பிரபல பதிவர் சக்கரை சுரேசும், புஜ்ஜுக்குட்டி இட்லிவடையும்

Friday 5 June, 2009

Views

'எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு' என்று திருநர்சிம் ஸாரி திருவள்ளுவர் சொன்னதை நடைமுறைபடுத்தும் பொருட்டு, எனது இந்த ஐம்பதாவது (சரி.. சரி.. அம்பத்தி ஒன்னு) பதிவு முதல் பிரபல பதிவர் சக்கரை சுரேஷ் அவர்களின் ஐடியாவான சக்கரைக்கட்டியைப் போல் நானும் புஜ்ஜுக்குட்டி என்றொரு பகுதியை ஆரம்பித்திருக்கிறேன். அவர் கோபித்துக் கொண்டு கா விட்டு விட மாட்டார் என்று நம்புகிறேன். (கா விட்டாலும் பரவாயில்லை. காப்பி ரைட், கழுதைக் குட்டி என்று காந்தி தாத்தா நோட்டைக் கேட்காமல் இருந்தால் சரி)

அன்னாரைப் போலவே நானும் புதுபதிவர்களை அறிமுகப்படுத்தி உற்சாகப்படுத்தலாம் என்றிருக்கிறேன் (யாரிடமும் உதை படாமலிருக்கும் வரை). இந்த வார புஜ்ஜுக்குட்டியாக நான் அறிமுகப்படுத்தியிருப்பவர், சமீபத்தில் 1993 முதல், ஏழு வருடங்களாக எழுதிவரும் புத்தம்புதிய பதிவர் இட்லிவடை அவர்கள்.

உங்களுக்குப் வெளங்கும் படி இட்லிவடையைப் பற்றி வெளக்க வேண்டுமென்றால், இட்லிவடை ரமணா விஜயகாந்த் போல.

க்ளைமாக்ஸ் வரை விஜயகாந்த் அனானியாகவே தண்ணி காட்டிக் கொண்டிருப்பதைப் போல, க்ளைமாக்ஸ் வராததால் இன்னும் அனானியாகவே இருக்கிறார். புள்ளிவிவரத்தில் இவர் சூரப் புலி என்பது இவரது இந்த மற்றொரு வலைப்பூவைப் பார்த்தால் புரியும். போதாக்குறைக்கு 39 தொகுதிகளில் தேர்தல் டீம் என்று ரமணா போலவே ஒரு நெட்வொர்க் ஆரம்பித்திருக்கிறார்.

ரமணாவில் அரசு அதிகாரியான நாயகியின் மாமா மாற்றலானதை, கேப்டன் நாயகிக்கு முன்பே விஜயகாந்த் தெரிந்து வைத்திருப்பார். இட்லிவடை அவரை விட அப் டு டேட். எங்காவது கலவரம் நடந்தாலோ, யாராவது கட்சி மாறினாலோ இவரிடம் சொல்லி விட்டு தான் செய்வார்கள் போல; தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.

இதனாலேயே இட்லிவடையில் ஒருவர் ஜோதிடர் சுப்பையாவாகவோ, ஸ்வாமி ஓம்காராகவோ இருக்கலாமென்று எனக்கொரு சந்தேகம். ஆனால் பலர் இவர்களில் ஒருவர் என்றும் அன்புடன் பாலாவாகவோ அல்லது பாராவாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

மற்றபடி கேப்டன் போல இடது காலை சுவற்றில் உதைத்து, வலது காலால் சுழட்டி சுழட்டி அடிப்பாரா என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால் 'பாயும் வேகம் ஜெட்லி தான்டா' என்று பன்ச் டயலாக் சொல்வதால் அதற்கும் சாத்தியமிருப்பதாகவே தோன்றுகிறது. (ஸோ இத்துடன் மீ த எஸ்கேப்பூ)

தமிழ்மண நிர்வாகிகளுக்கு: இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

27 மச்சீஸ் சொல்றாங்க:

Vijay Anand said...

வீடுக்கு ஆட்டோ வர போகுது ...
விஜய்

♫சோம்பேறி♫ said...

/*டக்ளஸ்....... said...

:))) */

:)))))) டக்ளஸ்..


/*Vijay Anand said...
வீடுக்கு ஆட்டோ வர போகுது ...
விஜய் */

சான்ஸே இல்ல விஜய். சுரேஷும் இட்லிவடையும் என் நண்பர்கள். (எப்பூடி?)

Anonymous said...

//இட்லிவடையில் ஒருவர் ஜோதிடர் சுப்பையாவாகவோ, ஸ்வாமி ஓம்காராகவோ இருக்கலாமென்று எனக்கொரு சந்தேகம்.//
:-)))
ஆஹா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்த 'புத்தம்புதிய' பதிவர் யாரோ?

சித்ரா

சித்து said...

பொருத்தமான ஆளை தான் தேர்வு செய்துள்ளீர்.

BHuvanesh said...

கலக்கல் நையாண்டி!!

வால்பையன் said...

இட்லிவடையவே இந்த கலாய் கலாய்க்கிறிங்களே!

♫சோம்பேறி♫ said...

/*Anonymous said...
ஆஹா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா!!! அடுத்த 'புத்தம்புதிய' பதிவர் யாரோ? */


வெய்ட் அண்ட் ஸீ சித்ரா.. (தமிழ் மணமே தனிநபர் தாக்குதல்னு பதறிகிட்டிருக்கு. உங்களுக்கு அடுத்த வாரம் வேற தொடரனுமா? :-) ஒரு முடிவோட தான் இருக்கீங்க)

/*சித்து said...
பொருத்தமான ஆளை தான் தேர்வு செய்துள்ளீர். */

ஹி ஹி.. நன்றிங்க சித்து..

/*BHuvanesh said...
கலக்கல் நையாண்டி!! */

மிகவும் நன்றி BHuvanesh..

வேத்தியன் said...

ஆஹா...

நீங்க கலக்குங்க அப்பு...

:-)

♫சோம்பேறி♫ said...

நீங்களும் நம்ம லிஸ்டுல இருக்கீங்க வால் :-)

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றிங்க வேத்தியன் :-) வெல்கம் பேக் அப்பூ

தேவன் மாயம் said...

உங்களிடம் மாட்டிக்கொள்ளப்போகும் அடுத்த
நபருக்கு வாழ்த்துக்கள்11

♫சோம்பேறி♫ said...

அவங்களோட சப்ஸ்டியூட்டா நானே நன்றி சொல்லிக்கிறேன்.. நன்றிங்க தேவன்மாயம்.. (பேரு கரெக்ட் தானே?)

சென்ஷி said...

//எங்காவது கலவரம் நடந்தாலோ, யாராவது கட்சி மாறினாலோ இவரிடம் சொல்லி விட்டு தான் செய்வார்கள் போல; தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.//

ஹா ஹா ஹா

அல்டிமேட் :)))

விக்னேஷ்வரி said...

இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். ///

ஹிஹிஹி.... :)))))))))))

♫சோம்பேறி♫ said...

/* சென்ஷி said...
தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வரும் முன்பு இவர் பதிவில் விஷயம் வெளிவந்து விடும்.
ஹா ஹா ஹா
அல்டிமேட் :))) */

நன்றி சென்ஷி.. மத்ததெல்லாம் இளைய தளபதி மாதிரியா?

/* விக்னேஷ்வரி said...
என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன். ///

ஹிஹிஹி.... :)))))))))))

நன்றி விக்னேஷ்வரி.. (தமிழ்மணத்திலயிருந்து தூக்கிட மாட்டாங்கள்ல..)

ரவி said...

இயல்பான நகைச்சுவை சரக்கு...பூந்து வெளாடுது !!! இவ்வளவு நாள் உங்களை படிக்காம மிஸ்பண்ணிட்டேன் சாரி....

கலக்குடோய்...

அப்படியே லக்கிலுக்கையும் என்னையும் அறிமுகப்படுத்துங்களேன்...

♫சோம்பேறி♫ said...

என்னங்க நொந்தழல் கவி இப்படி சொல்லிட்டீங்க.. உங்களை அறிமுகப்படுத்தாம இருக்க முடியுமா?

(கொஞ்ச நாள் உங்க ப்ரொஃபைல்ல இருக்கிற அப்புராணி அம்பியோட ஃபோட்டோவ தூக்கிட்டு உங்க நிஜ ஃபோட்டோவை வைங்களேன்)

அறிவிலி said...

நல்ல வேளை, வழக்கம் போல இட்லி, வடை ஃபோட்டோ போட்டு மொக்கையோன்னு நெனச்சேன். இது வேற மொக்கை, நல்லாவே இருக்கு.

சூரியனுக்கே டார்ச் லைட்டு...

♫சோம்பேறி♫ said...

/* இது வேற மொக்கை, நல்லாவே இருக்கு. சூரியனுக்கே டார்ச் லைட்டு... */

நன்றிங்க அறிவிலி. நாங்கள்லாம் யாரு! எங்க லெவல் என்ன!

அமர பாரதி said...

//மெய்பொருள் காண்பது நன்றே // அல்ல மெய்பொருள் காண்பது "அறிவு"

♫சோம்பேறி♫ said...

சுட்டிக் காட்டலுக்கு நன்றி அமர பாரதி.. வருந்துகிறேன்.. திருத்துகிறேன்.

Suresh said...

நான் உங்களது பதிவை ரசித்து சிரித்து இருக்கிறேன்...

அதை போல் இந்த பதிவும் சூப்பரா இருக்கு :-) ஹீ ஹீ

ஆமா பிரபல பதிவர்னு சொல்லி உச்ச கட்ட காமெடி வேற ;-)

Suresh said...

//(கொஞ்ச நாள் உங்க ப்ரொஃபைல்ல இருக்கிற அப்புராணி அம்பியோட ஃபோட்டோவ தூக்கிட்டு உங்க நிஜ ஃபோட்டோவை வைங்களேன்)/

:-)

Suresh said...

//தமிழ்மண நிர்வாகிகளுக்கு: இட்லிவடை தனி நபர் அல்ல என்று ரகசிய சிபிஐ குழு கிசுகிசுக்கிறது. எனவே தனிநபரைத் தாக்கி விட்டேன் என்று என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கி விட வேண்டாம் என்று கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொள்கிறேன்./

இது மெகா ஹீட்டு :-) ஹா ஹா ஹா ஹா

Suresh said...

//
/*Vijay Anand said...
வீடுக்கு ஆட்டோ வர போகுது ...
விஜய் */

சான்ஸே இல்ல விஜய். சுரேஷும் இட்லிவடையும் என் நண்பர்கள். (எப்பூடி?)//

மிக சரி நண்பா உங்களது நகைச்சுவை உணர்வு சூப்பர் ஜாலியா இருக்கு மனதை காயபடுத்தாமல் சூப்பா புகுந்து விளையாடி கலாட்டா தான்,

போதுவாவே நாமும் எப்போதும் இப்படி என்பதால் அடுத்தவரை கலாய்ப்பது ;) அல்வா சாப்பிடுவது மாதிரி அதனால் நல்லா ரசித்தேன் நண்பா

♫சோம்பேறி♫ said...

தாமதமான பதிலுக்கு நன்றி சுரேஷ். மிகத் தாமதமான என் பதிலுக்கு மன்னித்து விடுங்கள்.

Suresh said...

@ ♫சோம்பேறி♫

// தாமதமான பதிலுக்கு நன்றி சுரேஷ். மிகத் தாமதமான என் பதிலுக்கு மன்னித்து விடுங்கள்.//

ஹா ஹா எதுக்கு நண்பா மன்னிப்பு...
சோம்பேறி என்று பெயர் வைத்துக்கொண்டு சீக்கிரம் சொல்லி இருந்தால் தான் நல்லா இருக்காது...
இதில் தவறு ஏதும் இல்லை, மன்னிக்கும் படி நீங்கள் ஏதும் குற்றம் செய்யவில்லை

:-) சிரித்து மகிழுங்கள் நண்பா

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket