மஹிந்தா ராஜபக்ஷேயிடன் ஈழ சிறுவன் கேட்ட கேள்விகள்

Thursday, 5 March 2009

ராஜபக்ஷே இலங்கையிலுள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுகிறார்.

மஹிந்தா: யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் நிரஞ்சன்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
மஹிந்தா: உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் இடைவேளைக்குப் பிறகு சந்திக்கலாம்.

(இடைவேளைக்குப் பிறகு)

மஹிந்தா: எங்கே நிறுத்தினோம்? ஆம். யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் மைக்கேல்: என்னிடம் நான்கு கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
4) நிரஞ்சன் எங்கே?

வழக்கறிஞர், அமைச்சர் என்று தனக்கு முன்னால் பல வாய்ப்புகள் இருந்தாலும், அதில் எதையும் தேர்ந்தெடுக்காமல் பத்திரிக்கையாளராகவே இருந்து, அதற்காகவே தனது இன்னுயிரை நீத்த 'சண்டே லீட'ரின் முதன்மை ஆசிரியர் இறைதிரு. லசந்த விக்ரமதுங்கா அவ்ர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

பின்குறிப்பு அல்லது கொஞ்சம் லேட்டான பிற்சேர்கை: இது ஜார்ஜ் புஷ் பற்றி எனக்கு கைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் ஆல்ட்ரேஷன்.

மருத்துவர் ராமதாஸிடம் சில சந்தேகங்கள்

Wednesday, 4 March 2009

முன்குறிப்பு: இப்பதிவின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது இல்லை. மீறி காயம் பட்டு விட்டால் மருத்துவர். ராமதாஸிடமே போய் ப்ளாஸ்த்திரி போட்டுக் கொள்ளவும்.

1) வணக்கம் ஐயா.. கருனாநிதி என்ன தவறு செய்தாலும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பீர்களாமே.. உளியின் ஓசையை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை?

2) உங்க கூட்டாளி கருனாநிதி கவித எழுதுவதால் கலைஞர் என்று போட்டுக் கொள்கிறாரே.. பதிவு எழுவதும் ஒரு கலை தானே. நானும் கலைஞர் போட்டுக்கலாமா? அவர் அதிமுகவிற்கு கட்சி மாறப் போவதாக வதந்திகள் கிளம்புதே.. உண்மையா?

3) நாளை பின்ன நீங்க கட்சி மாறி புரட்சித் தலைவி ஜெயலலிதாவைப் பார்த்தால், இதைக் கொஞ்சம் கேட்டு சொல்லிடுங்க..

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு என்பதால் புரட்சி தலைவி என்று போட்டுக் கொள்கிறாரே, நாளை நானும் புரட்சி தளபதி ஜே.கே.ரித்தீஷ் கையில் காலில் விழுந்து அவரது வாரிசு ஆகிவிட்டால், என்ன அடை மொழி போட்டுக் கொள்ளலாம்?

4) சினிமாவிலிருந்து முதல்வராக முயற்சிக்கும் விஜய காந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அடைமொழி வைத்துக் கொள்ளும் போது, அமெரிக்க ஜனாதிபதியாக முயற்சிக்கும் நடிகர் கார்த்திக் சிவப்பு ஒபாமா என்றும், பிரதமராக முயலும் எங்க ஊர் MLA மாநிற இந்திரா காந்தி என்று அடைமொழி வச்சிக்கலாங்களா?

5) ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியன்னு சொல்றாங்க..

இது வரை கத்தியின்றி, ரத்தமின்றி லட்சம் பேருக்கு மேல் சாவடித்த இயக்குனர் பேரரசுக்கு ஏன் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்க வில்லை? பொறாமை தானே?

இதையெல்லாம் ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால்.. உங்களைப் போன்ற திறமையான மருத்துவர்கள் அரசியலுக்குப் போய் விட்டால் தமிழ் நாட்டை யார் காப்பாற்றுவது? என்னை யார் காப்பாற்றுவது?

விஷயம் என்னன்னா ரெண்டு வாரமா நகக்கண்ணில் ஊசியால் குத்துவது போல தாங்க முடியாத வலி. அலோபதி, ஹோமியோபதி எல்லா பதியும் பாத்தாச்சு. அக்குபங்சர், டிங்சர் எல்லாம் பண்ணியாச்சு. நாரப் பயபுள்ளைக ரத்தப் பரிசோதனை செய்து விட்டு, வலியை அடக்குவதற்க்கு broofanனையும், காரணமே இல்லாமல் Paracetamolலையும் குடுத்துட்டு 500 ரூபாய் புடுங்கிக்கிட்டாய்ங்க. மேற்கொண்டு ஸ்கேன் வேற எடுக்கனும்னு சொல்லி பீதியைக் கெளப்புகிறாய்ங்க..

நேச்சுரொபதி டாக்டர்கள் ப்ரிஸ்க்ரிப்ஷனில் ஆப்பிள், ஆரஞ்சுனு எழுதிக் குடுத்து கடியைக் கிளப்புகிறாய்ங்க..

மாத்ருபூதத்திற்கு அடுத்து எனக்குத் தெரிந்த பிரபலமான மருத்துவர் நீங்கள் தான் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்களும் எங்க ஊர் மருத்துவர்கள் போல MBBS படிக்கும் போது 'நகக்கண் வலியை குணப்படுத்துவது எப்படி?' என்ற கேள்வியை சாய்ஸில் விட்டிருந்தால் நான் டாக்டர். விஜயிடம் தான் போய் கேட்க வேண்டும். அவருக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.

முன்குறிப்பு அல்லது க்ளைமாக்ஸ்

Monday, 2 March 2009

முன்குறிப்பு அல்லது க்ளைமாக்ஸ்: இந்தப் பதிவின் நோக்கம், 'அம்மா தாயே ஓட்டு போடுங்க அல்ல'. 'வருகைக்கு நன்றி'.

இது என்னுடைய பத்தாவது பதிவு. (அட! கை தட்டுறத நிறுத்துங்க மக்கா.. பேசி முடிச்சுக்கிறேன்.) எந்த பிரபலமும் எழுத முன் வராததால், நானே எழுதுகிறேன். எனது 25வது பதிவை ஒரு வலையுலக பிரபலம் தான் எழுதுவார் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வளவு நாளாக தமிழ்மணத்தை tamilmanam.com என்ற முகவரியில் தினமும் தேடி, காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் எப்போ திறப்பார்கள் என்று ஏங்கும் குடிமகனைப் போல பார்த்துக் கொண்டிருந்தேன். அதோடு அப்பிரானியாக "கடைய எப்பண்ணே தெறப்பீக?" என்று ஒரு மின்னஞ்சல் வேறு.. தமிலிஷ்.காமில் பதிவு செய்து, என் இரண்டாவது படைப்பை அனுப்பி விட்டு வழக்கம் போல், கடவுச் சொல்லை(password) மறந்து விட்டேன். get new password வேலை செய்யாததால், அதையும் விட்டு விட்டேன். இருந்தாலும் அளவில்லா கடமையுணர்சியுடன் பதிவெழுதுவதை தொடர்ந்து கொண்டு தான் இருந்தேன். Elephant one time. Cat one time.

இரண்டு நாட்களுக்கு முன்பு தற்செயலாக ஒரு பதிவரின் சைட் பாரில்(sight bar அல்ல side bar) க்ளிக்கிய பிறகு தான் தமிழ்மணத்தின் உன்மையான முகவரியே தெரிந்தது. நேரத்தை வீணாக்காமல் உடனே பதிவு செய்து விட்டு, மறுமொழி மட்டுறுத்தும் பக்கத்தை திறந்து வைத்துக் காத்திருந்தேன். ஈ காக்கா கூட வரல.

நேற்றும் கமெண்ட் எதுவும் வரவில்லை என்றதும் 'ஏன்டா எழுத வேண்டும்' என்றாகி விட்டது. ஏதோ தன்னடக்கத்துக்காக நான் ஒரு பேக்கு, இது ஒரு மீமீ வலைப் பூ என்று சொன்னால், அதை ஒப்புதல் வாக்கு மூலமாக எடுத்துக்கொண்டு யாரும் கடைப்பக்கமே வரமாட்றாங்களே என்று கடுப்பாகி விட்டது.

ஏற்கனவே Hitstats, Feed jet போன்ற வசதிகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும், அது ஒன்னாப்பில் வாங்கிய பூஜ்யத்தையே காட்டி கேவலப்படுத்தும் என்பதால் தவிர்த்து வந்தேன். சரி, ஃபீட் ஜெட்டை முயற்சி செய்து பார்க்கலாம் என்று அமைத்து விட்டு பத்து நிமிடம் கழித்து பார்த்தால்.. அடங்கொன்னியா.. நான்கு பேர் தமிழ்மணத்திலிருந்து.. (அதுவும் முந்தின நாள் எழுதிய பதிவிற்கு)

“கங்ராட்ஸ் நீங்க எள்ளுத் தாத்தா ஆக போறீங்க”... என்ற வார்த்தைகளை கேட்ட பிறகு கிட்டத்தட்ட ஏழு,எட்டு மாதங்கள் அந்த வார்த்தைகள் கொடுக்கும் ஒரு இனம் புரியா நிலையின் ஊடே வேறு பல வேலைகளுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருந்தாலும்... ‘வீல்’என்ற அழுகையின் ஊடே மொட்டாய் மலராய்..ரத்தப் பாதங்கள்,பஞ்சுக் கைகள் என அந்த மலர்மழலைக் கொத்தாய் கைகளில் பார்க்கும் பொழுது ஏற்படும் உன்னத நிலையை வார்த்தைகளாய் மொழிபெயர்க்கத் தெரியாத ஒரு மெளன யவ்வணமான நிலைக்கு நிகராய்(நன்றி : நர்சிம்) எல்லாம் உணராவிட்டாலும், மிகவும் சந்தோஷமாகவே இருந்தது.

உடனே Gmailலில் ஒரு புது account திறந்து, அந்த அக்கவுண்டுடன் தமிலிஷில் எனது பதிவை சமர்ப்பித்து விட்டு, Hitstatடையும் பதிவில் இணைத்து விட்டு பார்த்தால், அந்த ஐந்து நிமிட இடைவெளியில் 28 ஹிட்டுகள். ஏழு பேர் ஆன்லைன். இருப்பு கொள்ளவில்லை எனக்கு. என் அம்மா பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதை என் தாத்தா, தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூப்பிட்டு செவிட்டிலடித்து சொன்னாராம். அவர் உயிரோடு இல்லையே என்று வருத்தப்பட்டேன்.
Blog Widget by LinkWithin
 
சோம்பேறி. Design by Pocket