்பித்தேன். ங்கொக்கா மக்க.. படிச்சு முடிச்சதும் வந்த கடுப்புல டைரியத் தூக்கி எறிஞ்சேன் பாருங்க. இன்னும் எங்க இருக்குதுன்னு கண்டுபுடிக்க முடியல. கண்டுபுடிச்சதும் முதல் வேலையா அதை ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏதாவது அரசியல்வாதியோட தேர்தல் அறிக்கைக்குள்ள மறைச்சு வச்சிடனும்.

பின்ன, அவ பஸ்ல டிக்கட் எடுத்தது, பல் தேச்சதுனு ஒன்னு விடாம எழுதி வச்சிருந்தா, கஷ்டப்பட்டு டாவின்சி கோட் டாம் ஹேங்க்ஸ் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி டீகோட்(decode) பண்ணி படிச்ச எனக்கு காண்டாவாதா? சுவாரசியமா ஒரு விஷயம் கூடவா அவ வாழ்கைல நடக்கல? இந்த லட்சனத்துல அந்தக் கால ஹீரோயின் போல 'அப்பப்பா.. அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது'னு செல்ஃப் கமெண்ட் வேற. ஒரு வேளை வருஷத்துக்கு ஒருக்க தான் பல் தேப்பா போல! அதான் மறக்க முடியல.

அப்புறம், ப்ராக்டிகல் எக்ஸாம்ல இருபத்தைஞ்சுக்கு முட்டை மார்க் எடுத்திருந்ததைப் பத்தி எழுதியிருந்ததப் படிச்சதும் எனக்குள்ல ஒரு கவிதை ஊற்றெடுத்தது. (இக்கவிதையை வைரமுத்து பாணியில், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை, மெய் எழுத்துக்களில் அழுத்தம் கொடுத்து, அடித் தொண்டையிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும். முடியலைனா சாதாரணமாகவாவது படிக்கவும்.)

பரிச்சையை வச்சுகிட்டு
படிக்காம
பதினாறு
பக்கத்துக்கு
பல் விளக்குனதைப்
பத்தி எழுதினா
பாஸாக முடியுமா?

கவித சூப்பர்ல.. இதே போல் இன்னும் நிறைய கவிதைகள் தோன்றின. அவற்றை அச்சில் ஏற்றுவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக, என் மாஸ்டர் பீஸ் எனக் கருதும் ஒன்றை மட்டும் மேலே அளித்திருக்கிறேன்.

இந்தக் கவிதையை அவியலுக்கு பரிசலோ, குவியலுக்கு வாலோ, டரியலுக்கு குசும்பனோ, புதுசாக மறியல் எழுதப் போகும் வருங்கால பிரபலங்களோ பயன்படுத்தி கொல்லலாம் சே கொள்ளலாம். என் கவிதையால், உங்கள் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் ஐநூறாக உயராவிட்டால் மீசையை எடுத்துவிடுறேன். (வளர்ந்ததும்)

நான் பின் வீட்டு ஜன்னலைப் பார்த்து ஜொள்ளுடன் சிரித்துக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை க்ராபிக்ஸில் நிலா, பூ, கடல் என்று ஏதாவது ஒரு கருமத்தைப் பார்த்து சிரிப்பது போல மாற்றி புத்தகத்தின் முன் அட்டையில் போட்டு விடலாம்.

ஒரு முறை என் தம்பி என் தட்டிலிருந்த சிக்கன் பீஸைத் திருடியதும், நான் கோபமாக புருவத்தை நெரித்த போது எடுத்த புகைப்படத்தின் பிண்ணனியில், குண்டுகள் வெடிப்பது போல் மாற்றி அதைப் பின் அட்டையாக்கி விடலாம்.

மொட்டை மாடியில்
சுட்டெரிக்கும்
மொட்டை வெயிலில்
பட்டப் பகலில்
பட்டை
போட்டுக் கொண்டு
மட்டை ஆனபோது

எடுத்த புகைப்படத்தை புல்வெளியில் படுத்திருப்பது போல மாற்றி நடுப்பக்கமாக்கி விடலாம். மேற்கண்ட சுட்டெரிக்கும் கவிதையை, அதே பக்கத்தில் பிரசுரித்து விட்டால் புக் ஸேல் சும்மா பிச்சுக்கும்ல.

புத்தகத்தோட தலைப்பைக் கேட்டீங்க அசந்துடுவீங்க.

குழந்தை
குட்டியுடன்
குடும்ப இஸ்திரியாக
குடுமிச் சண்டை போடுபவரின்
குறிப்பேடு

'தலைப்பே கவிதையா!! தெய்வமே எங்கயோ போய்டீங்க..' அப்படினு நீங்க கரையறது தெரியுது. கூல் டவுன். கூல் டவுன். (இதை யார் வேண்டுமானாலும் டெம்ப்ளேட் பின்னூட்டமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (சந்தேகமில்லாமல் இங்கே மட்டுமே))

உங்கள் மேலான பாராட்டுக்களை பின்னூட்டத்திலும், பரிசுப் பொருள்களை கூரியரிலும் அனுப்பி வைத்தால், புத்தகத்தின் பக்கங்களில் நூறை அதிகரித்த புண்ணியம் செய்தவராவீர்கள்.

தும்பிக்கையுடன் ஸாரி நம்பிக்கையுடன் சோம்பேறி

IPLலில் மொள்ளமாரித்தனம் - ஒரு டெம்ப்ளேட் இடுகை

Saturday 16 May, 2009

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

பின் குறிப்பு: இன்னிக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அதை சோதனை பண்றதுக்காக, எனக்கு வந்த கைபேசி குறுஞ்செய்தியை கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்ட டெம்ப்ளேட் இடுகை இது. நீங்க சீரியஸா எதையாவது எதிர்பார்த்து வந்திருந்தா ஐ ஆம் ஜோ ஜாரி.

நம்புங்கய்யா! நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன்!

Wednesday 13 May, 2009

எதுகை மொகனைக்காக சொல்லலைங்க.. மெய்யாலுமே நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன். அதைப் பத்தி சொல்றதுக்கு முந்தி, எங்க விருதுநகர் தொகுதி பத்தி கொஞ்சம் பில்டப் விட்டுக்கறேன்.

எனக்கு கார்த்திக்னா ரொம்ப ரொம்ப புடிக்கும். உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா படத்திலல்லாம் காமெடில கலக்கிருப்பாரு. அத விட விகடன் பேட்டில செமையா காமெடி பண்ணிருப்பாரு. என் விருதுநகர் தொகுதில கார்த்திக் நிக்கிறார்னு எப்போ தெரிஞ்சிச்சோ, அப்போவே அவருக்கு தான் என் ஓட்டுனு நெற்றியில் பச்சை குத்திக்கிட்டேன்.

ஆனா என் கூட சுத்துற வெளங்காத பசங்க, அவருக்கு ஓட்டு போடுற ஒரே ஆள் நீ மட்டும் தான். அதனால ஈசியா உன்னை ட்ரேஸ் பண்ணி, பதினாறாம் தேதி விடியும் முந்தி கட்சிக்காரங்க(காரர்), பத்திரிக்கைகாரங்கள்லாம் உங்க வீட்டு முன்னால பதவி, பேட்டி அது இதுனு குமிஞ்சுடுவாங்கனு பயமுறுத்திட்டாங்க.

நமக்கு இந்த பப்லிஸிட்டியெல்லாம் பிடிக்காதா.. அதனால அடுத்த ஆப்ஷனான விஜயகாந்த் பத்தி யோசிச்சேன். அவர் பிஎம் ஆயிட்டா நாட்டுல பொருளாதார நெருக்கடி கண்டிப்பா குறையும். அவரோட பாதுகாப்புக்காக தனியா செலவு செய்யத் தேவையில்ல. எந்தத் தீவிரவாதி டுப்பாக்கில டுமீல்னு சுட்டாலும் அவனுக்கே ஃபையர் பேக்காயிடும். தவிர பாக்கிஸ்தான் பார்டர்ல அவரை நிக்க வெச்சிட்டு, அங்க இருக்கற மத்த எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடலாமேனு கணக்கு போட்டேன்.

ஆனா விதி வேற மாதிரி கணக்கு போட்டுச்சு. கொஞ்ச நாள் முந்தி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் எங்க ஊர் பக்கமா வரும்போது கட்சிக் கொடி பிடிச்சுகிட்டு நின்னவங்களுக்கு ஆளுக்கு அம்பது ரூபா குடுத்திருக்காங்க. கொடி பிடிக்குறதுக்கே இவ்ளோனா, ஓட்டு போடுறதுக்கு நிறைய குடுப்பாங்கனு எதிர்பாத்தேன். Not bad. நூத்தியம்பது ரூபா குடுத்திருக்காங்க. ஆனா எங்க ஊர்பக்கம் நாயக்கமார் அதிகம்கறதனால, எப்படியும் வைகோவுக்கோ, பாண்டிய ராஜனுக்கோ தான் ஓட்டு விழும்னு நினைச்சுட்டு, பாதி ஊருக்கு பணம் குடுக்காம அவங்களே அமுக்கிட்டாங்க.

எங்க அப்பா கம்யூனிஸ்ட் கட்சிக்காரரா.. அதனால நான் வைகோவோட பம்பரத்துக்கு ஓட்டு போட்டா, ரொம்ப நாளா அவரு ஒளிச்சு வச்சிருக்கிற _______(குச்சி மிட்டாய் குருவி ரொட்டி என்று உங்களுக்குப் பிடித்த பதார்த்தத்தால் நிரப்பிக் கொள்ளவும்) எனக்குத் தர்றதா ப்ராமிஸ் பண்ணிருக்காரு. தவிர அந்தக் கட்சிக்காரங்க அம்பது ரூபா குடுத்தாங்க.

தே.மு.தி.க.காரங்களுக்கு மேலிடத்துலயிருந்து பணம் ரொம்ப கொஞ்சமாதான் வந்துச்சாம். அந்தப் பணத்துக்கு அவங்க ஃபுல்லா ஃபுல் வாங்கி வச்சுட்டாங்களாம். தேமுதிகல இருக்குற என் ஃப்ரண்ட் கிட்ட நானும் எங்கம்மாவும், மத்த கட்சி நிலவரத்தை சொல்லி 'உங்களுக்கு ஓட்டு போட்டா எவ்ளோ தருவீங்க'னு கேட்டதுக்கு, 'ஆளுக்கு ஒரு அவுன்ஸ் தரோம். குடிச்சுட்டு போங்க'னு சொல்லீட்டான் லூசுப்பய. இது தவிர, இந்த தேர்தல்ல விஜயகாந்தோ, கார்த்திக்கோ ஜெயிச்சாலும் அவங்களால (உடனே) பிஎம் ஆவ முடியாதுனு கடைசில தான் தெரிஞ்சது.

கடைசியில் யாருக்கு வாக்களித்தேன்?????? முடிவை சின்னத்திரையில் காண்க.

*********************

நான் ஓட்டு போட்ட நாலு கூட்டணி பேரையும் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. இவங்கள்ல ஒருத்தராவது கண்டிப்பா மானாட மயிலாட ஃபைனல்ஸ்ல முதல் மூனு இடத்துக்குள்ல வருவாங்க.

அருண் + அப்ஸரா, அஸார் + ரஜினி, ஃபயாஸ் + தர்ஷினி, ரஞ்சித் + ஐஷ்வர்யா.

அருண் நான் கடவுள் ருத்ரனா வந்து சும்மா கலக்கிட்டாரு. ஆனா கனேஷ்கர் ஆர்த்தி மாதிரியே ஓட்டு கேக்கும் போது கூழைக் கும்பிடு போடுறது, மண்டி போட்டு தரைய நக்குறதுனு ரொம்ப ஓவரா பண்ணினது எனக்குப் புடிக்கல. ஆனா அதுக்கு முந்தி அருண் பல்டி அடிச்சப்பவே ஓட்டு போட்டுட்டேன்.

அஸார் ஜோடி நல்லா தான் ஆடுறாங்க. கான்செப்டும் நல்லா தான் இருந்தது. ஆனா அவங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ். அது எனக்கு புடிக்கல. லோகேஷ் சுஜிபாலா நிலைமை இவங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு.

ஃபயாஸ் தர்ஷினிக்கு இவ்ளோ விசிறிங்க இருக்காங்கனு பொள்ளாச்சி போனப்போ தான் எனக்கே தெரிஞ்சது. ஃபயாஸ் எடுத்த நொண்டி கான்செப்ட் பழசு தான்னாலும், இதுக்கு முன்னால ஆடினவங்களை விட நிறைய ரிஸ்க் எடுத்து சூப்பரா ஆடிருந்தாரு.

ரஞ்சித் ஜோடி நல்லா ஆடினாங்க தான். அவங்களுக்கு நான் ஓட்டு போட்டதுக்கு முக்கிய காரணம், ஐஷ்வர்யா அண்ணாவோட எதிர்பாரா மரணம்.

நிவாஸ் கிருத்திகா, போன தடவை ஓட்டு கேட்ட விதம் ரொம்ப பிடிச்சுருந்தது (எனக்கு சினிமாவைத் தவிர வேறொன்னும் தெரியாதுனு நிவாஸ் சொன்னது டச்சிங்கா இருந்தது). அவங்க செமி ஃபைனல்ஸ் வர்றதுக்கு ரெண்டு வோட் போட்டேன். ஆனா இந்த தடவை நிவாஸ் ஜோடி, ஏற்கனவே ஸேண்டி எடுத்திருந்த சைனீஸ் கான்செப்ட் எடுத்து நல்லா சொதப்பிருந்தாங்க. அதனால வோட் பண்ணல.

ராம் ப்ரியா ஜோடிக்கு அவங்க choreographer ஸேண்டிக்காகவே ஓட்டு போடனும்னு நினைச்சேன். ஆனா பேலன்ஸ் காலி. பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் ரெண்டு வோட் பண்றேன்.

மதுரை டூ பொள்ளாச்சி

Sunday 10 May, 2009

மதுரை டூ பொள்ளாச்சி பேருந்து வந்து நின்றதும் ஓடிப் போய், யாருமே அமர விரும்பாத கடைசி இருக்கையை வெற்றிகரமாக பிடித்தேன். நிற்க. அட நீங்க உக்காருங்க. நான் என்னை சொன்னேன். நான் உக்காரப் போன சீட்டுல ஏதோ ஒரு வெனகாரப் பயவுள்ள சூயிங்கம் ஒட்டி வச்சுருக்குது.

அடடா சகுனம் சரியில்லையேனு நினைச்சு, டிரைவருக்கு பின்னால இருக்கற சீட்ல போய் உக்காந்து சனியனத் தூக்கி பனியன்ல போட்டுகிட்டேன். டிரைவருக்கு எதுவும் பெரிய வியாதியோ என்ன எழவோ, சரியா நாப்பது நொடிக்கு ஒரு தடவ ஜன்னலுக்கு வெளிய மண்டையை நீட்டி காறி காறித் துப்பிக்கிட்டே இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு, அண்ணாந்தமானிக்கு வாயில தண்ணி ஊத்திக்கிட்டு கடகடனு வாய்க்குள்ளேயே வண்டி ஓட்ட ஆரம்பிக்க, எதுத்தாப்புல ஒரு கண்டெய்னர் லாரி வர, கோஸ்ட் ரைடரில் உக்காந்தப்ப கூட நான் இம்புட்டு பதறுனதில்ல.

கண்டக்டர் புண்ணியவான் லோ நெக்கில் சுடிதார் போட்டிருந்த ஒரு பிள்ளையின் அருகில் போய் நின்றவாறு ஏதோ குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்துக் கொண்டேயிருந்தார். புதுசாக பல மக்கள் பேருந்தில் ஏறிய பின்பும் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 'ஆத்தா நயன்தாரா! நீ மதுரையிலேயே ஏறியிருக்கக் கூடாதா? டிக்கெட் எடுக்காமலேயே கோவை போய் சேந்துருப்பேனே' என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்த பெரியவர், நான் எப்படா காதில் மாட்டியிருக்கும் ஐபாடைக் கழட்டி விட்டு அவர் பக்கம் திரும்புவேன், எப்படா 'இன் 1973' என்று ஆரம்பிக்கலாம் என்று குறுகுறுவென என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்குமா? ஜன்னலில் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை.

ஜன்னலுக்கு வெளியே சுவாரஸியமாக ஒன்றுமில்லை. இப்போதைய குழந்தைகள் புகைவண்டிக்கு டாட்டா காட்டுவதிலேயே ஆர்வம் காட்டுவதில்லை. பிசாத்து பேருந்தையா கண்டு கொள்ளப் போகிறார்கள்? சாலையோர முட்புதரில் ஒதுங்கியிருந்த பெண்கள் மட்டுமே வாயில் ஒரு கெட்ட வார்த்தையுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு டாட்டா போட்டால் பேட்டா செருப்பு தான் வருமென்பதால், டாட்டா போடும் ஆவலை அடக்கிக் கொண்டு பேருந்துக்குள் நோட்டமிட ஆரம்பித்தேன்.

எல்லாப் பேருந்திலும் இருப்பது போல, ஒருவர் பேருந்தின் மேற்கம்பிகளை இரு கைகளாலும் பிடித்துத் தொங்கியபடியே தூங்கிக் கொண்டிருந்தார். பள்ளி சீருடையிலிருந்த ஒரு பெண் குழந்தையை ஒரு அயர்ன் பாக்ஸுக்கு பொறந்த பொறுக்கி, பேண்ட் ஜிப் தேய்ந்து போகுமளவு உரசு உரசு என்று உரசிக்கொண்டு இருந்தது.

ஒரு அம்மா பக்கத்து பேருந்தில் போகும் பயணிகளும், திரும்பிப் பார்க்குமளவு கைபேசியில் அலோ.. அலோ.. என்று கதறிக் கொண்டிருந்தார். பேருந்தில் உள்ள அணைவரும் தன்னைத் தான் சைட் அடிக்கிறார்கள் என்று நினைத்த ஒரு சப்பை பிகர், சானியா மிர்சா ரேஞ்சுக்கு பீல் பண்ணி தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு தேனிலவு தம்பதிகளைத் தவிர, முழுப் பேருந்தையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பத்து மாத வாண்டு தான். அதற்கு நிற்கவே தெரியவில்லை. யாயாயாயா என்று பலம் கொண்ட மட்டும் கத்திக் கொண்டும், ஹீட் பாக்ஸ் மேல் ஏற முயன்று கொண்டும், கியரைப் பிடித்து இழுத்துக் கொண்டும், நீரருந்திக் கொண்டிருந்த டிரைவர் வாய்க்குள் கையை விட முயன்று கொண்டும் இல்லாத அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.

அந்தப் பெரியவர் இறங்கிய பின் வெற்றாக இருந்த என் பக்கத்து இருக்கைக்கு அருகில், பிரவுன் நிற கால்சட்டையும், அதே பிரவுன் நிறத்துக்கு மேட்ச் ஆக்குவதற்காகவே அழுக்காக்கப்பட்டது போன்ற வெள்ளை சட்டையும் அணிந்த ஒரு பதிமூன்று வயது சிறுவன், என் பக்கத்தில் அமர வெட்கப்பட்டுக் கொண்டு நின்று கொண்டே இருந்தான். ஏதோ காட்டு வேலை செய்து விட்டு களைப்பாக வந்திருக்கிறான் என்பது தெரிந்தது.

இருக்கையிலிருந்த பையை மடியில் வைத்து கொண்டு, அவனை உட்கார சொல்வது போல் தள்ளி உட்கார்ந்தேன். ம்ம்ஹூம்.. நானும் அவனைப் போல் தலையைக் கலைத்து விட்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டால் தான் பக்கத்தில் உக்கார்வான் போல. அதற்குள் அடித்து பிடித்து வேறொருவர் வந்து அமர்ந்து விட்டார். பழனியில் அவன் இறங்கும் வரை, நிற்க முடியாமல் கம்பியில் சாய்ந்து கொண்டு, கால் மாற்றி நின்று கொண்டே வந்தான்.

பொள்ளாச்சியில் இறங்கியதும் (துர்)அதிர்ஷ்டவசமாக காட்டம்பட்டி செல்லும் திருப்பூர் பேருந்து குறுக்கே வந்து நின்று கொண்டு வரவேற்றது. அந்தப் பேருந்தில் அநியாயத்துக்கு கூட்டம். சலங்கை ஒலி கமல் போல ஒற்றைக் காலில் கதகளி ஆடியபடியே நின்று கொண்டு போனேன். அருகில் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மனி எப்படா அவர் மேல் விழுவேன், எப்படா குய்யோ முய்யோ என்று கத்தலாம் என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார். சாமி புண்ணியத்தில் ஒரே ஒரு முறை என் மடிக்கணினியை பையோடு அவர் தலை மேல் போட்டதோடு சரி.

பேஸ்மெண்ட் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தபோதும், குதிகாலில் வலி பின்னியது. மூச்சு தினறியது. உட்கார்ந்திருக்கும் எல்லாரும் திருப்பூருக்குத் தான் போய் தொலைய வேண்டுமா? வழியில் எங்கேயும் இறங்கக் கூடாதா? சீட்டோடு ஆணியடித்தது போல் அசையாமல் அமர்ந்திருந்தார்கள். எனக்கு மட்டும் ஹீ மேன் போல் சூப்பர் பவர் இருந்திருந்தால், அமர்ந்திருந்த ஒரு நான்கு பேரை சீட்டோடு தூக்கி ஜன்னல் வழியே எறிந்திருப்பேன்.

காட்டம்பட்டியில் இறங்கும் வரை, பழனியில் இறங்கிய அந்தப் பையனைக் கொஞ்சம் புன்னகையோடு 'உக்கார்' என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்திருப்பானோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது. இறங்கும் வரை மட்டுமே!

மூத்த பதிவர்களின் முத்தம் வேண்டுமா?

Friday 8 May, 2009

நான் மற்றவர்கள் வலைப்பூக்களில் கும்மியடிக்காததாலோ என்னவோ சில பெரியமனதுக்காரர்களைத் தவிர எனக்கு பின்னூட்டுபவர்களில் பெரும்பாலானோர் அனானிமஸாகவும், கூகுள் கணக்கோடும் வரும் நண்பர்களே!

பெருந்தலைகளைத் திரும்பிப் பார்க்க வைக்க என்ன செய்யலாம் என்று யோசித்த போது எனக்கு சிக்கிய சில யோசனைகளை உங்களுக்கு சொல்கிறேன்.(நீங்கள் பின்பற்றி, வொர்க் அவுட் ஆனால் பிறகு நானும் பின்பற்ற ஆரம்பிக்கிறேன்.)

தாமிரா - தங்கமணிகளை சமாளிக்க பத்து யோசனைகள் என்ற தலைப்பில் சில யோசனைகள் தரலாம். யோசனைகள் வேலை செய்தால் உங்களுக்குக் கோவில் கட்டினாலும் கட்டுவார்.

நாமக்கல் சிபி - நவயுக தெய்வம் நயன்தாரா; (கேபிள் ஷங்கர் மற்றும் லோஷனுக்கு நமீதா என எடிட்டிக் கொள்ளவும்)

மாதவராஜ் - எதிர் வாக்களிப்பவர்களை எதிர்கொள்வது எப்படி?

நான் ஆதவன் - சேட்டனிண்ட சேட்டைகள்(A அல்ல U)

வால் பையன் - 'பகுத்தறிவாளர்களுக்கு ஒரு ஆப்பு' அல்லது 'ராவாக அடிப்பது எப்படி' என்ற தலைப்பில் எழுதலாம்.

உண்மைத்தமிழன் - ஒரு எழுத்துக்கதை எழுதுவது எப்படி என்ற தலைப்பில், 'காவல் கோட்டம்' அளவு ஒரு ஆயிரத்து சொச்ச பக்க நாவலை பதியவும்.

லக்கிலுக் - இந்த ஃபிகருக்கு எத்தனை மார்க் போடலாம்? என்று தலைப்பிடலாம். கருணாநிதியைக் கொஞ்சம் காரசாரமாகத் திட்டி பதிவிட்டால் அவர் வலைப்பூவில் உங்களுக்காக தனிப் பதிவிட்டு உங்களைப் பட்டுக் குஞ்சத்தால் கொஞ்சுவார்.

குசும்பன் - இவர் எழுதிய எதிர் கவுஜைக்கு, எதிர் எதிர் கவுஜை எழுதலாம். 'திருநெல்வேலிக்கே அல்வாவா?' என்று கேட்டு பின்னூட்ட வாய்ப்பிருக்கிறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் - தலைக்கு மேல் கைகளைத் தூக்கி ஒரு கும்பிடு போட்டு விட்டு, கணினியில் உ லாபம் என்று டைப்பவும். ஃபுல்லாக சரக்கடிக்கவும். பிகர்கள் இருக்கும் திசையிலுள்ள ஜன்னலை திறந்து விட்டுக் கொள்ளவும்.

இப்போது உங்கள் உள்ளத்தில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதையெல்லாம் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி ஆர்மோனியப் பெட்டியை வாசிப்பது போல, முழங்கையால் கணினியின் பொத்தான்களை கண்டபடி அழுத்தி டைப்பித் தள்ளிவிடவும். சோலி முடிஞ்சது.

இது தலைப்பிற்கு மட்டுமே! அவரைப் போல் பதிவெழுதுவது எப்படி என்று ஒரு புத்தகமெழுதலாம் என்றிருக்கிறேன்.

(இதையே மடக்கி மடக்கி கவிதை வடிவில் டைப்பினால் சென்ஷியின் பின்னூட்டத்தையும் பெற்று விடலாம்)

தூயா - வாயில் நுழையாத பதார்த்தத்துக்கு, வாயில் நுழையாத பெயரை வைத்து 'செய்வது எப்படி' என்று தலைப்பிடுங்கள்.

பரிசல்காரன் - இவர் பதிவிற்கு எதிர் பதிவிடலாம். அவரது வலைப் பூவில் 'இதெல்லாம் உனக்கு தேவையா' என்று கேட்டுக் கொண்டாலும், நம் பதிவில் ஜூப்பர் என்றே பின்னூட்டுவார். (இவரது பதிவில் முதல் பின்னூட்டம், காதலி/காதலனின் முதல் முத்தம் போல என்று குறிப்பிட்டிருந்தார். தலைப்பின் காரணம் இப்போது புரிகிறதா?)

டோண்டு ராகவன் - 'இங்கே தான் பிராமணன்' என்று தலைப்பிடலாம். ரொம்ப நாளாக எங்கே பிராமணன் என்று கேட்டு, அந்தத் தலைப்பிலேயே பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அல்லது 'டோண்டு ராகவன் பெயரில் எனக்கு வந்த போலி பின்னூட்டம்' என்று தலைப்பிடலாம். பதிவைப் படிக்கிறாரோ இல்லையோ, 'நான் அவன் இல்லை' என்று பின்னூட்டி விட்டுப் போவார்.(அடி பலம் போல)

நர்சிம் - அடியார்க்கு நல்லார் உரை எழுத மறந்த ஏதாவது ஒரு சங்க கால பாடலுக்கு 'யாராவது விளக்கம் கொடுத்து உதவுங்களேன்' என்று தலைப்பிடலாம்.

இட்லிவடை - அனானியாக ஏதாவது பின்னூட்டம் வந்தால் இட்லிவடை என்று திருப்திப் பட்டுக் கொள்ளவும்.

அப்படியும் கல்லா கட்டவில்லையா.. தொடர் பதிவெழுத அழைப்பு விடுப்பது போல, நாளுக்கு ஐந்து பதிவர்களைப் பின்னூட்ட அழைப்பு விடுக்கலாம்.

பின் குறிப்பு: இதில் பாதிக்கு மேற்பட்டோர் எனக்குப் பின்னூட்டியிருக்கிறா(றீ)ர்கள். எனவே உங்களுக்கு சிரிப்பு வராவில்லை என்பதற்காக இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சோக்காகவே எடுத்துக் கொள்ளவும்.

அதி முக்கிய அறிவிப்பு: சோம்பேறியைப் பின்னூட்ட வைக்க, சோம்பேறியின் அக்கவுண்டுக்கு பணம் அனுப்பலாம். மேலதிக விபரங்களுக்கு 'sombery@gmail.com'

ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வாங்க_/'\_

Monday 4 May, 2009

முந்தைய இடுகையில் குறிப்பிட்டிருந்த சோமியம்மன் கோவில் தவிர ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் போது பார்வையிடப் பரிந்துரைக்கப்படும் மற்ற தலங்கள்:

(நேற்று கொடுக்க மறந்த சோமியம்மன் கோவில் கோபுரம்)

# ஆண்டவனையே டாவடித்த ஆண்டாளின் One and Only ஆண்டாள் கோவில். ஆண்டாள் அலங்காரப் பிரியை என்பதால், திருவிழா சமயங்களில் ஆண்டாளின் அலங்காரம், கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தக் கோவில் கோபுரம் தமிழக அரசின் சின்னம் என்பது காந்தியை சுட்ட விஷயம் தெரியாதவர்களுக்குக் கூட தெரியும். (எனக்கே தெரிஞ்சிருக்கே!)


இந்தக்
கோவிலைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே நிறைய தெரிந்திருக்கும் என்பதாலும், இதைத் தவிர எனக்கு வேறோன்றும் தெரியாதென்பதாலும் அடுத்த தலம் பற்றி பார்க்கலாம்.

# நீங்கள் அமைதி விரும்பியாக இருந்தால் கட்டு சோறு கட்டிக் கொண்டு, சென்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோவிலுக்குப் போகலாம்.

இயற்கை விரும்பியாக இருந்தால், அங்கிருந்து காட்டுப் பாதை வழியே நடந்து காட்டழகர் கோவிலுக்கு செல்லலாம்.
(சயனத்தில் பெருமாள் - நன்றி சாரு நிவேதிதா)
காட்டழகர் பெருமாளின் அம்சம். இந்தக் கோவிலுக்கு பின் உள்ள மலையின் வடிவம் பெருமாளே படுத்திருப்பது போன்று இருக்கும்.

(ரயில் நிலையத்திலிருந்து ஆண்டாள் கோவிக் கோபுரமும் சோமியம்மன் கோவில் கோபுரமும்)

# ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து இரண்டு மைல் தொலைவில் திருவண்ணாமலை, என்ற மலைக் கோவில் இருக்கிறது. இந்தக் குன்றில் கொண்டாட்டத்தில் இருப்பவர் குமரனல்ல. அவர் மாம்ஸ் கோவிந்த சாமி.


இங்கே
வெளிப் பிரகாரத்தில் இருக்கும் சாமியின் செருப்புகளால் அடித்துக் கொண்டால், பிரச்சனைகள் தீரும் என்று ஒரு ஐதீகம். பதினைந்து அடி உயரத்தில், ஒரே கல்லில் செய்த விநாயகர் சிலை, குளத்தடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு அடிவாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

# ஸ்ரீவியிலிருந்து பதினைந்து மைல் தொலைவில் சதுரகிரி மலை இருக்கிறது. இந்த மலையடிவாரத்தில் இருக்கும் தானிப்பாறை அருவியில் குளித்து விட்டு, மலை மேல் ஏழு மைல் ஏறிப் போனால் மூல ஸ்தானத்தில் இருக்கும் சுந்தர மகாலிங்கம் ஸ்வாமிகளை தரிசிக்கலாம்.


ஆடி
அமாவாசை என்றால் மிகவும் விசேஷம். மற்ற நாட்களில் பெரிதாகக் கூட்டம் எதுவும் இருக்காது. மூலிகைகள் நிரம்பியது. ராமர்பிள்ளை என்று ஒருவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக சொல்லி டகால்டி வேலை செய்தாரே, அந்த மூலிகை இந்த மலையில் தான் கிடைத்ததாக சொன்னார்.

இங்கே 24 மணி நேர இலவச சத்திரங்களில் சாப்பாடு (குறைந்தபட்சம் பழைய சோறு தாளிதமாவது), கடுங்காப்பி, சுக்குக் காப்பி என்று ஏதாவது கொடுக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். (வாழ்க்கை வெறுத்துப் போய் விட்டால், லூசுத்தனமாக தற்கொலை முயற்சி எதுவும் செய்யாமல் பேசாமல், இங்கே வந்து விடுங்கள்)

விக்கிமேப்பியாவின் வழிகாட்டி

# ஸ்ரீவியிலிருந்து பதினாறு மைல் தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் நீர் காத்த அய்யனார் கோவில் இருக்கிறது. வன தேவதைகள் ஸ்பெஷலான இந்தக் கோவில், அருவி ஆறு என நீர் வளங்கள் நிறைந்தது. இங்கு சாமி கும்பிட வருபவர்களை விட, குளித்து விட்டு கடா வெட்டி சாப்பிட வருபவர்கள் தான் அதிகம்.

பெரும்பாலானோர் மப்பில் இருப்பார்களென்பதால், பெண்கள் யாரும் தனியாகப் போக வேண்டாம். நான் அழைத்துக் கொண்டு போகிறேன்(சந்தேகமில்லாமல் பெண்களை மட்டுமே!)

# பழங்கள், ஸ்வீட், சிப்ஸ், குளிர்பானங்கள் எல்லாம் வாங்குமளவு உங்கள் பட்ஜெட்டில் இடம் இருந்தால் எங்கள் வீட்டுக்கு கூட வரலாம். எங்கள் தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்.

நாக்கு தமிலுலூ ரா லேதண்டி + புதிர்

Sunday 3 May, 2009

எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாததால், இது சென்ற இடுகையின் தொடர்ச்சியல்ல என்ற எச்சரிக்கையுடன் ஆரம்பிக்கிறேன். ஓகே.. முதல்ல, ஸ்ரீவில்லிப்புத்தூர் சோமியம்மன் கோவில் பத்தி சொல்றேன்.

வைத்தியநாத சுவாமி மூல சந்நிதானத்தில் தன் மனைவி திருமதி.வைத்தியநாத ஸ்வாமியுடன் (ஸாரி.. அம்மன் பெயர் மறந்து விட்டது) காட்சி தருகிறார். ஸ்வாமியும் அம்மனும் சேர்ந்து தரிசனம் தருவதால், ஸ்வாமி அம்மன் கோயில் என்று அழைக்கப்பட்டு வந்த இத்தலம், இப்போது மருவி சோமியம்மன் கோவில் என்று கிராமத்துப் பெருசுகளால் அழைக்கப்பட்டு வருகிறது.

கோவிலில் அறுபத்து நான்கு நாயன்மார்கள் விக்ரகத்தையும் சேர்த்து சுமார் இருநூற்றி சொச்சம் விக்ரகங்களாவது இருக்கும் (தூண்களில் செதுக்கப்பட்டுள்ள யாழி, நடன நாரீமணிகள் தவிர்த்து)

64 நாயன்மார்களில் ஒருவருக்கு மட்டும் புத்தாடை அணிவித்து அலங்காரம் செய்திருந்தார்கள். காரைக்கால் அம்மையார் மாதிரி பெண்களுக்கு மட்டும் சலுகை போல என்று நினைத்தேன். இல்லையாம். அந்தந்த நட்சத்திரத்துக்கு உகந்த நாயன்மார்களுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பாம்.

சிவலிங்கத்தைப் பிளந்த படி வெளி வரும் லிங்கோத்பவர் எனப் பெயரிடப்பட்ட விக்கிரகம் ஒன்றைப் பார்த்தேன். என்ன கதையாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே, ஒருவர் வந்து 'ஒரு வாட்டி பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் யார் பெரியவானு..' என்று பலமுறை கேட்ட கதையை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்தார்.
(லிங்கோத்பவர்)
அப்போது வலைப்பூ எழுதுவேன் என்றோ, அதை நீங்கள் படிப்பீர்கள் என்றோ தெரியாததால் அவர் சொன்ன கதையைக் கேட்க விரும்பாமல், "நாக்கு தமிலுலூ ரா லேதண்டி. Just leave it to our imagination buddy" என்று பீட்டர் விட்டு விட்டு எஸ்ஸாகி விட்டேன்.

மறுபடியும் அங்கே செல்ல நேர்ந்தால், அவரைத் தேடிப் பிடித்து நிச்சயம் முழுக் கதையையும் கேட்டு வருகிறேன் (அவர் சொன்னால்). இப்போதைக்கு நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழே உள்ள கல்வெட்டைப் படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
(புரிந்து கொள்ள கஷ்டமாகத் தோன்றினால் சென்ஷி எழுதும் கவிதையை வாசித்து விட்டு முயற்சி செய்யவும். அதை விட நிச்சயம் சுலபமாக தான் இருக்கும்.)
(புலித் தோல் காஸ்ட்யூமில் நடராஜர்)

இங்கே முங்குளிப்பான் என்ற வித்தியாசமான கருப்பு இனக்கொக்கு காணக் கிடைக்கிறது. இது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது மீனைக் கண்டால், சர்ரென நீருக்குள் மூழ்கி (முங்கு நீச்சலில்) ஒரே கொத்தில் மீனைக் கவ்விக்கொண்டு பறக்க ஆரம்பித்து விடுமாம். முங்கி குளித்து மீனைக் கவ்வுவதால், முங்கி குளிப்பான் என்று வைத்த பெயர், மருவி முங்குளிப்பான் ஆகிவிட்டது.
(முங்குளிப்பான்)
இங்குள்ள குளத்தில் நிறைய மீன்கள் இருக்கின்றன. அவைகளுக்கு தீனி போடுவதற்கென்றே வெளியே பொரி விற்கப்படுகிறது.
நாங்களும் ஆவலுடன் பொரி வாங்கி குளத்தில் இரண்டும், வாயில் இரண்டுமாகப் போட்டோம். ஒரு மீனும் சாப்பிட வரவில்லை. எங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒருவர் மீன்களுக்கு ரொட்டித் துண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்தார். அங்கே மீன் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது.

இனி வரும் காலங்களில் மீன் கூட Pizza தான் சாப்பிடும் போல:-(

தென்காசி டூ மதுரை ரயில் பயனத்தின் போது, ஸ்ரீவி ரயில் நிலையத்தை அடையும் ஒரு இடத்தில், இந்தக் கோவில் கோபுரமும், ஆண்டாள் கோவில் கோபுரமும் அருகருகே இருப்பது போல் தெரிந்தது. எவ்வளவோ முயன்றும், என் கைபேசியில் புகைப்படமெடுக்க முடியவில்லை.
(இந்த மரத்திற்குப் பின்னால் தான் இரு கோபுரங்களும் இருக்கின்றன. ஒரு கும்பிடு போட்டுக் கொள்ளுங்கள்.)

அதற்கு பதிலாக வேறு இரண்டு கோபுரங்கள் கீழே கொடுத்திருக்கிறேன்.. எந்தக் கோவில் கோபுரங்கள்னு கண்டுபிடிங்க பாக்கலாம்.


பதிவின் நீளம் கருதி, ஸ்ரீவில்லிப்புத்தூர் வரும் போது பார்வையிடப் பரிந்துரைக்கப்படும் மற்ற தலங்களையும், இடங்களையும் பற்றி மற்றொரு பதிவில் சொல்கிறேன்.
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket