எனக்கும் வாசகர்கள் கடிதம் வந்திருச்சுடோய்ய்ய்ய்.. (மவனே.. கீசிடுவேன்)

Tuesday 7 July, 2009

Views

(முன் குறிப்பு : உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்பதற்காக சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)


டியர் சோம்பேறி,

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க மச்சி. முக்கியமா "என்னைப் பாத்தா $&*%$&*& மாதிரி இருக்கா" கதை படிச்சு படிச்சு வயிறே புண்ணாக்காகிடுச்சு. புரோட்டா குமாரின் உருவம் மனதில் இன்னும் நிற்குது.

நான் இதுக்கு முன்னாடி இப்படி மெயில் அனுப்பினது ஜாக்கி சானுக்கு மட்டும் தான். நீங்க என்ன மறுபடியும் எழுத வச்சிட்டீங்க. உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னு நெனைக்கும் போதெல்லாம், நீங்க குவாட்டர் அடிச்சுட்டு குப்புற விழுந்து கெடப்பீங்களோன்னு நெனச்சு தான் இப்ப மெயில் அனுப்புறேன். நமீதா-வ உங்க "நமீதாவுக்கும் உங்களுக்கும் ஒரு இதுவாமே" போஸ்ட் மூலமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

நீங்க $#%$%ன் வலைப்பூவில் ஒரு அனானி கமெண்ட் எழுதிருப்பீங்க "இனிமே எழுதினே கீசிடுவேன்"-ன்னு, அதே தான் இப்ப உங்களுக்கு நான் சொல்றேன் "மவனே! இனிமே எழுதினே கீசிடுவேன்". இது கடிதம் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கட்டளை...

இப்படிக்கு,
Mr. கொலவெறி குப்பன்

மை டியர் குட்டி சாத்தான் ஸாரி.. லொலவெறி குப்பன்,

நான் எப்போதோ எழுதுவதை நிறுத்தி விட்டேன். இப்போதெல்லாம் தட்டச்சுகிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

இரண்டு ஆண்டுகளாக உங்களை வாசிக்கிறேன். உருப்படியாக ஒன்றும் இருந்ததில்லை. ஆனாலும் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை. விரைவில் உருப்படியாக எழுத ஆரம்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

கு. கந்தசாமி, ஸ்பெய்ன்

அன்புள்ள கந்தசாமி,

நான் எழுத ஆரம்பித்தே ஆறு மாதங்கள் தான் ஆகிறது. ஒருவேளை இன்னும் நாற்பது வருடங்கள் கழித்து நீங்கள் எதிர்பார்க்கும் படியான விபரீதமெதுவும் நிகழலாம்.

பை த வே, ஸ்பெயினிலிருந்து வரும் போது, சாக்லேட்டும், செண்ட் பாட்டிலும் வாங்கி வருவீர்களென எதிர்பார்க்கிறேன். நிகழுமா?

*.*.*.*.*.*.*.*.*.*

மதிப்பிற்குரிய சோம்பேறி,

உங்கள் எழுத்துக்கள் பெரும்பாலும் மொக்கையாகவும் சப்பையாகவும் இருந்தாலும், சைட் பாரிலிருந்த ஜூஜூ பொம்மையின் அழகை ரசிப்பதற்காகவே, உங்கள் வலைப்பூவை நாளுக்கு நாற்பது முறை திறந்து பார்ப்பதுண்டு. ஏன் அதை இப்போது தூக்கிவிட்டீர்கள்? மறுபடி வைத்தால் சந்தோஷப்படுவேன். வைக்காவிட்டால் நிச்சயம் ரூம் போட்டு அழ மாட்டேன். அவ்வ்வ்வ்..

அப்புறம் உங்கள் வலைப்பூவை விட, வலைப்பூ கேப்ஷனிலிருக்கும் ஸ்மைலி அழகாக உள்ளது. நீங்க ரொம்ப அழகா சிரிக்கிறீங்க.

இப்படிக்கு,
Mr. அவ்வ்வ்வ்

திரு. அவ்வ்வ்வ்,

வாசகர் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். :-) உரையாடல் போட்டியில் வென்றவுடன் (வெளங்கீரும்) :-) அந்த பொம்மையை பழைய இடத்தில் மீண்டும் காணலாம். :-)


*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில், நீங்கள் குப்புறப் படுத்துத் தூங்கும் அழகை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். உங்கள் முழு மொகரையையும் பார்க்க பேராவல்.

பேரண்புடன்,
Miss. நமீ

உங்கள் அட்ரஸை மட்டும் மெயிலுங்க நமீ.. நீங்கள் அண்டார்ட்டிகாவில் இருந்தாலும் அஞ்சே நிமிஷத்தில வந்து உங்களை சந்திக்கிறேன்.

*.*.*.*.*.*.*.*.*.*

அன்புள்ள சோம்பேறி,

வணக்கம். நீங்கள் வலைப்பூ எழுதும் முன்பிருந்தே உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (10000 BC?)

பிறர் பதிவுகளில் பின்னூட்டுவதில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவர் வலைப்பூவிற்கும் வாண்டடாகப் போய் வம்பிழுக்கிறீர்கள். (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)

உங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது சோம்பேறி ரோதனை தாங்காமல் தான் நான் பதிவுலகை விட்டு விடைபெறுகிறேன் என்று எஸ்ஸாவது தான்.

பி.கு : உங்கள் இடுகையை முடிக்கும்போது கொட்டாவியுடன் சோம்பேறி என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு. அதைப் படித்ததும் கொட்டாவி விட்டுட்டு, உங்கள் ப்ரொஃபைல் புகைப்படத்தில் இருப்பது போல குப்புற படுத்துத் தூங்கி விடுவேன்.

வாழ்க வளமுடன்

:-)

கொட்டாவியுடன் சோம்பேறி
*.*.*.*.*.*.*.*.*.*

டேய் டோமரு!

எங்கடா என் ஐநூறு ரூவா? செல்லை ஸ்விச் ஆஃப் பண்ணி வச்சுட்டா விட்டுருவோமா? நீ offlineல தான் ஒளிஞ்சிருக்கனு தெரியும். மரியாதையா வந்து பணமாவோ, சரக்காவோ கடனைத் திருப்பிக் குடுத்துட்டு போ. இல்ல.. ஆட்டோ தான் வரும்.

The user is offline. Will never come online. Please dont disturb him.

48 மச்சீஸ் சொல்றாங்க:

rapp said...

me the firstoooooooooo:):):)

rapp said...

en mailai publish panni adhukku velakkam koduththu velukkaathathaal, kannaabinnaavena kandithu velila odaren

ippadikku,
isthiripotti,
paris

சந்தனமுல்லை said...

:-))))

♫சோம்பேறி♫ said...

நோஓஓஓஓஓஓஓ.. போவாதீக ராப்..

தினந்தோரும் இது போன்ற ஆயிரக்கணக்கான கடிதங்கள் வந்து குவிகின்றன.

அவற்றில் உங்கள் கடிதம் மிக மிக முக்கியமானது. எனவே அதை நான் தமிழ்மண நட்சத்திரமாகும் போது வெளியிடலாமென சேகரித்து வைத்திருக்கிறேன்.

லோகு said...

Super...

ithu ellam enna 'ethirvinai' ya?/

Karthikeyan G said...

டியர் சார்,
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து வந்த கடிதத்தை ஏன் இந்த பதிவில் போடாமல் விட்டுவிட்டீர்கள்?


மாசற்ற அன்புடன்,
கோர்த்து விட்டபின் கொண்டாட்டம் போடுவோர் சங்கம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ராப் கடிதம் ஸ்டார் ஆகும் போதா.. :))
நான் கூட அந்த கேப்ஷன் நல்லாருக்குன்னு மெயில் போட்டேனே அதை ஏன் போடல ?? :))ஓ அதுல திட்டி ஒன்னுமே இல்லன்னா போடல..நெக்ஸ்ட் டைம் நாலு வார்த்தை கத்துகிட்டு திட்டறேன் .. சரியா.. ?

♫சோம்பேறி♫ said...

/* சந்தனமுல்லை said...
:-)))) */

:-)))))))))) சந்தனமுல்லை..

/* லோகு said...
Super...
ithu ellam enna 'ethirvinai' ya? */

இது எதிர்வினை இல்ல லோகு. தன்வினை கொஞ்ச நேரம் கழிச்சு என்னையே டுமீல் டுமீல்னு சுடும் பாருங்க..

தன்வினை said...

டுமீல் டுமீல் டுமீல் டுமீல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

டான் டடான் டடான் டடான் ... டுமீல் டுமீல்..

♫சோம்பேறி♫ said...

/* Karthikeyan G said...
சூப்பர் ஸ்டாரிடம் இருந்து வந்த கடிதத்தை ஏன் இந்த பதிவில் போடாமல் விட்டுவிட்டீர்கள்?
மாசற்ற அன்புடன்,
கோர்த்து விட்டபின் கொண்டாட்டம் போடுவோர் சங்கம். */

அடுத்த இடுகையில் பப்லிஷி விடுகிறேன் திரு. சூப்பர் ஸ்டார் ஜி.

தப்பிச்சேண்டா சாமி என்ற பெருமூச்சுடன்,
அழகாக அந்தர் பல்டி அடிப்போர் சங்கம்



/* முத்துலெட்சுமி/muthuletchumi said...
அதுல திட்டி ஒன்னுமே இல்லன்னா போடல..நெக்ஸ்ட் டைம் நாலு வார்த்தை கத்துகிட்டு திட்டறேன் .. சரியா.. ? */

ஹைய்யோ வேண்டாம்கா.. நீங்க அனுப்பின மெயில்ல மானே, தேனேனு நல்லதா நாலு வார்த்தை சேர்த்து நாளைக்கே பப்லிஷ் பண்ணிடுறேன்.

♫சோம்பேறி♫ said...

/* தன்வினை said...
டுமீல் டுமீல் டுமீல் டுமீல்

முத்துலெட்சுமி/muthuletchumi said...
டான் டடான் டடான் டடான் ... டுமீல் டுமீல்.. */


பாத்தீங்களா மக்களே! நான் சொன்னதெல்லாம் அப்படியே நடக்குது. இனிமே நீங்க எல்லாரும் என்னை 'சோம்பேறி சித்தர்' 'சோம்பேறி சித்தர்'னு கூப்பிடனும்.. ஓக்கேவா?

நான் போய் ஆஸ்ரமத்துக்கு லொக்கேஷன் பாத்துட்டு வரேன்.

”பார்த்த” மக்கள் said...

'சோம்பேறி சித்தர்' 'சோம்பேறி சித்தர்'

அறிவிலி said...

உங்கள் வெற்றியே, வாசகர்கள் மனதை படித்துவிடுவதுதான். நமீ கடிதத்தை தவிர மீதியெல்லாம் நிஜமாக நடந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.

இப்படிக்கு

கொல வெறியோட அலையும் சோம்பேறி வாசகன்.

பி.கு: இப்பயாவது ரோஷம் வந்து 500 ரூபாயை வயர் ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.

♫சோம்பேறி♫ said...

/*”பார்த்த” மக்கள் said...
'சோம்பேறி சித்தர்' 'சோம்பேறி சித்தர்'*/

ஓக்கே.. ஓக்கே.. இப்போ பார்த்த மக்கள் எல்லாரும் ஸ்வாமிஜிக்கு காணிக்கை செலுத்தி விட்டு போகவும்.


/*அறிவிலி said...

உங்கள் வெற்றியே, வாசகர்கள் மனதை படித்துவிடுவதுதான். நமீ கடிதத்தை தவிர மீதியெல்லாம் நிஜமாக நடந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது. */

அவ்வ்வ்வ்.. உண்மையா தான் இருக்கும்னு இவ்ளோ உறுதியா சொல்றீங்களே! ஒருவேளை அந்தக் கடிதங்களை எழுதினது நீங்க தானோ? அப்போ அந்த நமீ கடிதத்தை எழுதினது யாரா இருக்கும்?

S.A. நவாஸுதீன் said...

கொஞ்சம் கூட சளைக்காமல் சும்மா அடிச்சி ஆடுறீங்களே நண்பா. யப்பா. கலக்குறீங்க போங்க.

♫சோம்பேறி♫ said...

ரொம்ப நன்றி நவாஸ்.. :-)

நாகா said...

//தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு//

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
ப்ளாக்கினாற் சுட்ட வடு :)

♫சோம்பேறி♫ said...

டியர் நாகா! கனியிருப்ப காய் கவர்ந்தற்று :-)

Thekkikattan|தெகா said...

:-))))) இப்படிச் சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க.

நானும் ஒரு வாசகர் கடிதம் தீட்டிட்டே இருக்கேன். அதில கொஞ்சம் திட்டல் தூக்கலா இருக்கும் அதுதான் நீங்களும் போடுவீங்கன்னும் தெரியும் போட்டுருங்க. அப்படியே இதுக்கு முன்னாடி எழுதின கடுதாசிக்கு எல்லாம் இன்னும் பில் செட்ல் பண்ணல பாத்து பண்ணுங்க, சோம்பேறி.

♫சோம்பேறி♫ said...

/* Thekkikattan|தெகா said...
:-))))) இப்படிச் சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சுங்க. */

மிகவும் நன்றி தெகா..

/* நானும் ஒரு வாசகர் கடிதம் தீட்டிட்டே இருக்கேன். */

ஓக்கே பாஸ்.. யு ஆர் வெல்கம்..

/* அப்படியே இதுக்கு முன்னாடி எழுதின கடுதாசிக்கு எல்லாம் இன்னும் பில் செட்ல் பண்ணல பாத்து பண்ணுங்க, சோம்பேறி. */

The user is offline. Will never come online. Please dont disturb him.

☀நான் ஆதவன்☀ said...

அடுச்சு தூள் கிளப்பு மாமு :)

விஜய் ஆனந்த் said...

:-)))))...

♫சோம்பேறி♫ said...

/*☀நான் ஆதவன்☀ said...
அடுச்சு தூள் கிளப்பு மாமு :) */


ஓக்கே மச்சி.. பட்டயைக் கெளப்பீருவோம்..

/*விஜய் ஆனந்த் said...
:-)))))... */


:-))))))))))))))) விஜய் ஆனந்த்

நந்தாகுமாரன் said...

செம parody சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிச்சுகிட்டே இருக்கிறேன் :)

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி நந்தா.. :-)

சென்ஷி said...

:-)

♫சோம்பேறி♫ said...

:-)))))))))) சென்ஷி..

Vijay Anand said...

எருமை ... எருமை .... ஓ சாரி ... .அருமை ...அருமை ...
இது போலா வரும் வாசகர்கள் கடிதம் பதிவு செய்யவும்... நன்றி...

சித்ரா said...

:-0 நடத்துங்க... நடத்துங்க...நானும் ஒரு வாசகர் கடிதம் எழுதலாம்ன்னு இருக்கேன்,( நீங்க நட்சத்திரமாகும்போது!!).

வெட்டிப்பயல் said...

கலக்கல் :)

♫சோம்பேறி♫ said...

/* Vijay Anand said...
எருமை ... எருமை .... ஓ சாரி ... .அருமை ...அருமை ... */

பன்றி.. ஓ சாரி .. நன்றி.. மிகவும் நன்றி விஜய்..

/* இது போல வரும் வாசகர்கள் கடிதம் பதிவு செய்யவும்... நன்றி... */

ப்ச்.. எங்க விஜய்.. இது வரை எழுதினவங்களுக்கே இன்னும் அமவுண்ட் செட்டில் பண்ணல.



/* சித்ரா said...
:-0 நடத்துங்க... நடத்துங்க...நானும் ஒரு வாசகர் கடிதம் எழுதலாம்ன்னு இருக்கேன்,( நீங்க நட்சத்திரமாகும்போது!!). */

ம்ம்கும். போங்க சித்ரா.. நான் நட்சத்திரமாகுறதுக்குள்ள விடிஞ்சு வெள்ளைக் காக்கா கூப்பிட்டிரும். அதுக்குள்ள தமிழ்மணமே அழிஞ்சுரும்.



/* வெட்டிப்பயல் said...
கலக்கல் :) */

மிகவும் நன்றி பாலாஜி தவறாக எடுத்துக் கொள்ளாததற்கும், பாராட்டுக்கும்..

Venkatesh Kumaravel said...

:))))
ROTFL

♫சோம்பேறி♫ said...

:))))) ரொம்ப நன்றிங்க வெங்கிராஜா..

Deepa said...

:-)))

// எதிர்வினை இல்ல லோகு. தன்வினை கொஞ்ச நேரம் கழிச்சு என்னையே டுமீல் டுமீல்னு சுடும் பாருங்க..//

Wise words!

♫சோம்பேறி♫ said...

மிகவும் நன்றி தீபா.. அடி பலமோ! :-)

வால்பையன் said...

பாருவை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்!

வெட்டிப்பயல் said...

///* வெட்டிப்பயல் said...
கலக்கல் :) */

மிகவும் நன்றி பாலாஜி தவறாக எடுத்துக் கொள்ளாததற்கும், பாராட்டுக்கும்..//

ஓ.. நோ

இதுல தவறாக எடுத்துக்கறதுக்கு என்ன இருக்கு? ஜாலியா ஓட்டிக்கறதுல தப்பு இல்லை :)

நாலு பேரை சிரிக்க வைக்கணும்னா எதுவுமே தப்பில்லை ;)

விக்னேஷ்வரி said...

வர வர லந்து அதிகமாயிட்டே போகுது.

♫சோம்பேறி♫ said...

/* வால்பையன் said...
பாருவை கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்! */

ஏன் வால் இப்படி பொசுக்குனு கோவிச்சுக்கிறீங்க? உங்க பாரு மட்டும் தான் வாசகர் கடிதம் போடுறாரா? சுய மோஹன் போடுறதில்லையா?

பை த வே, உங்களுக்கு வந்த வாசகர் கடிதத்தை எப்போ வால் பிரசுரிப்பீங்க? எதிர்பதிவு போட கொலை வெறி ஆவல்.

♫சோம்பேறி♫ said...

/* வெட்டிப்பயல் said...
இதுல தவறாக எடுத்துக்கறதுக்கு என்ன இருக்கு? ஜாலியா ஓட்டிக்கறதுல தப்பு இல்லை :)
நாலு பேரை சிரிக்க வைக்கணும்னா எதுவுமே தப்பில்லை ;) */

ஹாஆஆஆ.. (நாயகன் மீஜிக் இன் பேக்ரவுண்ட்) ரொம்ப நன்றி பாலாஜி.. எல்லாரும் ஜாலியா எடுத்துக்குறதில்லயே.


/* விக்னேஷ்வரி said...
வர வர லந்து அதிகமாயிட்டே போகுது. */

ஹி ஹி.. குறைச்சுக்குவோம்..

வால்பையன் said...

//உங்களுக்கு வந்த வாசகர் கடிதத்தை எப்போ வால் பிரசுரிப்பீங்க? எதிர்பதிவு போட கொலை வெறி ஆவல். //

இன்னும் படிக்கலையா!, இந்த லிங்க கிளிக் பண்ணுங்க!

♫சோம்பேறி♫ said...

படிச்சு பாத்தேன் வால். இருந்தாலும், யூ ஆர் டூ பேட். நான் திங்க் பண்ணும் முன்னாடியே சுட்டிருக்கீங்க..

rapp said...

சோம்பேறி, இந்தப் பதிவை நான் கொஞ்சம் காப்பி அடிச்சு ஒரு பதிவை போடலாமா? நீங்க பர்மிஷன் தருவீங்களா?

வால்பையன் said...

இந்தாங்க அடுத்தது!

♫சோம்பேறி♫ said...

ராப்ப்.. உங்களுக்கு ஒரு கமெண்ட் போடனும் பெர்மிஷன் தருவீங்களா please?

rapp said...

avvvvvvvvvvv, appo naan copy adichukkavaa, vendaamaa?

♫சோம்பேறி♫ said...

தாராளமா அடிச்சுக்கோங்க ராப். இதுக்குப் போய் சின்னப்புள்ளத் தனமா அழுதுகிட்டு!!

Post a Comment

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket