ஏன்யா? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா?

Monday 27 July, 2009

பல பிரபலங்களும் வந்தால் தான், தங்களின் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு, நட்சத்திர அந்தஸ்து கிடைக்குமென நினைக்கிறார்களோ என்னவோ, அவர்களை வரவழைப்பதற்காகவே, பல நூற்றாண்டுகளுக்கு முன், அவர்கள் தும்மிய துப்பிய படங்களையெல்லாம் வலை வீசித் தேடிப் பிடித்து, எல்லா விருதுகளையும் அவர்களுக்கே கொடுக்கிறார்கள்.

சிறந்த பின்னனி பாடகிக்கான, இசையருவியின் தமிழிசை விருது, ஸ்ருதிஹாசனுக்கு 'அடியே கொல்லுதே' பாடலுக்காக கொடுக்கப்பட்டதைக் கூட மன்னித்து விடலாம். 'வேர் இஸ் த பார்ட்டி.. ஆங்.. உங்க ஊட்ல பார்ட்டி' பாடலுக்காக, சிம்புவுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது கொடுக்கப்பட்டதைத் தான், டன் கணக்கில் இஞ்சிமரப்பா சாப்பிட்டும் ஜீரணிக்க முடியவில்லை.

கமலுக்கு தசாவதாரத்துக்காக சிறந்த கதாநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர் சார்பாக, ஸ்ருதிஹாசன் பெற்றுக் கொண்டார். ஹ்ம்ம்ம்.. நானென்னவோ விருதென்பது புதியவர்களை அடையாளப்படுத்தி, ஊக்குவிப்பதற்க்குத் தானென நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பட். ஓக்கே. எல்லா விருதுகளையும் வீணடிக்கவில்லை. ராபர்ட், ஜேம்ஸ் வசந்தன், கண்கள் இரண்டால் பாடலைப் பாடியவர் (பெயர் மறந்து விட்டது) என விருதுக்குத் தகுதியான சிலருக்கும் கொடுத்திருந்தார்கள்.

ராபர்ட், விபத்தில் உடைந்த காலில் கட்டோடு, சூயிங்கம் மென்றபடி, வந்து சிறந்த நடன அமைப்பாளருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். ஸ்டேஜ் ஃபியரை மறைப்பதற்காக சூயிங்கம் மென்று கொண்டிருந்தார் போல. ஆனாலும், பேட் மேனர்ஸாகத் தான் பட்டது.

டி.எம்.எஸ் நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். விட்டிருந்தால் சனா கான், அனுயாவோடு ஸ்டேஜில் ஏறி ஒரு குத்து டான்ஸ் போட்டிருப்பார் போல. அவருக்கு விருது கொடுக்கப்பட்ட போது, தங்கப்ப தக்கம் சிவாஜி போல குரலை இறுக்கிக் கொண்டு, கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட கர்வத்துடன், 'பெரியவங்கள்லயிருந்து சின்னவங்க வரையிலும் என்னை ரசிக்காதவங்க யாருமில்ல. ஐ'ம் த பெஸ்ட்' என்ற ரீதியில் பேசினார்.

அவரது ரசிகர்கள் ரசித்திருக்கக் கூடும். அவரது குழைவான குரல் எனக்குப் பிடிக்காது என்பதால், எனக்கு அவர் பேசியது டூ மச்சாகத் தான் தோன்றியது.

*.*.*.*.*.*.*.*.*

ஸ்ரீவில்விப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. ஆண்டாளின் பர்த் டேயை க்ராண்டாகக் கொண்டாடும் பொருட்டு, பத்து நாட்களுக்கு முன்பிருந்தே, கோவில் வாசலில், ஷங்கர் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக, அழகாக பந்தலிட்டு, மாலை வேளைகளில் இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு என்று களை கட்டிக் கொண்டிருந்தது.

கோவில் பிரசாத ஸ்டால் அருகே, ஒரு கையில் சுதர்சனமும், ஒரு கையில் சங்கும், மற்ற இரு கைகளால் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டும், காட்சி தரும் வேணு கோபாலரின் அரிதான சிலையை ஒட்டடை கூட அடிக்காமல் வைத்திருக்கிறார்கள். ஹ்ம்ம்ம்..

தேரோட்டத்தை எல்லா லோக்கல் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பினார்கள். வழக்கம் போல ஆண்டாள் ஜொலித்தார்.

ஹேப்பி பர்த் டே டு யூ ஆண்டாள்.. வீ லவ் யூ..

இந்த போஸ்டை இன்னும் அஞ்சு நிமிஷத்துல தூக்கிடுவேன். கமான்.. ஹரி அப்..

Friday 17 July, 2009



சந்தனமுல்லை மற்றும் நவாஸூதீன் சுவாரஸியமான வலைப்பூவிற்கான விருதை எனக்கும் கொடுத்திருக்கிறார்கள். சந்தோஷம். என் விருதை நானே வைத்துக் கொண்டு, மற்ற பதிவர்களுக்கு வேறு விருதுகள் கொடுக்கிறேன்.

யாராருக்கு எதெது பொருந்துதோ, புடிச்சிருக்கோ அள்ளிக்கிட்டு போங்க..

சிட்டுக் குருவி விருது : ஜொள்ளு, குஜால் பதிவெழுதும் பதிவர்களுக்கு.


கழுகு விருது : சுட்டி டிவியில் வரும் டோரா புஜ்ஜியிலும், விஜய் படங்களிலும் கூட லாஜிக் தேடும் பதிவர்களுக்கு.

கிங்ஃபிஷர் விருது : சரக்கு பற்றியே எழுதும் பதிவர்களுக்கு.


மயில் விருது : உள்ளே மேட்டர் ஒன்றும் இல்லாவிட்டாலும், பார்க்க அழகாக தோற்றமளிக்கும் வலைப்பூக்களுக்கு

சண்ட கோழி விருது : அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் வலைப்பூவிற்கு. (இந்த விருதை டோட்டல் தமிழ்மணத்திற்கே கொடுக்க பரிந்துரைக்கிறேன்)


எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில், சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் படம் முழுக்க, நமீதாவை சுடிதாரில் பார்த்து விடுவது கூட சாத்தியமாகி விடும். தனி நபர் தாக்குதல் இல்லாத தமிழ்மணத்தை பார்க்கவே முடியாது போல.

சக்கரைக்குப் போட்டி வந்திருப்பது, கார்க்கியின் வலைப்பூ ஹேக் செய்யப்பட்டது தவிர, நான் ஊரில் இல்லாத இந்த ஒரு வாரத்தில் ஜூடாக ஏதாவது நடந்திருந்தால், பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும். அழிக்கப்பட்ட ஜூடான இடுகைகளைப் பின்னூட்டங்களுடன் காப்பி செய்து வைத்திருப்பவர்கள், எனக்கு மெயிலவும். இதுவரை அழிக்கப்பட்ட அனைத்து சண்டைகளையும் (வித் கமெண்ட்ஸ்) காப்பி செய்து வைத்திருக்கிறேன். பிரதியுபகாரமாக அவையனைத்தும் உங்களுக்கு மெயில் செய்யப்படும்.

சென்னை சென்றிறங்கியதும் முதன் முதலில் என் கண்ணில் பட்டது, ஜோதி தியேட்டரிலிருந்த மகா மெகா சைஸ் நாடோடிகள் திரைப்பட பேனர் தான். ஜோதி தியேட்டரில் இப்போது ஷகிலா படங்கள் போடுவதில்லையா.. அல்லது திருட்டுத்தனமாக ஓட்டுகிறார்களா என தெரியவில்லை. எதிரிலிருந்த பொட்டிக்கடையில் நமது பதிவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடிப்பார்த்தேன். இல்லை. ஹ்ம்ம்ம்.. அப்போ நிஜமாவே நாடோடிகள் தான் ஓடுது போல..

முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுறதுனா என்ன?

Thursday 9 July, 2009


சத்யம் ராமலிங்க ராஜூவுடன் சமீபத்தில் நான் எடுத்த பேட்டி பதிவின் இறுதியில்...

சத்யத்தின் வீழ்ச்சி எங்கு ஆரம்பமானது என்ற அதிகாரப்பூர்வமில்லாத கிசுகிசுவைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து படிக்கவும். பேட்டி மட்டும் போதும் என்று சொல்பவர்கள், ஸ்க்ரோல் டவுன் செய்து, நேராக பதிவின் இறுதிக்கு செல்லவும்.

கிசுகிசு

சத்யம் தன்னை வஞ்சித்து விட்டதாக உலக வங்கி, சத்யத்துடனான உறவை முறித்துக் கொண்டது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் உண்மையில், உலக வங்கியின் காவாளித்தனமும், ஒரு கருப்பாடின் மொள்ளமாரித்தனமும் தான், சத்யத்தின் முதல் வீழ்ச்சிக்கு காரணமாம்.

உலக வங்கிக்கு சத்யம் செய்து கொண்டிருந்த ப்ராஜெக்டின் ரிப்போர்ட்டை, முறைப்படி சத்யம் வெளியிடும் முன்பே, வேறு ஒரு கருப்பு ஆடு மலிவான விலைக்கு உலக வங்கிக்கு விற்று விடவே, முறைப்படி வந்த ரிப்போர்டை, பெரும்பொருள் கொடுத்து வாங்க உலக வங்கி மறுத்து விட்டது. மேலும் இன்று தன்னிடம் விற்ற அந்த ப்ளாக் ஷீப், நாளை தன் எதிரணியிடம் தன் ரகசியங்களைக் கொடுத்து விட்டால், தன் கதி அதோ கதி தான் என்றுணர்ந்து, சத்யத்துக்கு பெப்பே காட்டி விட்டது.

2003னில் 10 மில்லியன் டாலரில் ஆரம்பித்து, 2007லில் 100 மில்லியன் டாலராக வளர்ந்திருந்த அந்த கான்ட்ராக்டை, 'உங்கள் சென்னை அலுவலகக் கணினி, எங்கள் வாஷிங்டன் அலுவலகத்தின் நாற்பது கணினிகளின் தகவல்களைத் திருடி விட்டது' என்று காரணம் காட்டி, ராஜூவுக்கு டாட்டா காட்டி விட்டு, ரத்தன் டாட்டாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டது.

நீதி : நீ புத்திசாலினு நினைக்கிறது தப்பில்ல. அது ஓரளவு உண்மையா கூட இருக்கலாம். ஆனா இந்த உலகத்திலேயே, நீ மட்டும் தான் புத்திசாலினு நெனச்சுடக் கூடாது.

சோக்கு

ரெண்டு பேர், அம்பதாவது மாடியிலயிருந்து குதிக்க ரெடியா நின்னாங்களாம்..

நம்பர் 1 : இதோட நூறாவது தடவையா குதிக்கிறேன். நான் ஒரு கின்னஸ் ரெக்கார்ட் ஹோல்டர். நீங்க?


நம்பர் 2 : நான் ஒரு சத்யம் ஷேர் ஹோல்டர்

பேட்டி


பொருப்பு அறிவித்தல்

ராமலிங்க ராஜூவைத் தாக்கி வரும் பின்னூட்டங்கள் சர்வ நிச்சயமாக அனுமதிக்கப்பட மாட்டாது. (நான் மட்டும் தான் தாக்குவேன். அங்ங்ங்ங்)

எனக்கும் வாசகர்கள் கடிதம் வந்திருச்சுடோய்ய்ய்ய்.. (மவனே.. கீசிடுவேன்)

Tuesday 7 July, 2009

(முன் குறிப்பு : உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்பதற்காக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)


டியர் சோம்பேறி,

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க மச்சி. முக்கியமா "என்னைப் பாத்தா $&*%$&*& மாதிரி இருக்கா" கதை படிச்சு படிச்சு வயிறே புண்ணாக்காகிடுச்சு. புரோட்டா குமாரின் உருவம் மனதில் இன்னும் நிற்குது.

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது ஜாக்கி சானுக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். நமீதா-வ உங்க "நமீதாவுக்கும் உங்களுக்கும் ஒரு இதுவாமே" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க $#%$%ன் வலைப்பூவில் ஒரு அனானி கமெண்ட் எழுதிருப்பீங்க "இனிமே எழுதினே கீசிடுவேன்"-ன்னு, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே எழுதினே கீசிடுவேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mr. கொலவெறி குப்பன்

மை டியர் குட்டி சாத்தான் ஸாரி.. லொலவெறி குப்பன்,

நான் எப்போதோ எழுதுவதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் தட்டச்சுகிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

இரண்டு ஆண்டுகளாக உங்களை வாசிக்கிறேன். உருப்படியாக ஒன்றும் இருந்ததில்லை. ஆனாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. விரைவில் உருப்படியாக எழுத ஆரம்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

கு. கந்தசாமி, ஸ்பெய்ன்

அன்புள்ள கந்தசாமி,

நான் எழுத ஆரம்பித்தே ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஒருவேளை இன்னும் நாற்பது வருடங்கள் கழித்து நீங்கள் எதிர்பார்க்கும் படியான விபரீதமெதுவும் நிகழலாம்.

பை த வே, ஸ்பெயினிலிருந்து வரும் போது, சாக்லேட்டும், செண்ட் பாட்டிலும் வாங்கி வருவீர்களென எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

*.*.*.*.*.*.*.*.*.*

மதிப்பிற்குரிய சோம்பேறி,

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் மொக்கையாகவும் சப்பையாகவும் இருந்தாலும், சைட் பாரிலிருந்த ஜூஜூ பொம்மையின் அழகை ரசிப்பதற்காகவே, உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்ப்பதுண்டு. ஏன் அதை இப்போது தூக்கிவிட்டீர்கள்? மறுபடி வைத்தால் சந்தோஷப்படுவேன். வைக்காவிட்டால் நிச்சயம் ரூம் போட்டு அழ மாட்டேன். அவ்வ்வ்வ்..

அப்புறம் உங்கள் வலைப்பூவை விட, வலைப்பூ கேப்ஷனிலிருக்கும் ஸ்மைலி அழகாக உள்ளது. நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க.

இப்படிக்கு,
Mr. அவ்வ்வ்வ்

திரு. அவ்வ்வ்வ்,

வாசகர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். :-) உரையாடல் போட்டியில் வென்றவுடன் (வெளங்கீரும்) :-) அந்த பொம்மையை பழைய இடத்தில் மீண்டும் காணலாம். :-)


*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில், நீங்கள் குப்புறப் படுத்துத் தூங்கும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். உங்கள் முழு மொகரையையும் பார்க்க பேராவல்.

பேரண்புடன்,
Miss. நமீ

உங்கள் அட்ரஸை மட்டும் மெயிலுங்க நமீ.. நீங்கள் அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் அஞ்சே நிமிஷத்தில வந்து உங்களை சந்திக்கிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

வணக்கம். நீங்கள் வலைப்பூ எழுதும் முன்பிருந்தே உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (10000 BC?)

பிறர் பதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் வாண்டடாகப் போய் வம்பிழுக்கிறீர்கள். (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)

உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது சோம்பேறி ரோதனை தாங்காமல் தான் நான் பதிவுலகை விட்டு விடைபெறுகிறேன் என்று எஸ்ஸாவது தான்.

பி.கு : உங்கள் இடுகையை முடிக்கும்போது கொட்டாவியுடன் சோம்பேறி என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அதைப் படித்ததும் கொட்டாவி விட்டுட்டு, உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல குப்புற படுத்துத் தூங்கி விடுவேன்.

வாழ்க வளமுடன்

:-)

கொட்டாவியுடன் சோம்பேறி
*.*.*.*.*.*.*.*.*.*

டேய் டோமரு!

எங்கடா என் ஐநூறு ரூவா? செல்லை ஸ்விச் ஆஃப் பண்ணி வச்சுட்டா விட்டுருவோமா? நீ offlineல தான் ஒளிஞ்சிருக்கனு தெரியும். மரியாதையா வந்து பணமாவோ, சரக்காவோ கடனைத் திருப்பிக் குடுத்துட்டு போ. இல்ல.. ஆட்டோ தான் வரும்.

The user is offline. Will never come online. Please dont disturb him.

வலையுலக சூப்பர் ஸ்டார் யார்? - லாஜிக்கலான தீர்(ப்பு)வு

Friday 3 July, 2009

இதில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்கள். என் தரப்பு ஞாயத்தை விளக்குகிறேன்.


(படத்துக்கும் இடுகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பெரிதாக்கிப் பார்த்து டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்)


ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் ஒரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக 2)

விடையை மூன்றால் பெருக்கவும். (2 x 3 = 6)

அதை மூன்றைக் கூட்டவும். (6 + 3 = 9)

மீண்டும் விடையை மூன்றால் பெருக்கவும். (9 x 3 = 27)

விடையாகக் கிடைக்கும் இரண்டிலக்க எண்ணின், இரண்டு இலக்கங்களையும் கூட்டவும். (2 + 7 = 9)

உங்களுக்கு விடையாகக் கிடைத்த எண்ணிற்க்கு நேரே உள்ளவர் தானே, உங்கள் மனதில் இருக்கும் செலிப்ரிட்டி?


1. சோமாறி சே... சோம்பேறி

2. எஸ். ராம கிருஷ்ணன்

3. சாரு நிவேதிதா

4. ஜெய மோஹன்

5. நாகார்ஜூனன்

6. ஆமிர் கான்

7. பைத்தியக்காரன்

8. Fake IPL player

9. சக்கரை சுரேஷ்

10. சோம்பேறி (ஹி ஹி.. திரும்பத் திரும்ப வந்தாலாவது என் பேரை சொல்ல மாட்டீகளானு ஒரு நப்பாசை தான்)

ராஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கல்ஸ் - (சத்தியமாக உரையாடல் சிறுகதை போட்டிக்காக)

Monday 29 June, 2009

எம்.எல்.ஏ விடுதி வாசலில் ஏதோ தண்ணி பிரச்சனைக்காக நடிகர் சங்க கூட்டம். நயன்தாரா கூட வந்திருக்கிறாராம். அந்தப் புண்ணியவதியால் ஏற்பட்ட அதீத வாகன நெரிசல் காரணமாக, திருவல்லிக்கேணிக்கு போக வேண்டிய பேருந்து, மவுண்ட் ரோடிலேயே அனைத்துப் பயணிகளுக்கும் டாட்டா காட்டி விட்டுத் திரும்பியது. ஒலிப்பெருக்கியில் ராதாரவி குரல் மவுண்ட் ரோடு வரை அதிர்ந்தது. திரையில் காணக் கூடிய துணை நடிகர்கள் முகங்கள் சாலையில் சர்வசாதாரணமாய் தென்பட்டது.

அந்தக் கூட்டத்தைத் தாண்டி தான் லிஸியும், நித்தியும் போக வேண்டிய சென்னைப் பல்கலைக் கழக மகளிர் விடுதி. லிஸி அவள் கிராமத்திலிருந்து சென்னை வந்த இந்த ஒரு வருடத்தில், ஊர்க்காரர்களிடம் நான் கமலுடன் காப்பி சாப்பிட்டேன், சூர்யாவுடன் சூப் சாப்பிட்டேன் என்று அளந்து விட்டிருந்தாலும், மண்டை மனோகரைத் தவிர வேறு எந்த நடிக நடிகையரையும் நேரில் பார்த்ததில்லை. இப்போது நிஜமாகவே பார்க்கப் போகிறோம் என்றதும், கைபேசியிலிருந்த காமெராவை தயாராக வைத்துக் கொண்டாள்.

அவள் நினைத்ததை விட ரொம்பவே பெரிய கூட்டம். பெண்கள் சிலர் எக்கி எக்கி, மேடையை எட்டிப் பார்க்க முயன்று தோற்று, தொலைக்காட்சியில் பார்த்துக் கொள்ளலாமென திரும்பி நடந்தார்கள். அவளும், நித்தியும் 'எக்ஸ்க்யூஸ் மீ.. எக்ஸ்க்யூஸ் மீ..' என்றபடி நெரிசலான கூட்டத்திற்குள் ஒரு வழியாகப் புகுந்து விட்டார்கள்.

கூட்டத்தில் ஒருவன் லிஸி மேல் விழ, திடுக்கிட்டவள் சமாளித்துக் கொண்டு ஸாரி கேட்கப் போகிறானென நினைத்து 'இட்ஸ் ஓக்கே' என்றபடி திரும்பினாள். ஆறரை அடி உயரத்தில் வாட்ட சாட்டமாக இருந்த அவன், சொத்தைப் பல்லைக் காட்டி ஒரு மாதிரியாக சிரிக்க, 'ராஸ்ஸ்ஸ்ஸ்கல்' என்ற முனுமுனுப்புடன் முறைத்தபடி, நித்திக்குப் பின்னால் பத்திராமாக ஒண்டிக்கொண்டு, 'சீக்கிரம் போடீ' என அவசரப்படுத்தினாள்.

மறுபடி தகறாரான இடத்தில் கை வைக்கப்பட, 'உன் சொத்தைப் பல்லைப் பேத்துடுறேன் பாரு' என்பது போல் திரும்பி முறைத்தால், இது தலையில் காரக்கொழம்பு கொட்டிக் கொண்ட கிழிந்த ஜீன்ஸ்காரன். அதற்குள் வேறொரு பக்கத்திலிருந்து இன்னொரு ஐம்பத்தி சொச்ச வயசு வாலிபன், இன்னொரு குப்பத்துக் கிழிந்த பனியன்காரன், இன்னொரு ஸ்கூல் யூனிஃபார்ம்காரன்.

ம்ம்ஹூம்.. பெரும்பிழை. இந்தக் கூட்டத்தில் நுழைந்திருக்கவே கூடாது. நித்தியை நிறுத்தி 'வந்த வழிலயே திரும்பிப் போயிடலாமாடீ. ப்ளீஸ்' என அழாத குறையாக கேட்க, 'நானும் ரொம்ப நேரமா வந்த வழியை தான்டி தேடிகிட்டிருக்கேன்' என்றபடி திரும்பிய நித்தியின் கண்களில் ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி! சட்டையின் பொத்தான்கள் பிய்க்கப்பட்டிருந்தது.

திறந்தவெளி மிருகக்காட்சியில் காணாமல் போன குழந்தையின் மிரட்சியுடன், லிஸி கையில் வைத்திருந்த புத்தகத்தைப் பாதுகாப்பாக இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள்.

கொஞ்சம் தள்ளி, கூட்டத்தின் வேறொரு பகுதியில் டீசண்டாக, டையெல்லாம் கட்டிக் கொண்டு நின்றவர்கள் (மேன்ஷன் வாழ் பெருமக்களாக இருக்கக் கூடும்) பக்கமாக நகர்ந்தார்கள்.. அப்போது எருமைமாடு போல, முழு விசையுடன் வந்து ஒருவன் அவள் மேல் மோத, தடுமாறி பின்னாலிருந்தவன் மேல் விழுந்தவள், நித்தியின் கையை விட்டுவிட்டாள். நித்தி மேன்ஷன்வாசிகள் பக்கம் அடித்து செல்லப்பட்டு விட்டாள்.

நல்லவேளையாக, அவன்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவன் கீழே தள்ளி விட முயன்றால், ஒருவன் வேறொரு பக்கம் இழுத்தான். ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கவும், தள்ளி விடுவதுமாக பந்தாடிக் கொண்டிருந்தான்கள். அவளோ நாலரை அடி குள்ளி. சுற்றியிருந்தவர்கள் கெடா போல் இருந்தார்கள். அவளுக்கு எது நித்தி போன பக்கம்; எந்தப் பக்கமாக நகர போராடுவதென்றே தெரியவில்லை. இந்த சொத்தைப் பல்லனை அவள் நுழையும் போதே பார்த்தாள். சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டாளா அல்லது அவன் இவளைத் தேடி உள்ளே வந்து விட்டானா! ஒன்றும் விளங்கவில்லை.

அவர்கள் இம்சை அதிகமாகவே, கையில் வைத்திருந்த கனத்த புத்தகத்தால், பதிலுக்கு தாக்கத் தொடங்கினாள். அவர்கள் மேலும் உற்சாகமடைந்து, புத்தகம், கைப்பை அனைத்தையும் பிடுங்கி எறிந்து விட்டு, அதிகமாக சீண்டினார்கள். இவளது அலறல் ஸ்பீக்கர் சத்தத்தில் ஒன்றுமில்லாமல் போனது. கத்தி கத்தியே சக்தி முழுவதும் போய் விட, கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்து கொண்டே வந்தாள். கூடாது.. இப்போது மயங்கிக் கீழே விழுந்து விட்டால் சோலி முடிந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாவது சமாளித்து விட்டால் போதும். நித்தி யார் உதவியுடனாவது வந்து காப்பாற்றி விடுவாள், என்ற நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருந்தவளின் எண்ணத்தில் தீ வைப்பது போல, நித்தியின் கதறல் வெகு அருகில் கேட்டது. அவளை விட நித்தி மோசமான நிலமையில் இருக்கிறாளெனப் புரிந்தது.

இப்போது சமக தலைவர் சரத்குமார் பேசுவார் என்ற அறிவிப்புடன் ஒலிப்பெருக்கி ஊமையானது. இது தான் சமயமென சக்தி முழுவதையும் ஒன்று திரட்டிய லிஸி 'யாராவது காப்பாத்துங்க. ப்ளீஸ்' என்று கத்த, அவளை சுற்றியிருந்தவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன், 'தலைவா' என்று மிகப் பெரிதாகக் கூக்குரலிட்டதில், அவள் குரல் ஒன்றுமில்லாமல் போனது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நல்லவன் கூடவா இல்லை? வாய்ப்பு கிடைக்காத வரை எல்லாருமே நல்லவர்கள் தான் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. பக்கத்தில் தானே கடல் இருக்கிறது. சுனாமி வந்து ஒரே அள்ளாய் இவனுகளை அள்ளிக் கொண்டு போகக் கூடாதா!

கூட்டத்திலிருந்த அந்த சொத்தைப் பல்லன், எப்போது அவன் பக்கம் தள்ளப் படுவாள். எங்கே தொட்டால் கிக் அதிகமாக இருக்கும் என்று பேராவலுடன் காத்திருந்தான். எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி இவன் தான் என்று முடிவு செய்து, அவனருகில் தள்ளப்பட்டதும் அவனை இறுக்க அணைத்துக் கொண்டு, 'ஸார்.. ப்ளீஸ் ஸார்.. என்னை எப்படியாவது வெளியே கொண்டு போய் விட்டுடுங்க ஸார்.. ப்ளீஸ்' என்று கதற, இதுவரை மன்சூரலிகான் போல கழுத்தை சாய்த்து கொண்டு லொக்கேஷன் தேடியவன், தமிழ் சினிமா க்ளைமேக்ஸ் வில்லன் போல திடீர் நல்லவனாகி 'த்தா.. டேய்.. உங்களைப் பெத்ததும் பொம்பளை தானடா' என்றவாறு ஒரு கையால் அவளை இறுக்கிக் கொண்டு, மறுகையால் மற்றவர்களைத் தள்ளி விட்டான்.

உதவியாக அவனது நண்பர்கள் போல இருவர், (அவர்களைத் தவிர) யாரும் தொட முடியாதபடி வந்து அவள் மீது அப்பிக் கொண்டனர். பாதுகாக்குறாங்களாமாம். தடவல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், நால்வரும் ஒருவழியாக அந்த ஜன சமூத்திரத்திலிருந்து வெளியே வந்து விழுந்தார்கள்.

அங்கே, தரையில் கால் வைக்கக் கூட இடமில்லாமல், ஒருவர் மீதொருவராக பலர் அமர்ந்திருந்தனர். அவன்களும் கையை வைத்துக் கொண்டு சும்மா இல்லை. நோண்டியவர்களையும், காலை வாறி அவளைக் கீழே அமிழ்த்தி விட முயன்றவர்களையும், சமாளித்தவாறு, மேடைக்கருகில் நின்று கொண்டிருந்த போலீஸைப் பார்த்து 'ஸார்.. ஸார்..' என கத்த, அவரோ அப்போது மேடையில் ஆற்று ஆற்று என்று உரையாற்றிக் கொண்டிருந்த சரத்குமாரைப் பார்க்க தான் அவள் பரவசமாக பாய்ந்து வருகிறாள் என்று நினைத்தாரோ என்னவோ லட்டியை ஆட்டி 'இந்தப் பக்கமெல்லாம் வரக் கூடாது. போ' என்பது போல் சைகை செய்தார்.

"ஹாஸ்டல் ஸார்.. ஹாஸ்டலுக்கு போகனும்" என்று எரிச்சலும், பதற்றமுமாக விடுதியை நோக்கிக் கையைக் காட்டினாள்.

அவர் மூன்று அடி உயரத்தில் இருந்த தடுப்பைக் காட்டி, அந்தப் பக்கம் வழியில்லை, வந்த வழியே திரும்பப் போய் பீச் பக்கமாக சுற்றி விடுதிக்கு போகச் சொல்லி ரூட் காட்டினார்.

போலீஸைப் பார்த்த தைரியத்தில் காலை கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு, நோண்டிக் கொண்டிருந்த ஒருவனை ஹை ஹீல்ஸ் செருப்பால் எட்டி உதைத்து, 'முண்டம்.. சோத்தை தானே திங்கிற' என்று கத்தினாள்.

இப்போது நிலைமை போலீஸுக்கு ஓரளவுக்கு புரிந்து போக, அங்கு நின்றபடியே விரல்களை அசைத்து வா என்பது போல் சைகை செய்தார். வந்து கொண்டிருந்த போதே ஒருவன் கை வைக்க, வேக நடையில் அங்கு வந்த போலீஸ் 'என்ன தைரியம் இருந்தா என் முன்னாலேயே கை வைப்ப' என்றபடி லட்டியால் அவன் தோள்பட்டையில் ஓங்கி ஒரு போடு போட்டார். நித்தி பற்றி சொல்ல, இரு காவலர்கள் உதவியுடன், முழுதாக கிழிந்து போன சட்டையும், தலைவிரி கோலமுமாக நித்தியும் வெளியே கொண்டு வரப்பட்டாள்.

நல்ல வேளையாக, இவ்வளவு களேபரத்தையும் பத்திரிக்கையாளர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. பார்த்திருந்தால் டமால் பனால் என்று, எதுகை மொகனையில் அவர்கள் பரம்பரையே நாண்டு கொண்டு சாகுமளவுக்கு ஏதாவது எழுதியிருப்பார்கள். தெய்வாதீனமாக அப்போது நயன்தாரா பேசவில்லை. பேசியிருந்தால் அந்த போலிஸ்காரர் கூட அவர்களை கண்டு கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே!

'சுத்தி வந்தா என்ன?’ என்று போலீஸ் லெக்சரைத் துவங்கினார். முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுக்காட்டுக்கு எப்படி போறதுனு தெரியும்!

உதவிய(?!) அந்த மூவருக்கும் நன்றி சொல்ல திரும்ப எத்தனித்தாள். அடுத்த நாள் பஞ்சு மிட்டாய் கலர் பேண்ட், கிளிப்பச்சை நிற சட்டை போட்டுக் கொண்டு கையில் ரோசாப்பூவுடன் மூவரும் க்யூவில் நிற்கும் காட்சி, மனக்கண்ணில் 70MMமில் ஓடியதால், அந்த எண்ணத்தைக் கைவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென விடுதிக்குள் நுழைந்தனர்.

அறையை தாழிட்டதும், அதற்கு மேலும் அழுகையை அடக்க முடியாத நித்தி 'நீ மட்டும் சரியான நேரத்தில வரலைனா என் நிலமை என்ன ஆயிருக்கும்? ஜஸ்ட் எஸ்கேப்ட்.. தெரியுமாடீ! நல்ல வேளை அப்படி எதுவும் நடந்திருந்தா செத்துருப்பேன்' என புலம்பலுடன் கதற ஆரம்பித்தாள்.

எவனோ நாதாரி செய்த தவறுக்கு இவள் ஏன் சாக வேண்டுமென லிஸிக்கு புரியவில்லை. ஹ்ம்ம்ம்.. ஏனென்று கேள்வி கேட்டால் தான் கண்ணகியாக முடியாது என்று மட்டும் புரிந்தது.

(எங்க குலசாமி மேல் சத்தியமாக உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

உரையாடல் போட்டிக்கான செந்தழலாரின் விமர்சனங்களுக்கு என் மதிப்பெண்

Wednesday 24 June, 2009

முதலில் இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு குட்டிக் கதை :

ஒரு ஊருல ரிவர்ஸ் ரிச்சர்ட் ரிவர்ஸ் ரிச்சர்ட்னு ஒருத்தன் இருந்தானாம். யாராவது எதையாவது செய்யக் கூடாதுனு சொல்லிட்டா போதும், அதுக்கு எதிர்மறையா, ஏட்டிக்கு போட்டியா ஏதாவது செஞ்சுட்டு தான் வேற வேலை பாப்பானாம். அவன் பொண்டாட்டி ரீட்டாவும் அவனைத் திருத்த எவ்வளவோ ட்ரை பண்ணி பாத்தாளாம். முடியல.

ஒரு நாள் அவனை பாழுங்கிணத்துப் பக்கம் கூட்டிட்டுப் போயி, 'பாத்துயா உள்ள உழுந்துடாத'னு சொன்னாளாம். உடனே ஓடிப் போயி சம்மர் சால்ட் அடிச்சு, கிணத்துக்குள்ள குதிச்சுட்டானாம். அவளும் 'ஒழிஞ்சதுடா சனி'னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டாளாம்.

*.*.*.*.*.*.*.*

'இதனை தொடர்ந்து விவாதித்து மொக்கை போடாதீங்க, ப்ளீஸ்'னு செந்தழலார் சொன்னாலும், நம்ம கடமையை நாம செஞ்சு தானே ஆவனும். மத்தபடி ரிவர்ஸ் ரிச்சர்ட் ஆவி, எனக்கு உள்ளார பூந்துடுச்சான்னெல்லாம் கேக்கக் கூடாது.

செந்தழலா
ரின் விமர்சனங்களுக்கு என் சீரியஸான விமர்சனம்

முதலிலேயே ஒரு உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறேன். போட்டிக்கான அனைத்துக் கதைகளையும் நான் படிக்கவில்லை. செந்தழலாரின் விமர்சனத்தால் தூண்டப்பட்டு, நான்கு கதைகளை முழுசாக படித்ததற்கே, நடுமண்டையில் நட்டுவாக்காலி போட்டது போல வாயில் நுரை தள்ளி விட்டது. (நான் எழுதிய கருமத்தையே திரும்பப் படிக்க எனக்குப் பொருமையில்லை)

இது இப்படியிருக்க, சந்திப்பிழைகள், தொந்திப் பிழைகள் என்று ஒன்று விடாமல் அக்கு வேறு ஆணி வேறாக, வாசித்த அத்தனை கதைகளையும் ஐந்து வரிகளுக்குக் குறையாமல், விமர்சித்திருக்கும் செந்தழலாருக்கு இரண்டு கைகளாலும் ஒரு மிகப் பெரிய சல்யூட்.

இத்தினியூண்டு கதைகளுக்கு அதிக மதிப்பெண்கள் கொடுத்திருப்பதைப் பார்க்கையில், 'ஏன்யா இவ்ளோ பெரிசா எழுதி என் டவுசரைக் கிழிக்கிறீங்க' என்று மற்றவர்களைப் பார்த்து விமர்சகர் கதறுவது போல் தோன்றுகிறது. (அதிஷாவின் ஒரு வரிக் கதையோ, அறிவிலியின் ஒரு எழுத்து கதையோ, சோம்பேறியின் ஒரு எழவும் இல்லாத கதையோ போட்டியில் பங்கு பெற்றிருந்தால் சென்டம் வாங்கியிருக்க வாய்ப்பிருக்கிறது)

விஜய் டீவி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் செய்வது போல, சில கதைகளை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து விட்டு, பெயில் மார்க் போட்டிருப்பதைப் பார்க்கையில், விமர்சனம் எழுதி முடித்த பின், சரக்கடித்து விட்டு மார்க் போட்டிருக்கிறாரோ என்ற எண்ணமெழுவதையும் தவிர்க்க இயலவில்லை.

(ஒருவேளை, கதைகளுக்கு மட்டும் மதிப்பெண்ணிடாமல், சைடிலுள்ள ஜூஜூ பொம்மை, ஐஷ்வர்யா ராய் புகைப்படங்களுக்கும் சேர்த்து மார்க் போட்டிருக்கிறாரோ என்று சந்தேகம் வருகிறது...)

விமர்சகர் வரிசைக்கிரகமாகத் தான் கதைகளைப் படித்து, விமர்சித்து வருகிறார் என்று தெரிந்தும், 'என் கதை இல்லையா? என் கதைக்கான விமர்சனம் எப்போ வரும்? என் கதையை படிச்சுட்டு கொஞ்சம் திட்டுங்களேன்' என்று பலரும் கேட்டிருப்பதே விமர்சகரின் வெற்றியைக் காட்டுகிறது.

அட்லீஸ்ட் அவருக்கு சுட்டி அனுப்பியிருப்பவர்கள் கதைகளின் விமர்சனங்களை மட்டுமாவது, அவரது வலைப்பூவில் ஏற்றினால், கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு ஒரு விளம்பரமும், என் போன்ற சோம்பேறி வாசகர்களுக்கு படிக்கும் ஆர்வமும் அதிகப்படும். நன்றி.

செந்தழலாரின் விமர்சனத்துக்கு என்னுடைய மதிப்பெண் 80 / 100

கடைசியாக இடுகைக்கு சம்மந்தமில்லாத ஒரு கவிதை(!?) :

ராவா குடிச்சவனும்
ராப்பகலா படிச்சவனும்
உருப்புட்டதா சரித்திரமே இல்ல.

ஸோ, சுமாரா படிங்க
சோடா ஊத்தி அடிங்க..

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

செந்தழலார் ஒவ்வொரு பகுதி விமர்சனத்தையும் உருவாக்க பல பாடாவதி கதைகளையும்(போர்னோ கதை உட்பட) படித்து ரத்தக் கண்ணீர் சிந்துகிறார். அதை எளிமையாக விமர்சனம் செய்திருக்கிறேன்.. செந்தழலாரின் விமர்சனம் அவரைப் பொறுத்தவரை சிறப்பானதே.. இது முழுக்க முழுக்க என்னுடைய பார்வை மட்டுமே...!!!

பொதுவாக பார்க்கும்போது, விமர்சனம் எழுதுகிறோம் என்றதும் செந்தழலார் அவர் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்வார் என்று கற்பனை செய்யத்தோன்றுகிறது,... அல்லது செம்மையான தழலுக்கு பஞ்சம்...

'எழுதியவனை பிஞ்ச செருப்பால அடிக்கலாம் என்று தோன்றுகிறது...', 'எழுத்தாளரை உச்சந்தலையில் நறுக்குன்னு கொட்டனும் போல வக்கிரமாக உள்ளது...' போன்ற ஒன்றிரண்டு வரிகளைத் தவிர்த்து முயற்சி கூட எடுக்கமாட்டேங்குறார் நம்ம ரெட் ஃபயர்...!!!

மற்ற பகுதிகளை நேரம் கிடைக்கும்போது விமர்சிப்பேன்...!!!! உங்கள் ஓட்டுகள், ப்ளஸ் கருத்துக்களை சொல்லிவிட்டு போங்க...!!!

ஒரு ட்ரம்ஸ் வயலின் வாசிக்கிறது அல்லது ஷ்ஷ்ஷங்கர் சேரனான கதை

Friday 19 June, 2009

எனக்கு பணக்காரர்கள் மீது வெறுப்பு வந்ததற்கு, இங்கே சொல்ல முடியாத பல காரணங்கள் இருந்தாலும், ஷங்கர் பட ஹீரோ போல, அவர்கள் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, அவர்கள் அனைவரையும் கொன்றுவிட வேண்டும் என்ற கொலை வெறி வர காரணம், இயக்குனர் ஷங்கர் அல்ல எங்க கனேசன் அண்னன் தான்.

ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறையின் போது தான் கனேசன் அண்னன் எனக்கு அறிமுகமானார். கிரிக்கெட் விளையாடும் போது பந்து அடிக்கடி இவர் வேலை பார்க்கும் கம்பெனிக்குள் போய் விழுந்து விடும். கேப்டனை விட அதி முக்கிய பொருப்பான பந்து பொறுக்கிப் போடும் பணியை நான் செய்து கொண்டிருந்ததால், அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் பேச்சு கிரிக்கெட்டை விட சுவாரசியமாக இருந்ததால், முழு நேரமாக அந்த கம்பெனியிலேயே, நாளுக்கு ஐந்து ரூபாய் சம்பளத்தில் எடுபிடி வேலையில் சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் போல் குழந்தைகள் உலகத்துக்குள் நுழைய முயற்சிக்காமல், அவர் உலகத்துக்கு என்னை இழுத்து சென்றார்.

எனக்கு நிறைய கெட்ட வார்த்தைகளும் அதற்கு அர்த்தமும் கற்றுத் தந்தார். என் வயதுக்கு புரியுமளவு A ஜோக்குகள் சொல்வார். அதில் எனக்கு மிகவும் பிடித்த, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் ஒன்றை மட்டும் சொல்கிறேன். இல்லை. வேண்டாம். என் மீது பகுத்தறிவாளர் என்ற முத்திரை குத்தப்படலாம்.

நாம இப்படி இருக்குறதுக்கு இந்தப் பணக்கார @&*$@*&கள் தான் காரணம் என்பார். எங்கள் ஊரைப் பொருத்த வரை அவர் சொல்வது உண்மை தான். இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை எங்கள் ஊரில் இரண்டே பிரிவினர் தான். 'நான் நாசமாய் போனாலும் பரவாயில்லை. மற்ற மூவரும் முன்னேற விட மாட்டேன்' என்று குல தெய்வம் கோவிலில் சத்தியம் செய்து கொண்ட நான்கு மேல் தட்டு பங்காளிகள். ஆட்டு மந்தைகள் போல அவர்களிடம் பதினைந்து ரூபாய்க்கு தினக்கூலி வேலை பார்த்த கீழ் தட்டு முட்டாள் மக்கள்.

(அந்த பதினைந்து ரூபாயையும் வடை, டீ என்று அன்றே செலவு செய்து விட்டு அவசரத் தேவைகளுக்கு வட்டிக்கு வாங்கிக் கொண்டிருப்பார்கள். கொஞ்சம் வசதியாக, சூப்பர்வைசர்களாக ஐம்பது, நூறு என்று வாங்குபவர்கள் சரக்கு, வடை என்று செலவழிப்பார்கள்)

எங்களுக்கு முந்தைய தலைமுறையில் தான் வெளிநாட்டில் கழிவறை கழுவியும், ஒட்டகத்தைக் குளிப்பாட்டியும் சில கீழ் வர்க்கத்தினர், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து நடுத்தர வர்க்கம் என்று புதிதாக ஒன்றைப் புகுத்தினர்.

என் அப்பா இதில் எந்த வகையிலும் சேராமல், பக்கத்து ஊரிலிருந்த மில்லில் மாத சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார். அவரது மேலாளரிடம் ஹிட்லர் பிச்சை எடுக்க வேண்டுமாம். ஒன்னுக்கு போனால் கூட அவரது மேலாளர் முறுக்கிய ஈர கயிற்றால் அடித்து இழுத்து வந்து, 'வேலையைப் பாருடா' என்பாராம். ஆனாலும் என் அப்பா உணர்ச்சி வசப்படாமல், எப்படி பணத்தைப் போல உழைப்பும் ஒரு மூலதனம் என்பதை லாஜிக்கலாக கம்யூனிஸ்ட்தனமாக விளக்குவார். அடிக்கடி மாநாடு, ஊர்வலம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு போய் பிரியானி வாங்கித் தருவார்.

ஆனால் கனேசன் அண்ணா எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. முதலாளிக்கு வாங்கிப் போகும் டீயில் கண்டதைக் கலப்பது, காயப் போடப் பட்டிருக்கும் முதலாளி மற்றும் அவர் மகன்களின் ஆடைகளில் செந்தட்டி எனப்படுமொரு வகை அரிப்பு ஏற்படுத்தும் செடியைத் தேய்த்து விடுவது என்று ஏதாவது செய்து அவர் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்வார்.

குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு (லஞ்சம் தர) பயந்து இருபது குழந்தைத் தொழிலாளர்களை பத்துக்கு பத்து அளவு கழிவறையில் அடைத்து வைத்து, அதில் நான்கு குழந்தைகள் நசுங்கி மூச்சு முட்டி இறந்தது போன்ற சம்பவங்களைப் பற்றி கேள்விப் பட்ட பிறகு அவர் செய்வது சரியென்றே பட்டது. வளர்ந்ததும் புலன் விசாரனை விஜயகாந்த் போல உடையணிந்து கொண்டு அந்த நாலு பேரையும் சுட்டுக் கொன்றுவிட வேண்டுமென முடிவு செய்து, அந்த வருட திருவிழாவிலிருந்தே ரெய்ன் கோட், ஷூ, கண்ணாடி, தொப்பி, தொப்பியில் மாட்டிக் கொள்ள இறகு எல்லாம் சேகரிக்க ஆரம்பித்தேன்.

ஆனால் கோடை விடுமுறை முடிந்து பள்ளி, டியூஷன், தேன் கூட்டுக்கு தீ வைத்து தேனெடுப்பது, பனியாரக் கிழவி வீட்டுக் கொல்லையில் கொடுக்காய்புளி பழம் திருடுவது, தவளை, கரட்டாண்டிகளைக் கொன்று விட்டு 'அய்யோ அண்ணே.. இப்படி அநியாயமா எங்களை விட்டுட்டுப் போயிட்டியே' என்று தலையிலடித்துக் கொண்டு அழுவது என்று வாழ்க்கை பிஸி ஆகி விட்டது.

என் அப்பாவும் வட்டி தொழில் ஆரம்பித்து, அது சக்கை போடு போட்டு நாங்களும் அந்தப் பணக்கார நாய்களில் ஒருவராகி விட்டதாலோ என்னவோ, ஷங்கர் பட ஹீரோவாகியிருக்க வேண்டிய நான், ஆட்டோக்ராஃப் பட ஹீரோவாகி உங்களுக்கு என் சுயசரிதையை சொல்லிக் கொண்டிருக்கிறேன் :-(

கதை முடிந்தது. இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான் பள்ளிப் படிப்பு முடிக்கும் போது தான் தெரிந்தது, பல வருடங்களுக்கு முன் கனேசண்ணனின் காதலி அந்த நான்கில் ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து கொண்டு, இவரைக் கழட்டி விட்டு விட்டாராம். அதற்குப் பிறகு இவர் திருமணமே செய்து கொள்ளவில்லையாம்.

உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து இதற்கு மேல் படிக்காதீர்கள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு தான் அவரைத் திருவிழாவில் பார்த்தேன். முன்னை விட கொஞ்சம் பூசினார் போல் இருந்தார். அக்னி சட்டி எடுத்துக் கொண்டு பல்லைக் கடித்தபடி பரவசமாக ஆடிக் கொண்டே வந்தவர், என்னைப் பார்த்ததும் ஆட்டத்தை நிறுத்தாமல் பல்லைக் கடித்தவாறு 'எப்ப வந்த? இங்க தான் இருக்கியா' என்று கேட்டார்.

எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது. (என்னை அடையாளம் கண்டு கொண்டார் என்பதற்காக அல்ல. எங்கள் உறவு அப்படி.) அவருக்கு கடவுள் பக்தி அறவே கிடையாது. அவரது A ஜோக்குகளில் அதிகம் சிக்கி சின்னாபின்னமாவது கடவுள்கள் தான். பொதுவாக எல்லாரையுமே ஏதாவது கெட்ட வார்த்தையை அடைமொழியாகக் கொண்டு தான் அழைப்பார் என்றாலும், கடவுளை அவருக்குத் தெரிந்ததிலேயே ஆகச் சிறந்த கெட்ட வார்த்தையால் தான் அழைப்பார்.

இப்போது கடவுள் நம்பிக்கை வந்திருக்கிறது. கொஞ்சம் ஊட்டமாகவும் இருக்கிறாரே என்று அப்போழுதே மைல்டாக சந்தேகம் வந்தது. இப்போது இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஊர்ஜிதமானது. இவரும் இவர் காதலியும் 'பழையபடி' ராசியாகி விட்டார்களாம். (நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அவருக்கு நாற்பது வயதிருக்கும். அந்தம்மாவைப் பற்றித் தெரியவில்லை).

இவர்கள் விஷயம் அந்தப் பணக்காரருக்குத் தெரிந்து அவர் கண்டிக்க, அந்த அம்மா அவரிடமிருந்து லம்பாக பணம், நகை என்று லவட்டிக் கொண்டு கனேசன் அண்ணனுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார்களாம். அந்தப் பணக்காரரும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம்! ஹூம்ம்ம்ம்.. ஹீரோ ஹீரோ தான்..

32. உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இதுவாமே?

Tuesday 16 June, 2009

முப்பதிரண்டு கேள்விகளில் சில எனக்கு உவப்பாக இல்லாததால், வேறு கேள்விகளால் ரீப்ளேஸ் செய்திருப்பதற்காக, தொடரை ஆரம்பித்த நிலாவும் அம்மாவும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை அழைத்த சென்ஷிக்கு மன்னிப்பு தமிழில் பிடிக்காத வார்த்தை என்பதால் அவரிடம் மாஃப் கரோ ஜி என்று கேட்டுக் கொள்கிறேன்.

கே : உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

சோம்பேறி : Its not that i'm lazy. Its just i dont care. இதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை அல்லது எனக்கு புரிய வைக்கத் தெரியவில்லை என்பதால், இந்தப் பெயர் அறவே பிடிக்கவில்லை. பிரபல பதிவர்ர்ர்ர் என்று பெயரை மாற்றிக் கொள்ள இருக்கிறேன்.

நிஜப் பெயர் : என் அப்பா, பிரபல பிண்ணனிப் பாடகருடைய குரலில் மயங்கி எனக்கு இந்தப் பெயர் வைத்தார்கள். எனக்கு பேச வந்ததும் என் குரலைக் கேட்டு அரண்டு எம்.ஆர்.ராதா என்று பெயரிட்டிருக்கலாம் என்று புலம்பினார்களாம்.

கே : உங்களுக்கும் நமீதாவுக்கும் ஒரு இது என்று ஒரு இது வலையுலகில் பரபரப்பாக இதாகிறதே! உண்மையா?

(வழிகிறார்) ஹி ஹி.. ஓரளவு நிஜம் தான்..

கே : எந்த அளவு என்று அளந்து காட்ட முடியுமா?

(உட மாட்டீங்களேடா டேய் என்பது போல் முறைக்கிறார்) எனக்கு அவர் மேல் ஒரு இது என்பது வரை உண்மை

கே : உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். செம ஸ்டைலிஷாக இருக்கும். என் உதவி இல்லாமல் யாராலும் என் எழுத்தைப் படித்து விட முடியாது. சமயங்களில் என்னாலேயே படிக்க முடியாது.

கே : நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

(கொஞ்சம் தள்ளி உட்கார்கிறார்) மாட்டேன்.

கே : நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நிச்சயம் மாட்டேன். ஹாய் ஹலோ என்பதுடன் நிறுத்திக் கொள்வேன். அதீத அன்பு காட்டி சாவடிப்பதில் நான் ஒரு தீவிரவாதி.

கே : கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் தான் பிடிக்கும். (அண்ணாந்து விட்டத்தைப் பார்க்கிறார்) மிகவும் பிடித்த ஒருவரின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு அலை வரும் போதும் குதித்தும், மூழ்கியும் அலைகளை எதிர்கொள்ளும் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.

உள்ளே போகும் அலைகளும் வெளிவரும் அலைகளும் சந்திக்கும் சீற்றமிகுந்த இடத்தில் நின்று கொண்டு, கீழே விழுந்து அலைகளால் இழுத்து செல்லப்படும் போதும் ஒருவர் கையை மற்றவர் விடாமல் இறுக பற்றிக் கொண்டிருப்பது...

கே : ('போதும். நிறுத்து' என்பது போல் இடை மறிக்கிறார்) முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

புன்னகை. அதன் விசாலத்தை வைத்து, அவர் எந்த அளவு நம் நட்பை விரும்பிகிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

கே : உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

பிடித்தது : இன்னும் மூன்று மாதங்கள் கழித்து சொல்கிறேன்.
பிடிக்காதது : இன்னும் ஆறு மாதங்கள் கழித்து சொல்கிறேன்.

கே : (ரொம்ப முக்கியம் எங்களுக்கு) யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

நமீதா மற்றும் ஆஸ்ட்ரேலியாவிலிருக்கும் என் யக்கா மவ.

கே : திமுக தில்லியில் 16 சீட்கள் பெற்றது பற்றி..

அடங்கொன்னியா.. நெசமாவா? இது தெரியாம போன வாரம் நான் டெல்லி போனப்போ அன்ரிசர்வேஷன்ல பாத்ரூம்ல உக்காந்துகிட்டு வந்தேனேப்பா.. தெரிஞ்சிருந்தா அவங்க கைல கால்ல விழுந்தாவது ஒரு சீட் கேட்டு வாங்கி, அதில ஒண்டிகிட்டு போயிருப்பேன்.

கே : (உன் அரசியல் அறிவுல தீயை வச்சு கொழுத்த என்பது போல் முறைக்கிறார்) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா? அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்? (டயர்டாகி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறார். தண்ணீர் குடிக்கிறார்.)

இல்லை. தெரியாது.

கே : வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வெளித் தோற்றம் எப்படி இருந்தால் என்ன? வெள்ளை நிற மையுடய பேனாவாக மாற விரும்புகிறேன். தவறுகளைத் திருத்த உதவும் என்பதால்.

கே : (தோடா.. தத்துவவியாதினு நெனப்பு மனசுல) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

சென்ஷியின் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா' என்ற கவிதை. ரொம்ப ஆழ்ந்து சிந்திக்க வைத்தது.

(படிக்காதவன் படத்தில் ரஜினி, ஆட்டுத் தலையுடன் குழந்தை பிறந்தது என்று கேள்விப் பட்டதும், ஆட்டுத் தலையோட எப்படி? முதல்ல ஆட்டோட எப்படி? என்று ஆழ்ந்து சிந்திப்பாரே அந்த ரீதியில்.)

கே : கந்தசாமி படத்தில் ஷ்ரேயா அணிந்த ஒரு உடையின் விலை ஒரு கோடியாமே!

(பெருமூச்சு விடுகிறார்) வர வர கர்சீப்பின் விலை அதிகமாகிக் கொண்டே வருகிறது.

கே : வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

டெல்லி, ஷிம்லா, டார்ஜிலிங் போயிருக்கிறேன். எது அதிகபட்ச தொலைவு என்று தெரியவில்லை. ஷிம்லா மலை உச்சியிலிருந்து சீனா தெரிந்ததால் அது தான் அதிகபட்ச தொலைவு என்று நினைக்கிறேன்.

கே : உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

வாழ்க்கையைப் பற்றிய பயத்தை (யதார்த்தத்தை) எனக்குள் திணிக்க முயல்வது. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னுடன் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே எல்லாரும் அட்வைஸ் அம்புஜங்களாகவும், அறிவுரை ஆறுமுகங்களாகவும் மாறி விடுகிறார்கள்)

கே : உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

யாரையாவது கலாய்க்காவிட்டால் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து விடுகிறது :-)

சீரியஸாக பதிலளிப்பது என்றால், ஏராளமான சாத்தான்கள் இருக்கின்றன. நமது நாதாரி சமுதாயம் எதையும் அவ்வளவு சீக்கிரம் தலை தூக்க விடுவதில்லை.

(எந்த நம்பிக்கையில் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் ரொம்ம்ம்ம்ப நல்லவன் என்ற நமக்கு தெரிந்த யாரும் நம்மைப் பற்றி நம்பாத ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கே சிலர் வலைப்பூ எழுதி வருகிறார்கள்(றோம்!?))

கே : எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

ஜாக்கி சான் படங்கள்

கே : (உஷாராகக் கொஞ்சம் நகர்ந்து உட்கார்கிறார்) உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

வெனிஸ். தமிழக வெனிஸ் அல்ல நிஜ வெனிஸ். (கிரேக்கத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன்)

கே : உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது : பல வருடங்களுக்குப் பிறகு சர்ப்ரைஸாக தொலைபேசி, 'நான் யாருனு கண்டுபுடி பாக்கலாம்' என்று கேட்கும் நண்பர்களின் குரல்.

பிடிக்காதது : பேருந்து, ஆட்டோக்களின் ஹாரன் சத்தங்களைக் கேட்கும் போது, டிரைவரின் பொடனியில் ஒரு போடு போடலாம் போல் இருக்கும். சமயத்தில் ரொம்ப டென்ஷனாகி இளைய தளபதி போல 'ஏஏஏஏஏஏஏய். சைலன்ஸ்' என்று கத்தி விடுவேன்.

கே : பிடித்த விளையாட்டு?

ஷக்தி குட்டியுடன் சொப்பு வைத்து விளையாடுவது.

கே : எப்படி விளையாடுவது?

முதலில் உங்களிடம் இருக்கும் அண்டா குண்டா மற்றும் இன்ன பிற பொம்மைகளையும் சா பூ த்ரீ அல்லது டிக் டாக் டோ போட்டு பிரித்துக் கொள்ளவும்.

அறையை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு பாதி எடுத்துக் கொண்டு, உங்களுக்குக் கிடைத்த பொருட்களால் உங்கள் இடத்தை அழகாக அடுக்கவும்.

அடுத்து 'அக்கா.. அக்கா.. நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம். எங்க வீட்டுக்கு வாங்களேன்' என்று மற்றவருக்கு அழைப்பு விடுக்கவும்.

கே : இப்படி மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறீரே. நீங்கள் எழுதியதை நீங்களே என்றாவது படித்துப் பார்ப்பதுண்டா?

நோ கமெண்ட்ஸ்.

கே : நீங்கள் பதிவர் ஆகாவிட்டால் என்ன ஆகியிருப்பீர்கள்?

ம்க்கும். நமீதாவின் குழந்தைக்கு அப்பா ஆகியிருப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே!

(கெக்கெபிக்கே என்று சிரிக்கிறார். உடம்பெல்லாம் புல்லரிக்கிறது) சரியாகக் காதில் விழவில்லை. இன்னொரு முறை சொல்ல முடியுமா?

கே : நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரவலாக பேசப்படுகிறதே என்று கேட்டேன்.

(ராகமாக) இன்னோரு முறை சொல்லுங்க..

கே : (காண்டாகி முறைக்கிறார். பல்லைக் கடித்தபடி) நீங்கள் தான் அடுத்த பதிவுலக சூப்பர் ஸ்டார் என்று பரலாக பேசப்படுகிறதே!

(ஆமானு சொன்னா அடி விழுமோ என்ற பயத்துடன்) இல்லை. இட்லிவடையின் தாக்கத்தில் இட்டாலிவடை என்று ஒரு பதிவர் வந்தது போல, சோம்பேறி என்ற என் பெயர் தாக்கத்தில் சோமாறி என்று ஒரு பதிவர் எப்போது வருகிறாரோ அன்று தான் நான் சூப்பர் ஸ்டார் என்று ஒப்புக் கொள்வேன்.

கே : நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

ஜாக்கி சான் - அழகாக அந்தரத்தில் பல்டி அடிப்பதால் (பல்டி அடித்துக் காட்டுகிறார்)

ரஜினி காந்த் - அழகாக அந்தர் பல்டி அடிக்கிறார் என்பதால் அல்ல.. சாரு நிவேதிதாவை அழைக்க இருப்பதால்..

சாரு நிவேதிதா - லக்கிலுக்கை அழைக்க இருப்பதால்..

நமீதா - என் ஃபாலோயர்கள் அனைவரையும் அழைக்க இருப்பதால்..

ரூம் போட்டு யோசிக்கனும் - உரையாடல் போட்டிக்காக

Saturday 6 June, 2009

அன்பு மக்களே! உரையாடல் போட்டிக்காக இதுவரை வெளிவந்த கதைகளில் நான்கைந்தைத் தவிர எதுவும் என்னைப் பெரிதாகக் கவரவில்லை. எழுதியவர்களைப் பற்றிய இமேஜை மறந்து விட்டு, எழுத்தைப் பார்த்து கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், நம்மைப் போன்ற இளம் பதிவர்களும் நன்றாக எழுதினால் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே நானும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்து விட்டேன். நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால், சைடிலுள்ள பொம்மையைக் க்ளிக்கி போட்டியின் விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம். அம்பூட்டு தூரம் போக சோம்பேறித்தனப் படுபவர்கள் இங்கே க்ளிக்கி விவரங்களை அறியலாம்.
இதுவரை சில பதிவர்கள் உரையாடல் போட்டிக்காக எழுதியுள்ள கதைகளை விட அவர்கள் வலைப்பூவில் எழுதப்பட்ட மற்ற கதைகள் அருமையாக உள்ளன. என்னைப் போன்ற இளம் (சரி.. சரி..) பதிவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்கள் வேண்டுமென்றே பாடாவதியாக எழுதியிருக்கிறார்களா, இல்லை போட்டியென்றால் இப்படிப்பட்ட கதை தான் சரியாக இருக்கும் என்று நினைத்து அப்படி எழுதியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் பாடாவதியாக எழுதிய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நன்றாக எழுதியிருக்கும் நான்கைந்து பேருக்கு 'கர்ர்ர்ர்ர்ர்ர்' மற்றும் 'நாங்களும் வருவோம்ல'

உரையாடல் போட்டிக்கு 'சிறுகதை எழுதுவது எப்படி' என்று ரூம் போட்டு யோசிப்பதற்காக, நாளை (ஞாயிறு) மதியம் நாகரீகத்தின் தொட்டில் வெனிஸுக்கு கிளம்புகிறேன். (நேரம் ஒத்துழைத்தால் நாகரீகக் கட்டில் பாங்காங்கிற்கு போகவும் எண்ணமுண்டு). வரும் போது யாராருக்கு செண்ட் பாட்டில், சாக்லேட், பிஸ்கோத்து வேணுமோ கை தூக்குங்க.. ஓகே டன். டாட்டா.. பை பை. சீ யூ..

பிரபல பதிவர் சக்கரை சுரேசும், புஜ்ஜுக்குட்டி இட்லிவடையும்

Friday 5 June, 2009

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு' என்று திருநர்சிம் ஸாரி திருவள்ளுவர் சொன்னதை நடைமுறைபடுத்தும் பொருட்டு, எனது இந்த ஐம்பதாவது (சரி.. சரி.. அம்பத்தி ஒன்னு) பதிவு முதல் பிரபல பதிவர் சக்கரை சுரேஷ் அவர்களின் ஐடியாவான சக்கரைக்கட்டியைப் போல் நானும் புஜ்ஜுக்குட்டி என்றொரு பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். அவர் கோபித்துக் கொண்டு கா விட்டு விட மாட்டார் என்று நம்புகிறேன். (கா விட்டாலும் பரவாயில்லை. காப்பி ரைட், கழுதைக் குட்டி என்று காந்தி தாத்தா நோட்டைக் கேட்காமல் இருந்தால் சரி)

அன்னாரைப் போலவே நானும் புதுபதிவர்களை அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தலாம் என்றிருக்கிறேன் (யாரிடமும் உதை படாமலிருக்கும் வரை). இந்த வார புஜ்ஜுக்குட்டியாக நான் அறிமுகப்படுத்தியிருப்பவர், சமீபத்தில் 1993 முதல், ஏழு வருடங்களாக எழுதிவரும் புத்தம்புதிய பதிவர் இட்லிவடை அவர்கள்.

உங்களுக்குப் வெளங்கும் படி இட்லிவடையைப் பற்றி வெளக்க வேண்டுமென்றால், இட்லிவடை ரமணா விஜயகாந்த் போல.

க்ளைமாக்ஸ் வரை விஜயகாந்த் அனானியாகவே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதைப் போல, க்ளைமாக்ஸ் வராததால் இன்னும் அனானியாகவே இருக்கிறார். புள்ளிவிவரத்தில் இவர் சூரப் புலி என்பது இவரது இந்த மற்றொரு வலைப்பூவைப் பார்த்தால் புரியும். போதாக்குறைக்கு 39 தொகுதிகளில் தேர்தல் டீம் என்று ரமணா போலவே ஒரு நெட்வொர்க் ஆரம்பித்திருக்கிறார்.

ரமணாவில் அரசு அதிகாரியான நாயகியின் மாமா மாற்றலானதை, கேப்டன் நாயகிக்கு முன்பே விஜயகாந்த் தெரிந்து வைத்திருப்பார். இட்லிவடை அவரை விட அப் டு டேட். எங்காவது கலவரம் நடந்தாலோ, யாராவது கட்சி மாறினாலோ இவரிடம் சொல்லி விட்டு தான் செய்வார்கள் போல; தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.

இதனாலேயே இட்லிவடையில் ஒருவர் ஜோதிடர் சுப்பையாவாகவோ, ஸ்வாமி ஓம்காராகவோ இருக்கலாமென்று எனக்கொரு சந்தேகம். ஆனால் பலர் இவர்களில் ஒருவர் என்றும் அன்புடன் பாலாவாகவோ அல்லது பாராவாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

மற்றபடி கேப்டன் போல இடது காலை சுவற்றில் உதைத்து, வலது காலால் சுழட்டி சுழட்டி அடிப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் 'பாயும் வேகம் ஜெட்லி தான்டா' என்று பன்ச் டயலாக் சொல்வதால் அதற்கும் சாத்தியமிருப்பதாகவே தோன்றுகிறது. (ஸோ இத்துடன் மீ த எஸ்கேப்பூ)

தமிழ்மண நிர்வாகிகளுக்கு: இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

காதல் அனுபவம் அல்லது புனைவு (அபியும் நானும்)

Tuesday 2 June, 2009

ஷா-க்கு அடுத்து எனக்கு நெருக்கமான நண்பன் அபி (பார்ப்பதற்க்கு அபிஷேக் பச்சன் போல் வாட்ட சாட்டமாக இருப்பான்). +2 முடித்ததும் ஒரு உருப்படாத கோர்ஸ் எடுத்து விட்டு, உள்ளூருலேயே 7000 ரூபாய் சம்பளத்தில் ஒரு உருப்படாத வேலையில் இருக்கிறான். எங்கள் ஊரிலிருந்து இரண்டு ஸ்டாப் தள்ளி தான் இவன் அலுவலகம். இவனை வழியனுப்புவது போல் பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளைப் பார்க்க காலை 8.30க்கு அபியுடன் நான், ஷா, பீர் மூவரும் பேருந்து நிலையத்தில் ஆஜராகி விடுவோம்.

ஷா ஊரில் பிள்ளைகளே இல்லாதது போல் தினமும், அவன் ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு (குறுக்கு வழியில் 7 கிமீ, பேருந்தில் வந்தால் 18 கிமீ) பிரயாணம் செய்து தவறாமல் வந்து விடுவான். ஷா என்ற ஷாருக் என்ற பொறம்போக்கு மீது நான் இப்போது பெருங் காண்டில் இருப்பதால், கெட்ட வார்த்தை பிரயோகத்தைத் தவிர்க்கும் பொருட்டு அவனைப் பற்றி வேறொரு கூலான சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

வழக்கமாக, காலை 8 மணிக்கு எங்கள் வீட்டில் நான் ஷா இருவரும் சாப்பிட்டு விட்டு, பீர் வீட்டில் மூவரும் காப்பி அருந்தி விட்டு, அபி வீட்டில் ஐவரும்(அபி அப்பாவையும் சேர்த்து. அநியாயத்திற்கு ஜாலியான மனிதர்) தம்மடித்து விட்டு, நால்வரும் பேருந்து நிலையத்தை அடையும் போது 8.30 ஆகி விடும்.

அபி மாநிறத்துக்கு ஒரு படி குறைவாக இருப்பான். மிக மிக வசீகரமான கண்கள். அதனால் தானோ என்னவோ எல்லாப் பெண்களையும் கண்களால் மட்டுமே காதலிப்பான். இவன் டாவடிக்கும் பெண்கள் பெயர் எல்லாம் லட்சுமி என்றே முடியும். தற்செயலாகத் தான் அப்படி அமைந்து விடுகிறது என்று தலையிலடித்து சத்தியம் செய்கிறான். உண்மையாகத் தான் இருக்க வேண்டும். பெரும்பாலும் பேருந்தில் தொங்கிக் கொண்டும், திருவிழா கூட்டத்திலும், மிகச் சில சமயங்களில் அலுவலகங்களிலும் காதலிக்கும் அவனுக்கு அந்தப் பெண்களின் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லாதது.

இதுவரை எந்தப் பெண்ணிடமும் இவன் போய் காதலை சொன்னது இல்லை. அவர்கள் வந்து சொல்லவும் இவன் சந்தர்ப்பம் கொடுத்தது இல்லை. அந்தப் பெண் திருமண அழைப்பிதழை இவன் கையில் கொடுத்து விட்டு, 'தயவு செஞ்சு கல்யாணத்துக்கு வந்துடாதீங்க' என்று அழுது கொண்டே சொல்வது தான் அவர்கள் பேசிக் கொள்ளும் முதலும் கடைசியுமான வார்த்தையுமாக இருக்கும்.

கொஞ்சம் தைரியமான பெண்ணென்றால், 'வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது. நாம் ஓடிப் போய் விடலாமா' என்று கேட்டே விடுவார்கள். அபி தங்கைக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இருபத்தைந்து பவுன் நகையும் போட்டு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அதில் பாதியையாவது தன் திருமணத்தில் வசூலித்து விட வேண்டும் என்ற தீர்மாணத்தில் இருப்பதால், அந்தப் பெண் மனம் புண் படாத அளவு, நயமாக எடுத்து சொல்லி திருப்பி அனுப்பி விடுவான். அடுத்த நாளிலிருந்து வேறு பெண்ணைப் பார்க்க ஆரம்பித்து விடுவான்.

காதலைப் புத்தகத்தோடும், பெண்களை அதன் சேப்டர்களுடனும் ஒப்பிட்டு பேசுவான். ஏன் யாரையும் காதலிப்பதில்லை என்று கேட்டால், 'புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தே தலைகீழாக படிக்க ஆரம்பித்து விட்டேன்' என்பான்.

ஒரு நாள் எங்கள் வீட்டில் யாருமில்லாத போது பீர் அடித்த படி, ஷா அவனுடைய குஜால் கதைகளை சொல்லிக் கொண்டிருந்த போது வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல், நீ ஏன் அடுத்த கட்டத்துக்கு போவதில்லை என்று அபியிடம் கேட்டு விட்டேன்.

அதற்கு அபி, 'ஒரு புள்ளையைப் பிடிச்சிருந்தா பாக்கறேன். நான் பாக்குறது தெரிஞ்சதும் அந்தப் புள்ள பண்ற அலும்பலை ரசிக்கிறேன். அதைக் காதல்னு நினைச்சுகிட்டு என் கிட்ட வந்து பேசினா, அடுத்த நாள் வேற புள்ளையைப் பாக்க ஆரம்பிக்கிறேன். மத்தபடி, ஷா போல அடுத்த கட்டமெல்லாம் வேணும்னா நான் ரூட்டு கிட்ட போய்க்குவேன்' என்றான்.

(ரூட் என்பது பொதுவாக பாலியல் தொழிலாளிகளைக் குறிக்கும் எங்கள் வட்டாரச் சொல்லா, அல்லது எங்கள் ஊர் பிரபல பாலியல் தொழிலாளி பரமேஷ்வரி அக்காவின் செல்லப் பெயரா என்று எனக்குத் தெரியவில்லை.)

எனக்குத் தெரிந்து, ஷா அவனுடன் பழகும் எந்தப் பெண்ணிடமும் அந்த அளவு வரம்பு மீறியதில்லை. அவன் தோழிகளை ரூட்டுடன் ஒப்பிட்டு பேசியதும் ஷாக்கு குப்பென கோபம் வந்து விட்டது. கால் கால் என்று கத்த ஆரம்பித்து விட்டான். ஷாக்கு ஆரம்பத்திலிருந்தே அபியின் இந்தப் போக்கு பிடிக்காது. இப்போது எல்லாக் கோபத்தையும் ஒட்டு மொத்தமாகக் கொட்டி விட்டான்.

அபியை அவ்வளவு எளிதில் கோபப்படுத்த முடியாது. புன்னகை மாறாமல் 'கூல் மச்சி' என்று சொல்லி வந்தவன், 'காதலிக்க வைச்சு கழுத்தறுக்குற sadist நீ. என்னைப் பத்தி பேச வந்துட்ட' என்று ஷா சொன்னதும் பொருமையை இழந்து விட்டான்.

அவனும் பதிலுக்கு விளாச ஆரம்பித்து விட்டான். இங்கு எழுத முடியாத அளவு காரசாரமாக சண்டையிட்டுக் கொண்டார்கள். அடித்துக் கொள்வார்களோ என்று பயம் வந்து விட்டது எனக்கு. 'பணக்காரத் திமிருல நாளுக்கு ஒரு புள்ள கூட சுத்துற' என்ற ரீதியில் அபி ஏதோ சொன்னதும், கோபம் தாங்காமல் பீர் பாட்டில்களை உடைத்து விட்டு மறுவார்த்தை பேசாமல் வேகமாகக் கிளம்பி விட்டான். ஓவர் மப்பில் பைக்கை ஏதாவது லாரியில் விட்டு விடுவானோ என்ற பயத்தில், அபியிடம் கை காட்டிவிட்டு ஷாவைக் கொண்டு போய் வீட்டில் விட்டு வந்தேன்.

அபியை சேடிஸ்ட் என்ற வார்த்தையும், ஷாவை பணக்காரத் திமிர் என்ற வார்த்தையும் அதிகம் காயப்படுத்தி விட்டன. இந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் பேசிக் கொள்வதில்லை. நானும் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவதில்லை. நான் அவர்களை சந்திப்பதும் வெகுவாகக் குறைந்து விட்டது. அவர்கள் பிரிந்திருக்காவிட்டால் ஷாவும் என் ஆள் கேட்டியைக் காதலித்திருக்க மாட்டான். நானும் வலைப்பூ எழுத வந்திருக்க மாட்டேன்.

ஷா எத்தனையோ பெண்களிடம் வரம்பு மீறியிருந்தாலும் 'இது காதல் அல்ல' என்று ஆரம்பத்திலேயே தெளிவாக சொல்லி விடுவான். ஆனால் அபி எந்தப் பெண்ணின் ஆடை நுனியைக் கூட இதுவரைத் தொட்டதில்லை என்றாலும், அவன் பார்க்கும் பார்வையும், புன்னகையையும் எந்தப் பெண்ணும் காதல் என்று அர்த்தம் செய்து கொள்ளும்படி தான் இருக்கும்.

இருவரில் யார் மீது அதிகம் தவறோ, அவனை சமாதானப்படுத்தி மற்றவனுடன் பேச வைக்க முயற்ச்சிக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் யார் மீது அதிகம் தவறென்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன்.

இதன் முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்.

செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா

Friday 29 May, 2009

நீங்கள் 'ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது' என்று நினைப்பவரா?


காலடியில் விழுந்து கிடக்கும் தொலைக்காட்சி ரிமோட்டை குனிந்து எடுக்க சோம்பேறித்தனப்பட்டு, பக்கத்து ரூமிலிருப்பவரை தொலை பேசி அழைப்பவரா?


வாந்தியா, வயிற்றுப்போக்கா? (சே.. ஸாரி.. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு.. கம்மிங் டு த பாய்ன்ட்..)

அழைப்பு மணி அடித்தால் தூக்கத்தை துறந்து விட்டு, எழுந்து போய் கதவைத் திறக்க வேண்டியிருக்கிறதே என்று ரூம் போட்டு அழுபவரா? இது உங்களுக்கான பதிவு தான்.


உங்களுக்கு மேற்கூறிய தகுதிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை. 'ஏன் படிச்ச' என்று யாரும் பொடனியில் வந்து அடிக்கப் போவதில்லை. இது உங்களுக்கான பதிவும் தான்.

அழைப்பு மணியை அழுத்தியவர்களுக்கேற்ற பாடலை ஒலிபரப்பும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், யாராருக்கு என்னென்ன பாடலை ஒலிபரப்பலாம்?

1) சர்க்கரை, காபிப் பொடி, நியூஸ் பேப்பர் கடன் வாங்க வரும்(பெரும்பாலும் திரும்ப வராது) பக்கத்து வீட்டு மாமிகள் அழைப்பு மணியை அழுத்தியதும் 'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே..' பாடல் ஒலிக்கும் படி செய்யலாம்.

இது ரோஷக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். சிலர் 'அட! இந்த காலிங் பெல் நல்லாருக்கே! எங்க வீட்டுல ரெண்டு நாள் மாட்டிட்டு திருப்பிக் குடுத்திடறேனே!' என்று சொல்லி அதையும் கடனாக வாங்கிக் கொண்டு போகும் அபாயமும் நேரலாம்.

2) மளிகை, பால், கேபிள் வாடகை வசூலிக்க வருபவர்களுக்கு 'ஆயிரம். ரெண்டாயிரம். பிம்பிலிக்கி பியாபி.. மாமா பிஸ்கோத்து' என்று உங்கள் குரலிலேயே ஏதாவது பதிவு செய்து ஒலிபரப்பலாம்.

3) விற்பனைப் பிரதிநிதிகள் வந்தால் 'ரேய்.. ஒதலவா.. நேனே சந்திரமுகி.. லக லக லக லக..' ஆணாக இருந்தால் இதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

விற்பனைப் பிரதிநிதி பெண்ணாக இருந்தால் 'ரா ரா.. சரசக்கு ரா ரா' என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப ஒலிபரப்பலாம்.

4) வேண்டா விருந்தாளி வந்தால் 'போயா உன் மூஞ்சியில கைய வைக்க! உன் நெஞ்சிலுள்ள மஞ்சா சோத்தில் நெய்யை வைக்க'(சத்தியமாக இப்படி ஒரு பாடல் இருக்கிறது)

அதே விருந்தாளி அழகான தனது மகளுடன் வந்திருந்தால் 'மணமகளே.. மருமகளே வா. வா.'

5) மாரியம்மன் கோவிலில் கூழ் ஊத்துவதற்க்கு நிதி கேட்டு வருபவர்களுக்கு 'இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' பாடலை தேர்வு செய்யலாம். இஸ்லாமியராக மதம் மாறி விட்டோம் போல என்று நாலு வசவு வைது விட்டு போய் விடுவார்கள்.

ஆலய நிதி சம்மந்தமாக வரும் மற்ற மதத்தினருக்கு 'செல்லாத்தா.. டௌண்டு டன் டன்.. செல்ல மாரியாத்தா டௌண்டு டன் டன்..' பாடலை ஒலிபரப்பலாம். பாடலுக்கு முன்பு குலவை சத்தமும் இருந்தால் கூடுதல் நலம்.

6) நம் தூக்கத்தைக் கெடுப்பதற்காக, அழைப்பு மணியை அழுத்தி விட்டு ஓடி விடும் பக்கத்து வீட்டு வாண்டுக்கு 'குட்டிப் பிசாசே.. குட்டிப் பிசாசே.. உன்னால தூங்கலயே!'

அந்த வாண்டு மீது ஓங்கி அப்பும் அளவு கோபம் வந்தால் டி.ஆரின் 'ங்கொப்பன் மவனே! ங்கொப்பன் மவனே! டண்டனக்கா.. ஏ.. டண்டனக்கா..' என்ற பாடலைத் தேர்வு செய்யலாம்.

எப்பூடீ?

முக்கிய அறிவிப்பு : அன்பு மக்களே! சங்கமம் பேருந்து போட்டிக்காக பொள்ளாச்சி டூ மதுரை என்ற படைப்பை மிகச் சில மாற்றங்களுடன் அனுப்பியிருக்கிறேன். இந்த http://tamil.blogkut.com/contest/poll/poll0409.php லிங்கில் போய் அதைப் படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிக்கலாம்.

வோட் போடாதவங்க வோட் போடுங்க.. ஏற்கனவே வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, தெரியாத்தனமா 5க்கு பதிலா 1ல வோட் பண்ணிட்டேன்னு சொல்றவங்க, கள்ள வோட் போடுங்க.. (சும்மா.. லுலுலாகாட்டிக்கும்) நன்றி..

முக்கிய பின்குறிப்பு : போட்டியில் ஜெயிக்கும் மூன்று படைப்புகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும்

லூஸாப்பா நீங்கல்லாம்?

Tuesday 26 May, 2009

நேத்து எங்க சித்தப்பாவோட ட்ரீட்மெண்ட்டுக்காக ஒரு மெண்டல் ஹாஸ்பிட்டல் போயிருந்தோம். என் சித்தப்பா பார்க்க அசப்பில் பைத்தியக்காரன் போல் இருப்பார். நோ.. நோ.. ஆக்சுவலி ஐ மீன் தோழமைக்குரிய பதிவர் திரு பைத்தியக்காரன் அவர்கள் போல் இருப்பார் என்று சொல்ல வந்தேன்.

எங்க சித்தப்பா சாதாரணமா நார்மலா தான் இருப்பார். ஆனா குழந்தைகளைப் பாத்தா வெறி புடிச்சுடும். (சில வகை பெண்களைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும் :-) அது வேற விஷயம்). என் சித்தப்பா ஏன் அப்படி ஆனாங்க அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா விவாகரத்து. இப்போ வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க.

பெரும்பாலும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு வர்றவங்க, ஆரம்ப கட்ட நோயாளிகளா தான் இருப்பாங்க. ஆனா நேத்து ஹாஸ்பிடல்ல நான் பாத்த பையன் (பத்து வயசு இருக்கும்) ரொம்ப அப்நார்மலா பிஹேவ் பண்ணிட்டு இருந்தான். சேர் மேல ஏறி நிக்குறது. திடீர்னு வித்தியாசமான சத்தம் குடுக்குறது, பக்கத்துல இருக்குறவங்க பையை நோண்டுறது, முறைச்சுப் பாக்குற அவங்க முகத்துக்கு ரொம்ப பக்கத்துல இவன் முகத்தை கொண்டு போய் அவங்களை இமிடேட் பண்றதுனு ராவடி பண்ணிட்டு இருந்தான்.

அவனைக் கூட்டிட்டு வந்த பெரியவர்கிட்ட கம்பவுண்டர் போய் 'கொஞ்சம் உங்க பையனை பாத்துக்கோங்க ஸார்'னு புகார் பண்ணினாரு. கம்பவுண்டர் பேசி முடிக்கிற வரை இதுவரை நடந்த எல்லாத்தையும் அமைதியா பாத்துகிட்டு இருந்தவர், திடீர்னு கம்பவுண்டரைத் தள்ளி விட்டுட்டு ஓட்டமா ஓடிப்போய் அவன் தலையில நச் நச்னு குட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்ததும், சத்தமா கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு, கட்டிப் பிடிச்சு கொஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டு பேர் முகமுமே கொஞ்சம் டிஸ்லெக்சிக்கா தான் இருந்தது.

(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க அது மேல க்ளிக்காதீங்க. அதோட சைஸே அவ்ளோ தான்.)

நான் என் சித்தப்பாகிட்ட 'இந்த ரெண்டு பேருல யார் லூசுனு கண்டுபுடி பாக்கலாம்'னு சொன்னேன். பக்கத்துல இருந்து பாத்துகிட்டிருந்த ஒரு அம்மா 'எக்ஸ்க்யூஸ் மீ'னு கேட்டாங்க. ஒரு ஆர்வத்துல நானும் அதையே அவங்ககிட்டயும் ரிப்பீட்டிட்டு வாயைக் கூட மூடல. அவங்க 'வாட் த ஹெல்' ஆச்சு போச்சுனு ஹாஸ்பிட்டலே அதிர்ற அளவு கத்த ஆரம்பிச்சுட்டாங்க.

சத்தத்தைக் கேட்டுட்டு ஓடி வந்த அந்த so called லூஸுங்க ரெண்டு பேரும் சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சது. அவங்க ரெண்டு பேரும் இந்த அம்மாவோட மகனும் அப்பாவுமாம். இந்த அம்மாவுக்கு ஹிஸ்டீரியாவாம். அதாவது சின்ன விஷயத்துக்குக் கூட பயங்கரமா கோபப்பட்டு கத்துவாங்களாம். அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்க தான் அப்பாவும் புள்ளையும் இவங்களைக் கூட்டிட்டு வந்திருக்காங்களாம். அட கொய்யாக்களா!!

எல்லாரும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்தம்மா அடங்குற மாதிரி தெரியல. ஸாரி கேட்டப்புறமும் விடாம, காது பிச்சுக்கற அளவு அம்பது டெஸிபெல்ல அலற ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு வந்த ஆத்திரத்துல ரத்தம் குப்புனு பாதத்துல இருந்து உச்சந்தலைக்கு ஏறி, அந்தம்மா கொறவளைய கடிச்சுடலாம்னு அவங்க மேல பாயப் போகும் போது, ஒரு நாலஞ்சு பேர் ஓடி வந்து என்னை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க. நர்ஸ் அக்கா அவங்க கைக்கு கிடைச்ச இடத்துல சதக்னு ஊசியைக் குத்திட்டாங்க.

பதறி வாயடைச்சுப் போய் நின்னுகிட்டிருந்த அந்தம்மாகிட்ட எங்க சித்தப்பா 'என் மகன் கொஞ்சம் லூசு. சாதாரணமா நார்மலா தான் இருப்பான். ஆனா சத்தமா கத்துற பெண்களைப் பாத்தா வெறி புடிச்சுடும். (குழந்தைகளைப் பாத்தா எனக்கும் பைத்தியம் பிடிக்கும்:-( அது வேற விஷயம்)

அவன் ஏன் அப்படி ஆனான் அப்படிங்கறது ஐநூறு பக்க நாவல் எழுதுற அளவு பெரிய விஷயம். ஷார்ட்டா சொல்லனும்னா காதல் தோல்வி. வியாதி ஆரம்ப கட்டத்துல இருக்குறதுனால ஈஸியா குணப்படுத்திடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்க' அப்படினு சொன்னது என் காதுல விழல அல்லது காதுல விழுந்ததுனு நான் நம்ப விரும்பல.

'அந்த' குஜிலி ஆண் பதிவர் இவர்தான் - ஆதாரங்களுடன் Exclusive

Monday 25 May, 2009

முன் குறிப்பு : இது ரொம்ப சீரியஸான பதிவு. எனவே முகத்தை நாயகன் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. அவர்கள் போல சீரியஸாக வைத்துக் கொண்டு, அரிக்காவிட்டாலும் தாடையை சொறிந்து கொண்டு படிக்கவும் (பட்ஜெட் இடமளித்தால் ஒரு பஞ்சுமிட்டாய் கலர் சட்டை மற்றும் கூளிங் க்ளாஸுடன் படிக்கவும்..)

ஒரு இடத்தில் திருட்டு நடந்து விட்டால், முதலில் 'எவன்டா எடுத்தது?' என்று சவுண்டு விடுவது அந்த திருடனாகத் தான் இருக்கும். யெஸ்.பாலபாரதியின் பதிவிலும் சரி, குசும்பனின் பதிவிலும் சரி உணர்ச்சிவசப்பட்டு ஓவராக சவுண்டு விட்டது, நாகேஷ் படத்தை ப்ரொபைலில் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் வேலை செய்து வரும் 'அந்த' பதிவர் தான்.

(இதற்கு முன் 'வாயில் உமிழ்ந்தால் முத்தமா?' என்று அன்னியன் ரெமோ ரேஞ்சுக்கு பீல் பண்ணி கவிதையெழுதி வந்தவர் சமீப காலமாக 'வாஷ் பேஸினில் உமிழ்ந்தால் குத்தமா?' என்று அம்பி ரேஞ்சுக்கு பம்முகிறார்.)

க்ரைம் பிரான்ச் உயர் அதிகாரி என்ற முறையில் சொல்கிறேன் (யாருக்குத் தெரியப் போவுது) அணைத்து குற்றவாளிகளிடமும் காணப்படும் பொதுவான குணங்களில் மற்றொன்று, 'எங்கப்பன் குதுருக்குள்ள இல்லீங்கோ' என்று கூவுவது தான். சமீப காலமாக இவரது இடுகைகளில் பின்வரும் தொனிகள் தேவையில்லாமல் தினிக்கப்படுகின்றன என்று கீனாக அப்ஸர்வ் செய்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

1) எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. சத்தியமாக குழந்தைகள் எதுவும் இல்லை. (இனியும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. ஆனால் எங்கள் குடும்ப ஜோதிடர் கொடுத்த நீலக்கல் மோதிரத்தைப் போட்டுக் கொண்டால் இன்னும் ஏழு மாதத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லியிருக்கிறார்)

2) என்னிடம் தொலைபேசியோ, கைபேசியோ, கால்பேசியோ கிடையாது. இனி வாங்கினாலும் உபயோகிப்பதாக இல்லை. (உபயோகிக்கவும் தெரியாது. நான் அஞ்சாப்பையே ஆறு வருஷம் படிச்சேன். தவிர, சில வருடங்களுக்கு முன் வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருண்டுகொண்டிருந்த ஒரு உருவமில்லாத உருண்டையை எடுத்ததிலிருந்தே வாய் பேச வருவதில்லை)

3) இதுவரை நடந்த எந்த பதிவர் சந்திப்பிலும் நான் கலந்து கொண்டதில்லை. கலந்து கொண்ட சந்திப்புகளில் எந்தப் பதிவரையும் சந்தித்ததில்லை. (சென்னை பதிவர் சந்திப்புக்கு நான் சென்ற போது மெரினாவில் தண்ணியில்லா குட்டைக்கு அருகில் நிற்பதாக சொல்லப்படும் காந்தித் தாத்தா கூட கம்பை ஊன்றியவாறு டி.ஐ.ஜி அலுவலகம் பக்கமாகப் போய் விட்டார்)

4) என்னிடம் கணினி இல்லை. பொருளாதார வீழ்ச்சி காரணமாக எங்கள் அலுவலகத்திலிருந்த கணினிகள் பிடுங்கப் பட்டு கால்குலேட்டரும், டைப்ரைட்டரும் திணிக்கப்பட்டுள்ளன. எங்க ஊர் பிரவுசிங் செண்டரில் உள்ள கணினியில் இனைய வசதி கிடையாது. தற்செயலாக கிடைக்கும் கணினிகளில் யாருக்கும் மெயில் அனுப்புவதில்லை. உரையாடியிலும் உரையாடுவதில்லை.

(முக்கியமாக ஏதாவது பெண்களின் மெயில் ஐடி தென்பட்டால், என் நாட்ரான் ஆன்டி(anti அல்ல aunty) வைரஸ் கீய்ங்க் கீய்ங்க் என்று அலறி கணினியை ரீ-ஸ்டார்ட் செய்து விடும்)



அநியாயத்தை பாத்தீங்களா மக்களே! நான் கொடுத்திருக்கும் க்ளூக்களை வைத்து உங்களால் அவர் யாரென்று கண்டுபிடிக்க முடிந்திருக்கும். இல்லையென்றால், கடைசியாக ஒரே ஒரு க்ளூ.. அவர் பெயர் செ-யில் ஆரம்பித்து ஷி யில் முடியும். நடுவில் ன் தவிர ஒன்றுமே கிடையாது.

இது தவிர வேறு தடயங்களை நீங்கள் கண்டுபிடித்தால், தயவுசெய்து நான் வாழ் நாள் உறுப்பினராக இருக்கும் முடிஞ்சு போனதை சொறிஞ்சு விடுவோர் சங்கத்திற்கோ, வெந்த புண்ணில் விரல் பாய்ச்சுவோர் சங்கத்திற்கோ, வினையை வெத்தலை பாக்கு வச்சு விருந்துக்கு அழைப்போர் சங்கத்திற்கோ, sombery@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

உபயோகமான துப்பு கொடுப்பவர்களுக்கு, (சங்கங்கள் இப்போது அபராததில் ஓடிக் கொண்டிருப்பதால்) சங்கத்தில் அமௌண்ட் சேர்ந்ததும் பரிசுப் பொருட்கள் உடனடியாக அனுப்பப்படும்.

*.*.*.*.*.*.*.*.*.*.*.*.*

பின்னெச்சரிக்கை (சென்ஷிக்கு மட்டும்) - த பாரு சென்ஷி நைனா.. மருவாதையா நான் கேட்ட Almond சாக்லேட்டை 24 அவர்ஸுக்குள்ள அனுப்பி வைக்கிற. இல்லாங்காட்டி தாம்பரத்துல தாலி அறுத்தது, ட்வின் டவர்ஸை ப்ளைட் வுட்டு இடிச்சது, அல்லாத்தையும் செஞ்சது நீ தாங்கற உண்மையையும் போட்டு உடைக்க வேண்டியது வரும். சாக்கிரத.

Sin cityயும் நான் கடவுளும்

Wednesday 20 May, 2009

படத்தின் இறுதிக் காட்சி முடிந்து கார்ட் போட ஆரம்பித்ததும், திரும்பவும் முதல் காட்சியிலிருந்து பார்க்கத் தூண்டிய முதல் படம் சின் சிட்டி தான் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே எனக்கு வன்முறையைப் பார்த்து பயமில்லை. அருவருப்பு தான் என்று இந்தப் படத்தைப் பார்த்த பிறகு தான் புரிந்தது. படம் முழுக்க அவ்வளவு ரசனைக்குரிய வன்முறை.

இதன் திரைக்கதையில் பயன்படுத்தி இருக்கும் உத்தியை, Occurance of the same event என்று சொல்வதா, life cycle என்பதா என்று புரியவில்லை. (திருமலையில் மாமனாரைப் பார்த்து விஜய் சொல்லும் 'டேய்.. வாழ்கை ஒரு வட்டம்டா. மேல இருக்குறவன் கீழ வருவான்' அல்ல. ஓம் ஷாந்தி ஓமில் ஷாருக் சொல்லும் தொடங்கிய இடத்திற்கு திரும்ப வரும் வாழ்கை வட்டம்)

கதை மொத்தம் (ஒன்றுக்கொன்று சம்மந்தப்பட்ட, ஆனால் ஒன்றை ஒன்று பாதிக்காத) நான்கு ட்ராக்களில் பயனிக்கிறது.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் ஒரு நிமிடக் காதல்.

2) ஒரு நேர்மையான போலீஸ் கிழவருக்கும் அவரால் காப்பாற்றப்பட்ட, காப்பாற்றப்படும் குழந்தைக்குமான காதல்.

3) சந்தித்து சில மணி நேரங்களேயான காதலிக்காக பல கொலைகள் செய்து விட்டு, இறுதியில் உயிரிழக்கும் ஒரு மனப்பிறழ்வடைந்தவனின் காதல்.

4) உலகைப் பற்றி அதிகமாகக் கவலை கொள்ளும் ஒருவனின் இரு காதல்கள்(ஒரே நேரத்தில்). அதில் ஒருவரான விலை மாதுக்கள் தலைவி, அவன் உதவியுடன் தங்களைப் பாதுகாக்கப் போராடி வெல்லும் ஒரு விருவிருப்பான கதை.

1) உலகை ரட்சிக்க வந்ததாக எண்ணும் ஒரு தொடர் கொலைகாரனின் மற்றொரு நிமிடக் காதல்.

நான் கடவுள் படத்தின் க்ளைமாக்ஸ் தான் sin city பட ஆரம்பக் காட்சியும் க்ளைமாக்ஸும்.

முதல் காட்சியில் வரும் பெயரற்ற கதாபாத்திரம்(Pearl harbour புகழ் Josh harnett) பார்ட்டியின் போது தனியாக ஒதுங்கும் ஒரு பெண்ணிடம், சிகரெட் கொடுத்து அறிமுகப் படுத்திக் கொண்டு, அவளுக்காகவே அந்த பார்ட்டிக்கு வந்ததாக சொல்கிறார். 'நீ எதிலிருந்தோ ஓடிக் கொண்டிருந்தாய். இப்போது அதை எதிர்கொள்ளத் தயாராகி விட்டாய். ஆனால் தனியாக அதை எதிர்கொள்ள நீ விரும்பவில்லை' என்கிறார்.

ஆம் என்று சொல்லும் அவளிடம் தன் காதலை சொல்லி அணைத்து முத்தமிட்டபடியே அவளைத் துரத்திய அந்த ஒன்றிலிருந்து விடுவிக்கிறார். அதாவது சுட்டுக் கொன்று விடுகிறார்(வாழவே முடியாதவர்களுக்கு நான் தரும் வரம் மரணம்)

இறுதிக் காட்சியில் தனது நண்பர்களுக்கு(நான்காவது ட்ராக்கில்) துரோகம் செய்த ஒரு பெண்ணிடம் முன் போலவே ஜோஷ், சிகரெட்டுடன் அறிமுகப்படுத்திக் கொள்வதுடன் படம் நிறைவடைகிறது(வாழவே கூடாதவர்களுக்கு நான் தரும் மரணம் தண்டனை)

**********

பலராலும் வெறுக்கப்படும் தோற்றமுடைய அதிபலசாலி மார்வ் (இவரை வேறு எந்தப் படத்திலும் பார்த்ததில்லை அல்லது அடையாளம் காண முடியவில்லை), அவரை விரும்புவதாக சொல்லும் கோல்டி என்ற பெண்ணுடன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவள் கொலை செய்யப் படுகிறாள். அவரைத் துரத்தும் காவல் துறையிடமிருந்து தப்பும் மார்வ், தன்னைக் கொல்ல முயல்பவன் மூலம், படிப்படியாக கோல்டியைக் கொன்றவனை அடைகிறார்.

ஹாரி பாட்டருக்கும், எமினெமுக்கும் பிறந்தது போல் தோற்றமளிக்கும் கெவின் என்ற அந்த கொலையாளி மார்வைத் தாக்கி, மனித தலைகளால் அலங்கரிக்கப் பட்ட அறையில் சிறைப்படுத்தி விடுகிறான். அவன் மனித உடல்களைத் தின்பவன் என்று சிறையில் அவருடன் அடைக்கப் பட்டிருக்கும் அவனுடைய பரோல் அதிகாரிச்சி மூலம் தெரிந்து கொள்கிறார் மார்வ். அவனில்லாத சமயம் அங்கிருந்து தப்புகிறார்.

மறுபடியும், ஆயுதங்கள் சகிதம் கொலைகாரன் இருப்பிடத்துக்கு சென்று, அவனையும் அவனை ஆதரித்த பாதிரியாரையும் கொல்கிறார். அடுத்த நாள் மார்வ் அவருக்கு அளிக்கப் படும் மரண தண்டனையை அலட்சியமாக ஏற்றுக் கொண்டு சாகிறார்.

கெவினை மார்வ் கொல்லும் விதம் அழகாக ஃப்ளூரசண்ட் வெள்ளை நிறத்தில் நிழலாகக் காட்டப்படாமல், அப்படியே காட்டப்பட்டிருந்தால் வாந்தியில் தியேட்டரே நாறியிருக்கும். (நான் யாரையாவது கொலை செய்ய நேர்ந்தால் நிச்சயம் இப்படித் தான் செய்வேன்)

மார்வ் கெவினின் முழங்கை வரை கைகளையும், முழங்கால் வரை கால்களையும் வெட்டி விட்டு, அவனை 'உயிருடன்' அவன் வளர்க்கும் நாயால் சாப்பிட வைக்கிறார். அவனும் புன்னகை மாறாமல் சிறு அலறல் கூட இல்லாமல் அவனுடன் உரையாடும் மார்வை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டே இரு(ற)க்கிறான். (இந்தக் காட்சியை பேரரசு இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்று தயவுசெய்து நினைத்துப் பார்த்து விடாதீர்கள்)

நாய் மிச்சம் வைக்கும் கெவினின் தலையை எடுத்துக் கொண்டு அவனை ஆதரித்த பாதிரியாரிடம் பல காவல்களையும் கடந்து செல்கிறார். பாதிரியார் சொல்கிறான், 'நர மாமிசம் உண்பது அவனை வெண்ணிற ஒளியால் நிரப்பியது. கடவுளுக்கு வெகு அருகில் அவனைக் கொண்டு சென்றது. அவன் உண்பது அவர்கள் உடலை மட்டுமல்ல. ஆத்மாக்களையும் தான். அவன் கொல்வது யாராலும் கண்டுகொள்ளப்படாத விலை மாதுக்களை மட்டுமே.'

ஸ்டைலாக புகைத்தபடியே அவன் சொல்லும் கதையைக் கேட்டு விட்டு மார்வ் அவன் கழுத்தை ரம்பத்தால் அறுத்துக் கொன்று கொண்டிருக்கும் போது, காவலாளிகளிடம் சிக்கி சிறைச்சாலை செல்கிறார் (வேலை முடிந்து விட்டதால், அவருக்கு தப்பும் எண்ணமும் இல்லை)

கெவின் என்ற அந்தக் கொலைகாரனை நான் கடவுள் ருத்ரனோடு ஒப்பிடுவதற்கு ஒரே காரணம் அவனும் கடவுள் பெயரால் நர மாமிசம் உண்பவன் என்பது மட்டுமே! மற்ற படி அதி பலசாலி மார்வையே வீழ்த்தி விடுமளவு சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கப் பட்டிருப்பதாலோ, இறுதி வரை அவன் வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை என்பதாலோ அல்ல.

பின் எச்சரிக்கை: சின் சிட்டியின் சில காட்சிகள் பார்க்கும் போது எனக்கு நான் கடவுளின் ஞாபகம் வந்ததே இந்த இடுகைக்கான காரணம். அந்த சில காட்சிகளை மட்டும் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன். ஏதாவது தப்பு இருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள். அத விட்டுட்டு நாகரிகக் கோமாளி, நாகரிகமில்லாத காவாளினு பின்னூட்டிடாதீங்கப்பு.

அக்காவின் டைரியும், அச்சிலேறும் என் புத்தகமும்

Monday 18 May, 2009

குழந்தை குட்டியுடன் குடும்ப இஸ்திரியாக குடுமிப்புடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் அக்காவின் குறிப்பேடு, நேற்று தற்செயலாக கிடைத்தது. அவளுடையது காதல் திருமணமென்பதால், 'காதலிப்பது எப்படி' என்ற புத்தகத்தைத் திறப்பது போல பயபக்தியுடன் திறந்தேன்.

(மீ அண்ட் மை சிஸ்டர்)

முதல் பக்கத்திலேயே 'திறந்த வீட்டுக்குள் நாய் தான் நுழையும்' என்ற வாசகம் காறித் துப்பினாலும், 'கடவுள் மட்டும் காலிங் பெல் அடிச்சிட்டா வருவார்' என்று சமாதானப்படுத்திக் கொண்டு அடுத்த பக்கத்தைத் திறந்தேன். அதில் 'அடுத்த பக்கத்தையும் திருப்பினால் ரத்தம் கக்கி சாவாய்' என்று சிவப்பு மையில் எழுதப்பட்டிருந்தது. உயிர் மேல் உள்ள ஆசையால், அடுத்த பக்கத்தை விட்டு விட்டு, அதற்கடுத்த பக்கத்தைத் திறந்தேன்.

தமிழ் தானா!? லாரி டயரில் நசுங்கிய தவளை போன்ற அஷ்ட கோனலான எழுத்து. கஷ்டப்பட்டு வாசித்தால், மொழியும் தமிழ் போல் இல்லை. உங்களுக்கு இட்ல எய்ன பாஷை தெரியுமா? ஜெயம் படத்தில் புகைவண்டிக்கு பின்னால் எழுதப்பட்டிருக்குமே.. (இட்லன்ந்த = இந்த) அதில் எழுதப்பட்டிருந்தது.

என்னுடைய ராஜதந்திரம் அனைத்தும் வீணாகப் போகிறது என்று தெரியாமல், பொருமையாக எல்லா 'ட்ல'க்களையும் பேனாவால் அடித்து விட்டு படிக்க ஆரம்பித்தேன். ங்கொக்கா மக்க.. படிச்சு முடிச்சதும் வந்த கடுப்புல டைரியத் தூக்கி எறிஞ்சேன் பாருங்க. இன்னும் எங்க இருக்குதுன்னு கண்டுபுடிக்க முடியல. கண்டுபுடிச்சதும் முதல் வேலையா அதை ஏழுகடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஏதாவது அரசியல்வாதியோட தேர்தல் அறிக்கைக்குள்ள மறைச்சு வச்சிடனும்.

பின்ன, அவ பஸ்ல டிக்கட் எடுத்தது, பல் தேச்சதுனு ஒன்னு விடாம எழுதி வச்சிருந்தா, கஷ்டப்பட்டு டாவின்சி கோட் டாம் ஹேங்க்ஸ் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி டீகோட்(decode) பண்ணி படிச்ச எனக்கு காண்டாவாதா? சுவாரசியமா ஒரு விஷயம் கூடவா அவ வாழ்கைல நடக்கல? இந்த லட்சனத்துல அந்தக் கால ஹீரோயின் போல 'அப்பப்பா.. அதை என் வாழ்நாளில் மறக்க முடியாது'னு செல்ஃப் கமெண்ட் வேற. ஒரு வேளை வருஷத்துக்கு ஒருக்க தான் பல் தேப்பா போல! அதான் மறக்க முடியல.

அப்புறம், ப்ராக்டிகல் எக்ஸாம்ல இருபத்தைஞ்சுக்கு முட்டை மார்க் எடுத்திருந்ததைப் பத்தி எழுதியிருந்ததப் படிச்சதும் எனக்குள்ல ஒரு கவிதை ஊற்றெடுத்தது. (இக்கவிதையை வைரமுத்து பாணியில், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை, மெய் எழுத்துக்களில் அழுத்தம் கொடுத்து, அடித் தொண்டையிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் படிக்கவும். முடியலைனா சாதாரணமாகவாவது படிக்கவும்.)

பரிச்சையை வச்சுகிட்டு
படிக்காம
பதினாறு
பக்கத்துக்கு
பல் விளக்குனதைப்
பத்தி எழுதினா
பாஸாக முடியுமா?

கவித சூப்பர்ல.. இதே போல் இன்னும் நிறைய கவிதைகள் தோன்றின. அவற்றை அச்சில் ஏற்றுவதற்கு ஆவன செய்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னோட்டமாக, என் மாஸ்டர் பீஸ் எனக் கருதும் ஒன்றை மட்டும் மேலே அளித்திருக்கிறேன்.

இந்தக் கவிதையை அவியலுக்கு பரிசலோ, குவியலுக்கு வாலோ, டரியலுக்கு குசும்பனோ, புதுசாக மறியல் எழுதப் போகும் வருங்கால பிரபலங்களோ பயன்படுத்தி கொல்லலாம் சே கொள்ளலாம். என் கவிதையால், உங்கள் ஃபாலோயர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் ஐநூறாக உயராவிட்டால் மீசையை எடுத்துவிடுறேன். (வளர்ந்ததும்)

நான் பின் வீட்டு ஜன்னலைப் பார்த்து ஜொள்ளுடன் சிரித்துக் கொண்டிருந்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதை க்ராபிக்ஸில் நிலா, பூ, கடல் என்று ஏதாவது ஒரு கருமத்தைப் பார்த்து சிரிப்பது போல மாற்றி புத்தகத்தின் முன் அட்டையில் போட்டு விடலாம்.

ஒரு முறை என் தம்பி என் தட்டிலிருந்த சிக்கன் பீஸைத் திருடியதும், நான் கோபமாக புருவத்தை நெரித்த போது எடுத்த புகைப்படத்தின் பிண்ணனியில், குண்டுகள் வெடிப்பது போல் மாற்றி அதைப் பின் அட்டையாக்கி விடலாம்.

மொட்டை மாடியில்
சுட்டெரிக்கும்
மொட்டை வெயிலில்
பட்டப் பகலில்
பட்டை
போட்டுக் கொண்டு
மட்டை ஆனபோது

எடுத்த புகைப்படத்தை புல்வெளியில் படுத்திருப்பது போல மாற்றி நடுப்பக்கமாக்கி விடலாம். மேற்கண்ட சுட்டெரிக்கும் கவிதையை, அதே பக்கத்தில் பிரசுரித்து விட்டால் புக் ஸேல் சும்மா பிச்சுக்கும்ல.

புத்தகத்தோட தலைப்பைக் கேட்டீங்க அசந்துடுவீங்க.

குழந்தை
குட்டியுடன்
குடும்ப இஸ்திரியாக
குடுமிச் சண்டை போடுபவரின்
குறிப்பேடு

'தலைப்பே கவிதையா!! தெய்வமே எங்கயோ போய்டீங்க..' அப்படினு நீங்க கரையறது தெரியுது. கூல் டவுன். கூல் டவுன். (இதை யார் வேண்டுமானாலும் டெம்ப்ளேட் பின்னூட்டமாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம். (சந்தேகமில்லாமல் இங்கே மட்டுமே))

உங்கள் மேலான பாராட்டுக்களை பின்னூட்டத்திலும், பரிசுப் பொருள்களை கூரியரிலும் அனுப்பி வைத்தால், புத்தகத்தின் பக்கங்களில் நூறை அதிகரித்த புண்ணியம் செய்தவராவீர்கள்.

தும்பிக்கையுடன் ஸாரி நம்பிக்கையுடன் சோம்பேறி

IPLலில் மொள்ளமாரித்தனம் - ஒரு டெம்ப்ளேட் இடுகை

Saturday 16 May, 2009

நான் கிரிக்கெட்டே பாக்குறது இல்லைங்க. எனக்கு புடிக்காது. ஏன்னா எனக்குப் புரியாது. இப்போ சியர் கேர்ல்ஸ் வர்றதுனாலயும், ஷாருக்கான் ஏதோ காமெடி பண்றாருனு முரளிகண்ணன் சொல்றதாலயும், ப்ரீத்தி ஜிந்தா எல்லாருக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்றாங்கனு கேள்விப்பட்டதாலயும் ஒரே ஒரு நாள் பாத்தேன்.

எது இண்டியன் டீம், எது அமெரிக்கன் டீம்னு கூட எனக்கு கண்டுபுடிக்க தெரியல. நான் பரவாயில்ல.. என் கூட குப்ப கொட்டுற பிரகஸ்பதிங்களுக்கு எது ஸ்டெம்ப், எது பேட்னு கூட தெரியல. ஆனாலும் நாங்க கண்டுபுடிச்ச சில உண்மைகளை உங்க முன்னால போட்டு உடைக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன்.

மொள்ளமாரித்தனங்கள்:

1) கைல ball வச்சுகிட்டே No ballனு சொல்றாங்க

2) Overனு சொல்லிட்டு ஓவர் மேல ஓவரா போட்டுகிட்டே இருக்காங்க

3) All outனு சொன்னாங்க. ஆனா பத்து பேரு தான் அவுட் ஆனாங்க.

4) ஒரு ஓவருக்கு ஆறு பந்துனு சொன்னாங்க. ஆனா ஒரே பந்தை தான் வச்சிருந்தாங்க. (ஸ்பான்ஸர்ஸ் கவனிக்க)

5) ஒரு பேட்ஸ் மேன் அவுட்னா அம்பயர் ஒரு கையைத் தூக்குறாங்க. அப்போ ரெண்டு கையை தூக்கினா ரெண்டு பேட்ஸ் மேனும் அவுட் தான? ஆனா சிக்ஸ்னு சொல்றாங்க.

உங்களுக்கும் எங்களைப் போல ரத்தமெல்லாம் கொதிக்குதா? நானும் என்னோட நண்பர்களும் ரெண்டு அங்குல நீளத்துல ஒரு பேட் வாங்கி வச்சிருக்கோம். அதுல எங்க ஊர் நாட்டாமை உட்பட எல்லாரும் கையெழுத்து போட்டு வச்சிருக்கோம்.

நீங்களும் இந்த வேள்வியில் பங்கெடுக்க விரும்பினா வந்து கையெழுத்து போடலாம். ஸ்ரீவி வரைக்கும் வரமுடியாதேனு வருத்தப்படுறவங்க, பின்னூட்டத்துல உங்க பேரை வடை அல்லது அடைமொழியோட சொல்லிட்டு போங்க. உங்க கையெழுத்தை நானே போட்டுடுறேன்.

பின் குறிப்பு: இன்னிக்கு டெம்ப்ளேட் மாத்தினேன். அதை சோதனை பண்றதுக்காக, எனக்கு வந்த கைபேசி குறுஞ்செய்தியை கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்ட டெம்ப்ளேட் இடுகை இது. நீங்க சீரியஸா எதையாவது எதிர்பார்த்து வந்திருந்தா ஐ ஆம் ஜோ ஜாரி.

நம்புங்கய்யா! நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன்!

Wednesday 13 May, 2009

எதுகை மொகனைக்காக சொல்லலைங்க.. மெய்யாலுமே நாலு கூட்டணிக்கும் ஓட்டு போட்டேன். அதைப் பத்தி சொல்றதுக்கு முந்தி, எங்க விருதுநகர் தொகுதி பத்தி கொஞ்சம் பில்டப் விட்டுக்கறேன்.

எனக்கு கார்த்திக்னா ரொம்ப ரொம்ப புடிக்கும். உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா படத்திலல்லாம் காமெடில கலக்கிருப்பாரு. அத விட விகடன் பேட்டில செமையா காமெடி பண்ணிருப்பாரு. என் விருதுநகர் தொகுதில கார்த்திக் நிக்கிறார்னு எப்போ தெரிஞ்சிச்சோ, அப்போவே அவருக்கு தான் என் ஓட்டுனு நெற்றியில் பச்சை குத்திக்கிட்டேன்.

ஆனா என் கூட சுத்துற வெளங்காத பசங்க, அவருக்கு ஓட்டு போடுற ஒரே ஆள் நீ மட்டும் தான். அதனால ஈசியா உன்னை ட்ரேஸ் பண்ணி, பதினாறாம் தேதி விடியும் முந்தி கட்சிக்காரங்க(காரர்), பத்திரிக்கைகாரங்கள்லாம் உங்க வீட்டு முன்னால பதவி, பேட்டி அது இதுனு குமிஞ்சுடுவாங்கனு பயமுறுத்திட்டாங்க.

நமக்கு இந்த பப்லிஸிட்டியெல்லாம் பிடிக்காதா.. அதனால அடுத்த ஆப்ஷனான விஜயகாந்த் பத்தி யோசிச்சேன். அவர் பிஎம் ஆயிட்டா நாட்டுல பொருளாதார நெருக்கடி கண்டிப்பா குறையும். அவரோட பாதுகாப்புக்காக தனியா செலவு செய்யத் தேவையில்ல. எந்தத் தீவிரவாதி டுப்பாக்கில டுமீல்னு சுட்டாலும் அவனுக்கே ஃபையர் பேக்காயிடும். தவிர பாக்கிஸ்தான் பார்டர்ல அவரை நிக்க வெச்சிட்டு, அங்க இருக்கற மத்த எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிடலாமேனு கணக்கு போட்டேன்.

ஆனா விதி வேற மாதிரி கணக்கு போட்டுச்சு. கொஞ்ச நாள் முந்தி, காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்க தாகூர் எங்க ஊர் பக்கமா வரும்போது கட்சிக் கொடி பிடிச்சுகிட்டு நின்னவங்களுக்கு ஆளுக்கு அம்பது ரூபா குடுத்திருக்காங்க. கொடி பிடிக்குறதுக்கே இவ்ளோனா, ஓட்டு போடுறதுக்கு நிறைய குடுப்பாங்கனு எதிர்பாத்தேன். Not bad. நூத்தியம்பது ரூபா குடுத்திருக்காங்க. ஆனா எங்க ஊர்பக்கம் நாயக்கமார் அதிகம்கறதனால, எப்படியும் வைகோவுக்கோ, பாண்டிய ராஜனுக்கோ தான் ஓட்டு விழும்னு நினைச்சுட்டு, பாதி ஊருக்கு பணம் குடுக்காம அவங்களே அமுக்கிட்டாங்க.

எங்க அப்பா கம்யூனிஸ்ட் கட்சிக்காரரா.. அதனால நான் வைகோவோட பம்பரத்துக்கு ஓட்டு போட்டா, ரொம்ப நாளா அவரு ஒளிச்சு வச்சிருக்கிற _______(குச்சி மிட்டாய் குருவி ரொட்டி என்று உங்களுக்குப் பிடித்த பதார்த்தத்தால் நிரப்பிக் கொள்ளவும்) எனக்குத் தர்றதா ப்ராமிஸ் பண்ணிருக்காரு. தவிர அந்தக் கட்சிக்காரங்க அம்பது ரூபா குடுத்தாங்க.

தே.மு.தி.க.காரங்களுக்கு மேலிடத்துலயிருந்து பணம் ரொம்ப கொஞ்சமாதான் வந்துச்சாம். அந்தப் பணத்துக்கு அவங்க ஃபுல்லா ஃபுல் வாங்கி வச்சுட்டாங்களாம். தேமுதிகல இருக்குற என் ஃப்ரண்ட் கிட்ட நானும் எங்கம்மாவும், மத்த கட்சி நிலவரத்தை சொல்லி 'உங்களுக்கு ஓட்டு போட்டா எவ்ளோ தருவீங்க'னு கேட்டதுக்கு, 'ஆளுக்கு ஒரு அவுன்ஸ் தரோம். குடிச்சுட்டு போங்க'னு சொல்லீட்டான் லூசுப்பய. இது தவிர, இந்த தேர்தல்ல விஜயகாந்தோ, கார்த்திக்கோ ஜெயிச்சாலும் அவங்களால (உடனே) பிஎம் ஆவ முடியாதுனு கடைசில தான் தெரிஞ்சது.

கடைசியில் யாருக்கு வாக்களித்தேன்?????? முடிவை சின்னத்திரையில் காண்க.

*********************

நான் ஓட்டு போட்ட நாலு கூட்டணி பேரையும் சொல்றேன். நோட் பண்ணிக்கோங்க. இவங்கள்ல ஒருத்தராவது கண்டிப்பா மானாட மயிலாட ஃபைனல்ஸ்ல முதல் மூனு இடத்துக்குள்ல வருவாங்க.

அருண் + அப்ஸரா, அஸார் + ரஜினி, ஃபயாஸ் + தர்ஷினி, ரஞ்சித் + ஐஷ்வர்யா.

அருண் நான் கடவுள் ருத்ரனா வந்து சும்மா கலக்கிட்டாரு. ஆனா கனேஷ்கர் ஆர்த்தி மாதிரியே ஓட்டு கேக்கும் போது கூழைக் கும்பிடு போடுறது, மண்டி போட்டு தரைய நக்குறதுனு ரொம்ப ஓவரா பண்ணினது எனக்குப் புடிக்கல. ஆனா அதுக்கு முந்தி அருண் பல்டி அடிச்சப்பவே ஓட்டு போட்டுட்டேன்.

அஸார் ஜோடி நல்லா தான் ஆடுறாங்க. கான்செப்டும் நல்லா தான் இருந்தது. ஆனா அவங்களுக்கு ஓவர் கான்பிடன்ஸ். அது எனக்கு புடிக்கல. லோகேஷ் சுஜிபாலா நிலைமை இவங்களுக்கு வர வாய்ப்பு இருக்கு.

ஃபயாஸ் தர்ஷினிக்கு இவ்ளோ விசிறிங்க இருக்காங்கனு பொள்ளாச்சி போனப்போ தான் எனக்கே தெரிஞ்சது. ஃபயாஸ் எடுத்த நொண்டி கான்செப்ட் பழசு தான்னாலும், இதுக்கு முன்னால ஆடினவங்களை விட நிறைய ரிஸ்க் எடுத்து சூப்பரா ஆடிருந்தாரு.

ரஞ்சித் ஜோடி நல்லா ஆடினாங்க தான். அவங்களுக்கு நான் ஓட்டு போட்டதுக்கு முக்கிய காரணம், ஐஷ்வர்யா அண்ணாவோட எதிர்பாரா மரணம்.

நிவாஸ் கிருத்திகா, போன தடவை ஓட்டு கேட்ட விதம் ரொம்ப பிடிச்சுருந்தது (எனக்கு சினிமாவைத் தவிர வேறொன்னும் தெரியாதுனு நிவாஸ் சொன்னது டச்சிங்கா இருந்தது). அவங்க செமி ஃபைனல்ஸ் வர்றதுக்கு ரெண்டு வோட் போட்டேன். ஆனா இந்த தடவை நிவாஸ் ஜோடி, ஏற்கனவே ஸேண்டி எடுத்திருந்த சைனீஸ் கான்செப்ட் எடுத்து நல்லா சொதப்பிருந்தாங்க. அதனால வோட் பண்ணல.

ராம் ப்ரியா ஜோடிக்கு அவங்க choreographer ஸேண்டிக்காகவே ஓட்டு போடனும்னு நினைச்சேன். ஆனா பேலன்ஸ் காலி. பரவாயில்ல. நெக்ஸ்ட் டைம் ரெண்டு வோட் பண்றேன்.

மதுரை டூ பொள்ளாச்சி

Sunday 10 May, 2009

மதுரை டூ பொள்ளாச்சி பேருந்து வந்து நின்றதும் ஓடிப் போய், யாருமே அமர விரும்பாத கடைசி இருக்கையை வெற்றிகரமாக பிடித்தேன். நிற்க. அட நீங்க உக்காருங்க. நான் என்னை சொன்னேன். நான் உக்காரப் போன சீட்டுல ஏதோ ஒரு வெனகாரப் பயவுள்ள சூயிங்கம் ஒட்டி வச்சுருக்குது.

அடடா சகுனம் சரியில்லையேனு நினைச்சு, டிரைவருக்கு பின்னால இருக்கற சீட்ல போய் உக்காந்து சனியனத் தூக்கி பனியன்ல போட்டுகிட்டேன். டிரைவருக்கு எதுவும் பெரிய வியாதியோ என்ன எழவோ, சரியா நாப்பது நொடிக்கு ஒரு தடவ ஜன்னலுக்கு வெளிய மண்டையை நீட்டி காறி காறித் துப்பிக்கிட்டே இருந்தாரு. கொஞ்ச நேரம் கழிச்சு, அண்ணாந்தமானிக்கு வாயில தண்ணி ஊத்திக்கிட்டு கடகடனு வாய்க்குள்ளேயே வண்டி ஓட்ட ஆரம்பிக்க, எதுத்தாப்புல ஒரு கண்டெய்னர் லாரி வர, கோஸ்ட் ரைடரில் உக்காந்தப்ப கூட நான் இம்புட்டு பதறுனதில்ல.

கண்டக்டர் புண்ணியவான் லோ நெக்கில் சுடிதார் போட்டிருந்த ஒரு பிள்ளையின் அருகில் போய் நின்றவாறு ஏதோ குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்தார்.. குறிப்பெடுத்துக் கொண்டேயிருந்தார். புதுசாக பல மக்கள் பேருந்தில் ஏறிய பின்பும் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. 'ஆத்தா நயன்தாரா! நீ மதுரையிலேயே ஏறியிருக்கக் கூடாதா? டிக்கெட் எடுக்காமலேயே கோவை போய் சேந்துருப்பேனே' என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்த பெரியவர், நான் எப்படா காதில் மாட்டியிருக்கும் ஐபாடைக் கழட்டி விட்டு அவர் பக்கம் திரும்புவேன், எப்படா 'இன் 1973' என்று ஆரம்பிக்கலாம் என்று குறுகுறுவென என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். சில்வண்டு சிக்கும் சிறுத்தை சிக்குமா? ஜன்னலில் வைத்த கண்ணை எடுக்கவே இல்லை.

ஜன்னலுக்கு வெளியே சுவாரஸியமாக ஒன்றுமில்லை. இப்போதைய குழந்தைகள் புகைவண்டிக்கு டாட்டா காட்டுவதிலேயே ஆர்வம் காட்டுவதில்லை. பிசாத்து பேருந்தையா கண்டு கொள்ளப் போகிறார்கள்? சாலையோர முட்புதரில் ஒதுங்கியிருந்த பெண்கள் மட்டுமே வாயில் ஒரு கெட்ட வார்த்தையுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு டாட்டா போட்டால் பேட்டா செருப்பு தான் வருமென்பதால், டாட்டா போடும் ஆவலை அடக்கிக் கொண்டு பேருந்துக்குள் நோட்டமிட ஆரம்பித்தேன்.

எல்லாப் பேருந்திலும் இருப்பது போல, ஒருவர் பேருந்தின் மேற்கம்பிகளை இரு கைகளாலும் பிடித்துத் தொங்கியபடியே தூங்கிக் கொண்டிருந்தார். பள்ளி சீருடையிலிருந்த ஒரு பெண் குழந்தையை ஒரு அயர்ன் பாக்ஸுக்கு பொறந்த பொறுக்கி, பேண்ட் ஜிப் தேய்ந்து போகுமளவு உரசு உரசு என்று உரசிக்கொண்டு இருந்தது.

ஒரு அம்மா பக்கத்து பேருந்தில் போகும் பயணிகளும், திரும்பிப் பார்க்குமளவு கைபேசியில் அலோ.. அலோ.. என்று கதறிக் கொண்டிருந்தார். பேருந்தில் உள்ள அணைவரும் தன்னைத் தான் சைட் அடிக்கிறார்கள் என்று நினைத்த ஒரு சப்பை பிகர், சானியா மிர்சா ரேஞ்சுக்கு பீல் பண்ணி தலையைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு தேனிலவு தம்பதிகளைத் தவிர, முழுப் பேருந்தையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருந்தது ஒரு பத்து மாத வாண்டு தான். அதற்கு நிற்கவே தெரியவில்லை. யாயாயாயா என்று பலம் கொண்ட மட்டும் கத்திக் கொண்டும், ஹீட் பாக்ஸ் மேல் ஏற முயன்று கொண்டும், கியரைப் பிடித்து இழுத்துக் கொண்டும், நீரருந்திக் கொண்டிருந்த டிரைவர் வாய்க்குள் கையை விட முயன்று கொண்டும் இல்லாத அட்டகாசம் செய்து கொண்டிருந்தது.

அந்தப் பெரியவர் இறங்கிய பின் வெற்றாக இருந்த என் பக்கத்து இருக்கைக்கு அருகில், பிரவுன் நிற கால்சட்டையும், அதே பிரவுன் நிறத்துக்கு மேட்ச் ஆக்குவதற்காகவே அழுக்காக்கப்பட்டது போன்ற வெள்ளை சட்டையும் அணிந்த ஒரு பதிமூன்று வயது சிறுவன், என் பக்கத்தில் அமர வெட்கப்பட்டுக் கொண்டு நின்று கொண்டே இருந்தான். ஏதோ காட்டு வேலை செய்து விட்டு களைப்பாக வந்திருக்கிறான் என்பது தெரிந்தது.

இருக்கையிலிருந்த பையை மடியில் வைத்து கொண்டு, அவனை உட்கார சொல்வது போல் தள்ளி உட்கார்ந்தேன். ம்ம்ஹூம்.. நானும் அவனைப் போல் தலையைக் கலைத்து விட்டு, சட்டையைக் கிழித்துக் கொண்டால் தான் பக்கத்தில் உக்கார்வான் போல. அதற்குள் அடித்து பிடித்து வேறொருவர் வந்து அமர்ந்து விட்டார். பழனியில் அவன் இறங்கும் வரை, நிற்க முடியாமல் கம்பியில் சாய்ந்து கொண்டு, கால் மாற்றி நின்று கொண்டே வந்தான்.

பொள்ளாச்சியில் இறங்கியதும் (துர்)அதிர்ஷ்டவசமாக காட்டம்பட்டி செல்லும் திருப்பூர் பேருந்து குறுக்கே வந்து நின்று கொண்டு வரவேற்றது. அந்தப் பேருந்தில் அநியாயத்துக்கு கூட்டம். சலங்கை ஒலி கமல் போல ஒற்றைக் காலில் கதகளி ஆடியபடியே நின்று கொண்டு போனேன். அருகில் சீட்டில் அமர்ந்திருந்த பெண்மனி எப்படா அவர் மேல் விழுவேன், எப்படா குய்யோ முய்யோ என்று கத்தலாம் என்று கொலைவெறியுடன் காத்துக் கொண்டிருந்தார். சாமி புண்ணியத்தில் ஒரே ஒரு முறை என் மடிக்கணினியை பையோடு அவர் தலை மேல் போட்டதோடு சரி.

பேஸ்மெண்ட் அவ்வளவு ஸ்ட்ராங்காக இருந்தபோதும், குதிகாலில் வலி பின்னியது. மூச்சு தினறியது. உட்கார்ந்திருக்கும் எல்லாரும் திருப்பூருக்குத் தான் போய் தொலைய வேண்டுமா? வழியில் எங்கேயும் இறங்கக் கூடாதா? சீட்டோடு ஆணியடித்தது போல் அசையாமல் அமர்ந்திருந்தார்கள். எனக்கு மட்டும் ஹீ மேன் போல் சூப்பர் பவர் இருந்திருந்தால், அமர்ந்திருந்த ஒரு நான்கு பேரை சீட்டோடு தூக்கி ஜன்னல் வழியே எறிந்திருப்பேன்.

காட்டம்பட்டியில் இறங்கும் வரை, பழனியில் இறங்கிய அந்தப் பையனைக் கொஞ்சம் புன்னகையோடு 'உக்கார்' என்று சொல்லியிருந்தால் உட்கார்ந்திருப்பானோ என்று உறுத்திக் கொண்டே இருந்தது. இறங்கும் வரை மட்டுமே!
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket