
காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?

வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.

உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.
அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?
1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.
இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.
2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.
3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.
விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.
4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)
அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'
5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.
ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.
6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'
அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.
எப்பூடீ?
முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.
வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..
முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்